ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழகத்தை தாண்டாத ஈழ பிரச்னை அடுத்த மங்காத்தா வரை தொடரும்

வாசகர் 1:  ஈழ விடுதலைக்காக போராடிய மற்ற அற வழி தலைவர்களையெல்லாம் கொன்றொழித்து விட்டு, பின்பு இறுதி போரின் பொது அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி அதனால் அவர்களையும் கொலைக்கு கொடுத்து விட்டு, இறுதியின் தாங்களும் மாண்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை தலையில் தூக்கி வைத்து நடக்கின்ற போராட்டத்தை வரலாறு தெரிந்த ஒருவன் கூட ஆதரிக்க மாட்டான். போராடும் இந்த மாணவர்களிடம் சூர்யாவின் குழைந்தையின் பெயரை கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள். ஆனால் அமிர்தலிங்கம் யார் என்று கேட்டு பாருங்கள், ஒருவனுக்கும் தெரியாது. அது தான் உண்மை. இந்த போராட்டங்கள் மற்றவர்களின் பார்வையில் ஒரு தெளிவற்றதாகவே படுகிறது. 
வாசகர் 2   தமிழ் உணர்வாளர்களுக்கு ஒரு கேள்வி, தமிழக மாணவர்களை போராட்டம் வன்முறை என்று தூண்டி விடுகிர்களே அவர்களின் வாழ்கையை பற்றி கொஞ்சமாவுது சிந்தித்து பார்த்தீர்களா ? அந்த மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வுளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் இந்த மாணவர்களை நம்பி தான் அவர்கள் வாழ்கையே உள்ளது, இந்த நிலையில் இந்த மாணவர்களை போராட்டம் வன்முறை என்று இழுத்து விட நீங்கள் யார் ? அவர்களின் வாழ்வை அழிக்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தாது ? இப்படி தான் இலங்கையில் உள்ள ஒரு தலைமுறை மாணவனை போராட்டம் என்று சொல்லி அந்த சிறுவர்களை வாழ வேண்டிய வயதில் வாழ விடாது அவர்களின் உரிமையை பறித்து போராளியாக்கி அவனை நாசம் செய்தீர்கள், எத்தனை எத்தனை இந்த முகம் தெரியாத சிறுவர்கள் யுத்தத்தில் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள், இந்த பலிகள் உங்களுக்கு போதாதா ? இலங்கையை விட்டுவிட்டு இப்போது இந்தியா வந்து ஏன் எங்களை பலி கேட்கிறிர்கள் ? இந்திய தமிழனையாவுது வாழவிடுங்கள் ப்ளீஸ்
வாசகர் 3 பிரபாகரனால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதை விட அதிகம். தீவிர வாதம் எங்கிருந்தாலும் அதை ஒடுக்க வேண்டியது, ஒழிக்கவேண்டியது அந்த நாட்டின் நாட்டு அரசின் கடமை. அந்த வகையில் பிரபாகரனை ஒழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது பிரபாகரனால் கேடயமாக பயன் படுத்தப்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சில அது மீறல்கள் இருந்திருக்கலாம். ( நாம் கூட இங்கே வந்த புத்த பிட்சுவை எதற்கு அடித்து விரட்டினோம்? உங்களை பார்க்க வந்த தங்க பாலுவை எதற்கு விரட்டினீர்கள்? ஹிந்தியை திணிக்க கூடாது என்று உங்களுக்கு எப்படி சொல்ல உரிமை இருந்ததோ அதே போல ஹிந்தியை எனக்கு சொல்லிக்கொடு என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அடியோடு ஹிந்தி மொழியை மாநில கல்வி திட்டத்தில் இருந்து அகற்றும் உரிமையை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள்? இது மனித உரிமை மீறல் இல்லையா? ). அயல் நாட்டு கொள்கை அர்த்தமற்றது என்று சொல்லும் நீங்கள் நம் நாட்டில் நடக்கும் வரம்பு மீறல்கள் பற்றி - இங்கு முற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மனித உரிமை மீறல்கள் இல்லையா? ஒரு பிராமணன் குடுமி வைத்துக்கொண்டால் அவனது குடுமியை அறுக்க சொன்ன உங்கள் முன்னோடிகளுக்கு ஒரு முஸ்லிம் பர்தா போட்டால் அதை உருவி ஏறி என்று சொல்ல ஏன் திராணி இல்லாமல் போனது? எவன் பயந்து ஒதுங்கிகின்றானோ அவனை விரட்டுவது இந்த மொழி வெறி நாடக நடிகர்களுக்கு சவுகர்யமான காரியம். இவற்றை எல்லாம் ஏன் இங்கு சொல்ல விரும்புகின்றேன் என்றால் தமிழர்கள் மீது மற்றவர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட, இங்கு நடக்கும் போராட்டங்களை கூத்துக்களாக ( உண்மையில் இவை கூத்துகள் தான் என்பது வேறு விஷயம் ) அவர்கள் பார்ப்பதற்கு காரணம் உங்களை போன்ற மாணவர்கள் தவறானவர்களால் தவறான பாதைக்கு உணர்ச்சி வசப்படுத்தும் பேச்சுக்களால் இழுத்து செல்லப்படுவதே. நாம் இந்தியனாக இருக்கும் வரை நமக்கு உலகளவில் மதிப்பு அதிகம். தமிழனாக உங்களை தனிமைப்படுத்திகொண்டு காட்ட விரும்பினால் வெளி உலகம் உங்களை எலி அளவு கூட மதிக்காது

கருத்துகள் இல்லை: