வியாழன், 31 ஆகஸ்ட், 2023

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: யாழ்ப்பாண பூர்வீக தர்மன் சண்முகரத்தினத்திற்கு அதிக வாய்ப்பு

 

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட திரு கனகரத்தினம் சண்முகரத்தினம் தர்மன் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார் அநேகமாக அவர் வெற்றி பெறுவார் என்றுதான் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன
உடனே காத்திருந்தது போல ஆர் எஸ் எஸ் சங்கிகள் அவரை இந்தியர் என்று பிரசாரம் செய்வதில் அதீத முனைப்பு காட்டுகின்றனர்  
திரு தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றால் அதுவும் மோடியின் ஒரு வெற்றி அல்லது பாஜக சங்கிகளின் வெற்றி என்று பிரசாரம் செய்யவும் தவற மாட்டார்கள்  உலகம் முழுவதும் மோடியைதான் வழிபடுகிறார்கள்
இந்தியாவின் பெருமை மோடியால்தான் கொடிகட்டி பறக்கிறது என்று 2024 தேர்தலுக்கு இப்போதே பலூன் ஊத  தொடங்கி விட்டார்கள்!
எனவேதான் திரு தர்மன் சண்முக ரத்தினத்தின் பூர்வீகம் பற்றிய இந்த பதிவு 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல் ஆகும். இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
 யாழ்ப்பாணத்தை சேர்ந்த  (புற்று நோய் ஆய்வாளர்) திரு கனகரத்தினம்  சண்முகரத்தினத்தின் மகனான திரு  தர்மன் சண்முகரத்னம்


மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங்,
டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தர்மன் சண்முக ரத்னத்தின் தாத்தா, பாட்டி, யாழ்ப்பாணத்தில்  இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள் தர்மன் 1957-ம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார்.
அவரது தந்தை கனகரத்தினம் மருத்துவ துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.
தர்மன் சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார்.

தர்மன் சண்முக ரத்னம் கடந்த 1988-ம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.

கருத்துகள் இல்லை: