செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சரிதான் போய்யா ! நயன்தாரா கவர்ச்யில் பின்னி எடுத்தார்

பிரபுதேவா உடன் காதல் முறிவுக்கு பிறகு அதிரடி கிளாமர் வேடங்களில்
நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் அவர் ‘கிரீகு வீருடு‘ என்ற படத்தில் மிக தாராளமாகவே நடிக்கிறார். படம் தமிழிலும் வருகிறது. ‘லவ் ஸ்டோரி’ என பெயரிடப்பட்டுள்ளது.
காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா நடித்து தமிழில் திரைக்கு வரும் படம் இது. தமிழ், தெலுங்கில் மே 3-ம் தேதி ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நாகார்ஜுனா படங்கள் எல்லாமே வெவ்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. இந்தப் படமும் அப்படித்தான். ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம்.
இப்போதுதான் வருகிறது.
ஆனால், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக, “சரிதான் போய்யா” என்று கவர்ச்சியில் பின்னி இருக்கிறாராம் நயன்தாரா. அத்துடன் போனசாக, இந்தப் படத்தில் ஒரு முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. அதில் நாகார்ஜுனாவுடன் நடனம் ஆடும் பாடல் காட்சி ஒன்றில் தனது கையில் பிரபு என்ற பெயரை நயன்தாரா பச்சை குத்தி இருப்பது தெளிவாக தெரியும் வகையில் பிரின்ட் ஆகி இருந்தது
பிரபுதேவாவை காதலித்தபோது, நயன்தாரா அவரது பெயரை பச்சை குத்தி இருந்தார். காதல் முறிந்ததும் அவர் பெயரை நீக்க முடிவு செய்தார். ஆனால் அதை நீக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டார்.
போஸ்டர் ரிலீஸ் ஆன பின்னர்தான் பச்சை விவகாரத்தை கவனித்த நயன்தாரா, அதை மறைக்க முடிந்தால் நல்லது என்று சொல்லியிருக்கிறாராம்.
படக் குழுவினரிடம், “படத்தில் இந்த காட்சியில் பச்சை குத்தியது தெளிவாக தெரியுமா” என்று கேட்டபோது, “படத்தில் கிராபிக்ஸ் பணிகளும் நடந்துள்ளன. பச்சை குத்தி இருக்கும் காட்சி தெரியுமா, தெரியாதா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றனர் பட குழுவினர்.
அட.. இதற்காகவே படம் பார்க்க வேண்டுமா? அந்தம்மாவே “சரிதான் போய்யா” என்று சொல்லி விட்டார். இனி பச்சை தெரிந்தாலென்ன? பச்சையாக தெரிந்தாலென்ன!

கருத்துகள் இல்லை: