வெள்ளி, 23 அக்டோபர், 2020

உலக பத்திரிகையாளர் அமைப்பு இந்தியாவுக்கு கண்டனம்

பாலகணேசன் அருணாசலம் :  · ஆஸ்திரியாவை தலைமையிடமாகக்


கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவ னம் (ஐபிஐ) மற்றும் மற்றொரு ஐரோப்பி ய நாடான, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) ஆகியவை மோடிக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளன. சுதந்திரமான மற்றும் விமர்சன ஊடக வியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத்தப் படுகிறது. 

இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்கு ஒப்பாகும். எந்த வொரு விமர்சனத்தையும் மவுனமாக்கு வதற்கான அரசின் முயற்சிதான் இது. பத்திரிகை வேலையை தேசத்துரோகம் என்ற பிரிவின்கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக் கே ஊறு என கூறுவதற்கும் முகாந்திர மே கிடையாது.          மார்ச் 25ம் தேதிமுதல் இதுவரை கொரோ னா காலத்தில், 55 பத்திரிக்கையாளர் கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி குரூப் ஆய்வில் தெரியவந்து ள்ளது 

கருத்துகள் இல்லை: