வெள்ளி, 27 ஜனவரி, 2012

சசிகலா வீட்டில் போலீசார் சோதனை

வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ளவரசியின் மருமகன் ராவணன் கைது
கோவையில் குடியிருந்தபடி, அ.தி.மு.க.,வின் உட்கட்சி மற்றும் அரசு நிர்வாகங்களில் தலையிட்டு வந்த சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் அண்ணன், நடராஜனின் சகோதரி
அதிமுகவில் இருந்து நீக்கம்

.தி.மு.க.,வில் இருந்து சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், நடராஜனின் சகோதரி வைஜெயந்தி மாலா உட்பட, நான்கு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தான லட்சுமி, வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.



இவர்களிடம் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது’’என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: