ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

வீதியால் சென்ற பெண்ணிடம் தகாதமுறையில் நடக்கமுற்பட்ட இளைஞருக்கு 03மாதகால சிறைத்தண்டனை விதித்து

வீதியால் சென்ற பெண்ணிடம் தகாதமுறையில் நடக்கமுற்பட்ட இளைஞருக்கு 03மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். ஏழாலைப் பிரதேசத்தில் வீதியால் தனிமையில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து, தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாதமுறையில் நடக்க முற்பட்டதாகக்கூறி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி 03மாதகால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

0 Kommentare:

கருத்துரையிடுக

கருத்துகள் இல்லை: