திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கட்டை பஞ்சாயத்து சுப இளவரசன் கைது கார் கடத்தல் கண்டுபிடிப்பு


தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசனை கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் சுபா இளவரசன். தமிழ்நாடு விடுதலைப்படை எனப்படும் தமிழ் தீவிரவாத அமைப்பின் தலைவராக விளங்கிய சுபா இளவரசன், கடந்த கால அ.தி.மு.க., அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சில ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி வெளியே வந்த சுபா இளவரசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் நீதிக்கட்சி எனப்படும் புதிய அரசியல் கட்சியை துவக்கி செயல்பட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஓசூரில் காணாமல் போன ஒரு கார் சென்னையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கியது.

அந்த கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட காரை ஓசூரிலிருந்து சுபா இளவரசன் ஆட்கள் தான் கடத்தி வந்தனர் என தெரியவந்தது.
இதையடுத்து மாலை ஜெயங்கொண்டத்துக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார், ஜெயங்கொண்டம் போலீஸ் டி.எஸ்.பி., செல்லமுத்து உள்ளிட்ட போலீசார் உதவியுடன், ஜெயங்கொண்டம் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள சுபா இளவரசன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த சுபா இளவரசனை கைது செய்து கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றனர்.  

கருத்துகள் இல்லை: