சனி, 15 ஜூன், 2013

ரொம்ப நல்லவர்னு நம்பினோமே? பேச்சு மாறி 2 C கேக்கலாமா ?

பெயர் வைக்காத படத்தில் நடிக்கும் 'பிரியாணி' நடிகரை ஊரே நல்லவர்னு சொல்லுது. தயாரிப்பாளரும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாரா என்றால்... நஹி! காரணம் சம்பள விஷயத்தில் நடிகரின் அணுகுமுறை அப்படி. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும் என்றுதான் சொன்னாராம். ஷூட்டிங் முடிந்ததும் சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்றதும், மகா சந்தோஷத்துடன் ஊரெல்லாம் நடிகரின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார் தயாரிப்பு. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் கிட்டத்தட்ட பாதித் தொகையை கேட்டு வாங்கிவிட்டாராம் நடிகர். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே மீதித் தொகையையும் கேட்டு வாங்கியிருக்கிறார். இப்போது சம்பள பாக்கி எதுவும் இல்லை. இத்தனைக்கும் படப்பிடிப்பு இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் கடும் போட்டி போடுகிறார்களாம். பெரிய விலைக்கு பேசி வைத்து அட்வான்ஸ் பெற்றுள்ளாராம் தயாரிப்பாளர். சம்பள விஷயத்தில் ஹீரோ செய்த டார்ச்சரிலிருந்து இப்போதுதான் நிம்மதி என்று பெருமூச்சு விட்டவரை, அப்படி இருக்க விடவில்லை ஹீரோ. படத்தை நல்ல விலைக்குத்தானே பேசியிருக்கிறீர்கள்... அப்படீன்னா..இன்னொரு 2 சியை எடுத்து வைங்க. இல்லன்னா ஏதாவது ஒரு ரைட்ஸை கொடுங்க, என்கிறாராம். டென்ஷனில் இருக்கிறார் தயாரிப்பாளர்!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: