திங்கள், 19 அக்டோபர், 2020

இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!!

தி மல்லிகா : · இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!! இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை! மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையிலும் சொந்தங்கொண்டாட முடியாது! அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்
அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்
கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்
தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்
ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்
யாகம் செய்தால் பதவி கிடைக்கும்
அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்
சகஸ்ரநாமம் சொன்னால் படிப்பு வரும்
ராமநாமம் சொன்னால் தைரியம் வரும்
கோயிலுக்குப்போனால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்
மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும்
சாணி தொற்றுநோயை விரட்டும்
மண்சோறு தின்றால் குழந்தைபிறக்கும்
திருநீறு ஜலதோஷத்தை போக்கும்
ஓம் சொன்னால் காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும்
யாகம் செய்தால் ஆபத்துகள் போய்விடும்
கைதட்டினால் கோவிட் 19 வைரஸ் பயந்து ஓடிவிடும்
விளக்குபிடித்தால் கொரோனிவைரஸ் தற்கொலைசெய்து செத்துப்போயிடும்
வேதம் ஓதினால் வாயிலிருந்து பிறக்கமுடியும்
தோள்,மார்பு, கால்களில்கூட யோனி முளைக்கும்
பூமியை பாயாக சுருட்டி தூக்கிட்டுப்போக முடியும்
பாம்புகள் பால்குடிக்கும்
குடிக்கிற பாயாசம் நேராக கர்ப்பப்பையை அடைந்து குழந்தைப்பேறை தரும்
திருநள்ளாறு கோபுரத்துக்கு நேர்மேலாக ரேடியோ அலைகள் செல்லாது
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது
யானைத்தலையை மனிதவுடலில் இணைப்பது
சூரியனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்
மான்கள் மனிதக்குட்டி போடுவது
அக்கினி சட்டியிலிருந்து மனிதர்கள் பிறப்பது
அறுபதாயிரம் வருடங்கள் வாழ்வது
குதிரைகள் மனிதர்களை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்கிற டெக்னிக்
யானையை சுமக்கிற அளவுக்கு பெரிய எலியை வளர்ப்பது
நட்சத்திரங்களை கோள்களாக மாற்றும் பயங்கர ஜோசிய டெக்னிக்குகள்
முதுகில் தடவினால் கோடுவிழும் டெக்னிக்
குரங்குகள் மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் டெக்னிக்
வாய்க்குள்ளே பிரபஞ்சத்தை காட்டுகிற டெக்னிக்
யாகம் செய்து மழைபெய்விக்கிற டெக்னிக்
யக்ஞம் செய்து எதிரிநாடுகளை அழிக்கிற நவீன தொழில்நுட்பம்
இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை இந்தியாவுக்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் கண்டுபிடித்து தந்தவர்கள் பயங்கரமான மூளையில் பலமுள்ள பிராமணர்கள் மட்டுமே....!!!

கருத்துகள் இல்லை: