சனி, 1 மே, 2010

மனோரமா திருப்பதி: திருமலையில் நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார்

பதிவு செய்தவர்: public
பதிவு செய்தது: 01 May 2010 6:02 pm
மனோரமா உங்க சில்லறை தனத்தை ஆந்திராவில் காட்டிட்டிங்கிலே. அவுங்க நமக்கு தண்ணி தரமாட்டேன்னு சொன்னதைவிட உங்களுக்கு ரூம் தரமாட்டேன்னு சொன்னது பெரிய விஷயமா ? ஆயிரம் ௦ படத்திற்கு மேல் நடித்த எந்த மேதாவியும் இப்படி மானத்தை வாங்கிருக்க மாட்டார்கள்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை மனோரமா நேற்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் கையில் அணிந்திருந்த வளையல், மோதிரம் போன்ற சில நகைகளையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் சிறுமியாக இருந்த போது இங்கு வந்து முடி காணிக்கை செலுத்துவதாக என் அம்மா வேண்டுதல் வைத்திருந்தார். இது வரை அதற்கு நேரம் வரவில்லை. இப்போதுதான் வந்து முடி காணிக்கை செலுத்தி இருக்கிறேன். சிறிது நேரத்துக்கு முன் எவ்வளவு அழகாக இருந்த நான் இப்போது எப்படி மாறி இருக்கிறேன் பாருங்கள்..." என்றார்.

சுடிதார் அணிந்து வந்திருந்த மனோரமா, சிறப்பு விருந்தினர்களுக்கான விடுதியில் அறை கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்படவில்லை.

உடனே இதைக் கண்டித்து, நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 'ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்த எனக்கு விருந்தினர் விடுதியில் அறை கொடுக்காதது ஏன்?' என்று கேட்டார். ஆனாலும் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை: