tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: "தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்த அவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
இதை சுராஜ் தடுத்த நிலையில் அந்தச் சிறார்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
செவ்வாய், 30 டிசம்பர், 2025
வட இந்திய இளைஞரை வாளால் கொடூரமாக வெட்டிய தமிழக இளைஞர்கள்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்
tamilmirror.lk : கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10க்கும் மேற்பட்ட முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் குறிப்பிட்டார்.
திங்கள், 29 டிசம்பர், 2025
எல்லை மீறும் காங்கிரஸ் தலைகள்? கோபப்பட்ட ஸ்டாலின்? அதே தவறை செய்யும் ராகுல்?
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து இருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போல செயல்பட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கே காரணமாக மாறி உள்ளனர்.
இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை - ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்!
ceylonmirror.net :ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்! – அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை.
“ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அநுர அரசு செயற்பட்டால் இந்த அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். பொலிஸார் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றனர்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது.
திமுக அரசை விமர்சிப்பதா? காங். பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு
மின்னம்பலம் - Mathi : தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
ஞாயிறு, 28 டிசம்பர், 2025
20 இலட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்! ஜனவரி 5-ஆம் தேதி தொடக்கம்!
நக்கீரன் : கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த புள்ளி கோரியது.
அதாவது 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது.
அதில், ‘கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்பானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து டெல், ஏசர், லெனோவா, ஹச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டின.
சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள் .. அமெரிக்காவை விட அதிக அளவில்
tamil.goodreturns.in -Prasanna Venkatesh : அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட (Deportation) விஷயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது,
குறிப்பாக விமானத்தில் இந்தியர்களை கொண்டு வந்த விதம் குறித்து கடும் விமர்சனம் எதிர்கொண்டது.
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி 'டான்கி ரூட்' (Donkey route) போன்ற ஆபத்தான வழிகளில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான்.
இன்னும் சிலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது (Visa overstay) மற்றும் மாணவர் விசா விதிகளுக்கு மாறாக பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றத்திற்காகவும் நாடு கடத்தப்பட்டனர்.
திமுக அதிமுக பாஜகவோடு ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் பிரேமலதா கட்சி
மின்னம்பலம் -Mathi : “2026 தேர்தல் சுவரு இன்னும் எத்தனை விசித்திரங்களைத் தருமோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக, அதிமுகன்னு ரெண்டு பக்கமும் தேமுதிக விடாம பேசிகிட்டுதான் இருக்கு..
இந்த களேபரத்துல விஜயகாந்தின் 2-வது வருஷ நினைவு நாளை குருபூஜையா நடத்துது தேமுதிக.. இதுக்கு சிஎம் ஸ்டாலின், இபிஎஸ்-ன்னு எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நேரில் போய் சுதீஷ் இன்விடேஷன் கொடுத்துகிட்டு இருக்காரு..
இதுக்கு நடுவுலதான், “தேசிய ஜனநாயக கூட்டணியில எங்களுக்கு 6 சீட் மட்டுமே ஒதுக்க முடியும்னு தகவலை வெளியிட்ட கட்சி அழிந்தே போகும்னு” பிரேமலதா சாபம் கொடுக்க பரபரப்பாகிடுச்சு.
பொறுய்யா… தேமுதிக யாரோடதான் கூட்டணி வைக்குமாம்? பிரேமலதா ஏன் சாபம் விட்டாங்களாம்?
சனி, 27 டிசம்பர், 2025
அமெரிக்க வலதுசாரி பாலக்காட்டு விவேக் ராமசாமி யார்
Mo Jo : Loose lips sink ships... நமக்கெல்லாம் "விவேக் ராமசாமி" பற்றி தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் நெடுங்காலம் வாழும் பாலக்காடு தமிழ் குடும்பத்தில் பிறந்த அமெரிக்க சங்கி. அமெரிக்க அரசியலில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் வலதுசாரிய கொள்கைகளை போற்றும் ஒருவர். பெரிய ஆச்சரியம் இல்லை.
நான் பார்க்கும் வரையில், அரசியலில் ஈடுபாடு கொள்ளும் அமெரிக்காவில் பிறந்த / அல்லது சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழும் முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுப்பது வலது சாரிய கட்சியாகவே இருக்கிறது. Bobby Jindal, Nikky Haley போன்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வலதுசாரிகளை ஆதரிப்பவர்களுக்கு பிறந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.
முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா கைதும் அதன் பின்னணியும்
Suhan Kanagasabai : சென்னை சூளைமேடு கொலைவழக்கில் தான் செய்யாத கொலையை தார்மீகப் பொறுப்பேற்று இன்றும் அவ் வழக்கில் விசாரணைக்குச் சென்றுகொண்டிருக்கும் தோழர் டக்ளஸ் அவர்களின் பண்புகளில் ஒன்று தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்காது கடைசிவரை காப்பாற்றுவது .
25 வருடத்திற்கு முற்பட்ட ஒரு கைத்துப்பாக்கி , 2001 இல் .
ஒருசிலர் ஈ பி டி பி இலிருந்து பணம் ,துப்பாக்கி இவற்றோடு தலைமறைவாகியிருக்கிறார்கள்.
புலிகளால் வேட்டையாடப்பட்ட மிகக் கொடுமையான காலக்கட்டம் இறுதி 10 ஆண்டுகள்.
இயக்கங்களிலிருந்து துப்பாக்கிகளுடன் தப்பியோடியோர் அந்தத் துப்பாக்கிகளை விற்றே ஏதும் செய்யலாம் என்ற நிலை செய்திகளில் கூட இருந்தது.
இராணுவத்திலிருந்து ஆயுதத்துடன் தப்பியோடியோர் துப்பாக்கிகளை விற்று பிடிபட்டு மன்னிப்பளிக்கப்பட்ட செய்திகள் ஏராளம் உண்டு.
இந்த மதுகந்த விவகாரமும் இப்படித் தப்பியோடிய ஒருவரால் ஏற்பட்ட சிக்கலாகவே இருக்க வாய்ப்பு.
காங்கிரஸ் திமுக கூட்டணி தள்ளாடுதே .. ஸ்டாலின் திருப்பி அடிப்பாரா?
மின்னம்பலம் : ஸ்டாலினிடம் ப.சி. ‘பாஸ்’ செய்த ’அந்த’ மெசேஜ் என்ன? சீண்டும் ராகுல் ‘கோஷ்டி’
திமுக கூட்டணியில டிசைன் டிசைனா குடைச்சல் கொடுக்கிற காங்கிரஸ் பத்திதான் சொல்றேன்யா..
ஐவர் குழுன்னு ஒன்னை அமைச்சு சிஎம் ஸ்டாலினுடன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்துச்சு.. கூட்டணியே கன்பார்ம் ஆகிடுச்சுன்னுதான் அறிவாலய வாசல்ல நின்னுகிட்டு செல்வபெருந்தகை பேட்டியும் கொடுத்தாரு..
அதுல என்னய்யா இப்ப சந்தேகம்?
திமுகதான் கூட்டணி கன்ஃபார்ம்னு நினைக்குது.. ஆனா, காங்கிரஸோ விஜய் கட்சிகிட்ட ரொம்பவே மும்முரமா பேசிகிட்டே இருக்கு..
இதுல சிஎம் ஸ்டாலின் கிட்ட ஒன் டூ ஒன் பேசுன மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்த பேட்டி திமுகவை ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு.. அந்த பேட்டியில, ‘கூட்டணியை பத்தியே ஸ்டாலின் இன்னும் எதுவும் சொல்லலை. டிசம்பர் 15-க்குள் சொல்லுங்கன்னு சொன்னோம்.. இன்னும் பதிலே வரலை.. எங்களுக்கு ஆட்சியிலயும் பங்கு வேணும்”எனு பல்டி அடிச்சு பேசியிருந்ததுதான் சிஎம் ஸ்டாலின் உட்பட திமுக சீனியர்களை ரொம்ப கோபப்படுத்தியிருச்சு..
95 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு ஒருவாரம் - திமுகவின் எதிர்வினை?
Sundara Cholan : 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகி விட்டது.
அதற்கு எதிராக திமுக எவ்வித எதிர்வினையும் செய்ததாகத் தெரியவில்லை.
ஒரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ கிடையாது.
அநியாயமாகப் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற அவர்களை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்க உதவி செய்வது போன்றவற்றை இந்நேரம் திமுக முன்னெடுத்து இருக்க வேண்டாமா? அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
அவசரமாக அள்ளித் தெளித்த கோலம் என்கிற கதையாக தயாரித்த வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தை அணுகலாம். பயனிருக்குமா என்பது வேறு விஷயம்.
என்ன தான் திட்டம் வைத்திருக்கிறது திமுக? பாஜக திட்டம் பலிக்காது என்று வசனம் மட்டும் போதாது.
வெள்ளி, 26 டிசம்பர், 2025
மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கு மேற்கில் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுமா?
இலங்கை வித்வா பெருமழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மலையக மக்கள் இனியும் அங்கு வாழ முடியுமா?
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . பல கிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டது. பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டனர்.
இவர்களில் பலர் நாட்டின் பெரும் சம தரைப்பகுதியான வடக்கு கிழக்கு மேற்கு பகுதிகளில் குடியேற கூடிய வாய்பினையே எதிர்பார்த்து உள்ளனர்.
மலையக மக்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் மலையக அரசியல்வாதிகள் இந்த கருத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்த மக்கள் வேறு இடங்களுக்கு போய்விட்டால் இவர்களை வைத்து அரசியல் செய்யவோருக்கு வில்லங்கம்தான்.
இது பற்றி ஒரு காணொளி பேட்டியை தேசம் நெட் காணொளி வெளியிட்டது!
இதில் பிரபல மலையக கவிஞர் எஸ்தர் நாதனியால் கலந்து கொண்டார்.
சட்டமன்ற தேர்தலில் கனிமொழி போட்டி? எந்த தொகுதி? பரபரக்கும் திமுக!
minnambalam :திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம்னு ஒரு தகவல் அடிபடுதுய்யா.. இதை பத்தி திமுக வட்டாரங்களில் கேட்டப்ப, “2007-ல் கனிமொழி முதல் முறையா ராஜ்யசபா எம்.பி.யானாங்க..
அப்ப காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்.. அவங்க மத்திய அமைச்சராகல.. 2-வது முறையா 2013-ல் ராஜ்யசபா எம்.பியானாங்க.. ஆனால் 2014-ல் இருந்து மத்தியில பாஜக கூட்டணி ஆட்சிதான்..
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்-
இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், இந்த கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வியாழன், 25 டிசம்பர், 2025
கோவை நட்சத்திர ஹோட்டலில் மோதல் – பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : கோவை பீளமேடு பகுதியில் ஹோட்டல் முன்பு , பார்ட்டி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முன்விரோதம் காரணமாக தாக்கிய ஈரோடு பா.ஜ.க பிரமுகர் உட்பட 9 பேரை இன்று (டிசம்பர் 25) பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் மற்றும் இரு அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோபார்களில் மதுபானத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யும் நிறுவனம் பிரபல பிக்டாடி . இந்த நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 20 ம் தேதி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?
வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா மனோகர்
நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?
இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக ஒரு ஆயத்த ஆடைகள் போன்ற பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள்!
எமது கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர்
நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம்.
ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும்?
நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம்.
புதன், 24 டிசம்பர், 2025
1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மின்னம்பலம் -Kavi : முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய நாட்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்றும் (டிசம்பர் 24) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அடுத்தவர் குடும்பங்களை சீரழித்த ஆறு நடிகைகள்
![]() |
நண்பன் : மற்றவர்களின் குடும்பங்களை சீரழித்த 6 நடிகைகள் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது…
முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது – குடும்பங்களை சீரழித்த நடிகைகள்.
முதல் நடிகை நம்முடைய K.R. விஜயா.
தமிழில் அவரை “சிரிப்பழகி” என்று அழைப்பார்கள்.
அவர் திருமணம் செய்துகொண்டது திரைப்பட தயாரிப்பாளரும் வட்டிக்கடன்காரருமான வேலாயுத நாயர் என்பவரை.
K.R. விஜயாவை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு இன்னொரு குடும்பம் இருந்தது.
எப்படியிருந்தாலும், விஜயா பிடித்தது புளியங்கொம்பில் தான்.
வேலாயுதம் நாயர் விஜயாவுக்கு தங்கம், சொத்து, விமானம் வரை பரிசாக கொடுத்தார்.
இவ்வாறு வேலாயுதம் நாயரின் குடும்பம் விஜயாவால் சீரழிக்கப்பட்டது.
என்.டி.ஏ-வில் ஓபிஎஸ், டிடிவி - க்ரீன் சிக்னல் கொடுத்த ஈபிஎஸ்? உருவாகும் மெகா கூட்டணி... OPS TTV in NDA EPS
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அதேசமயம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என தமிழக அரசியலில் பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனிமொழி எம்.பி hint
hindutamil.in - இரா.கார்த்திகேயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ எனும் தலைப்பிலான மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்லடம் அருகே வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காரணம்பேட்டையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியதாவது:
தமிழ் பெண்கள் இல்லாமல் யாரும் வெல்ல முடியாது. இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும் மாநாடாக அமையும். திமுக-வுக்கு ‘மேற்கு’ சரியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மேற்கு என்பது திமுக-வின் கோட்டையாகும். அதை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்குப் பிறகு மகளிருக்கு சரிசமமாக இடம் கிடைக்கும்.
செவ்வாய், 23 டிசம்பர், 2025
காங்கிரஸிடம் நேரடியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்! காங்கிரஸ் தவேக ரகசிய பேச்சு வார்த்தை!
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புதிய அரசியல் வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து, விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யு என் பி தலைமையை விட்டுக்கொடுக்க தயார்
வீரகேசரி : நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இந்த அரசாங்கம், ரணில் என்ற தனி மனிதனைக் கண்டு இந்தளவு அச்சமடைந்து, அவரை அரசியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இவ்வளவு முயற்சிக்கிறது என்பதற்கான காரணங்கள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தில் இருப்பவர்களின் பேச்சைப் போலவே அவர்களது செயல்களும் இருக்கும் என்று இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நினைத்ததுடன், அதனைத் தலைமேல் வைத்து நம்பினார்கள்.
நாட்டின் கையிருப்பு பூச்சியமாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை பொறுப்பேற்று கண்முன்னே அதைக் கட்டியெழுப்பிய மனிதனைப் புறக்கணித்துவிட்டு, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள், இன்று வீதிச் சந்திகளிலும் கடைகளிலும் நின்று அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கின்றனர் என தலத்தா அத்துகோரல குறிப்பிட்டார்.
