வெள்ளி, 9 அக்டோபர், 2015

மாதம் ரூ.5000 பென்சன்! நாசர் அணி அளித்த வாக்குறுதி !

ஒரு ஓட்டு அவங்களுக்கு போனால் கூட அது பாலில் விஷம் கலந்த மாதிரி: நடிகர் கார்த்தி !  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக வாக்குகள் சேகரிக்க பாண்டவர் அணியினர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது மூத்த நாடக நடிகர் ஜெகன் என்பவர், தான் பழம்பெரும் நடிகர் மனோகர் குரூப்பில் இருந்ததாகவும், 40 வருடமாக சென்னையில் இருந்து பின்னர் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருப்பதாகவும், தற்போது நடிக்க முடியாத நிலையையும், உடல் நலக்குறைவையும் எடுத்து விளக்கினார். அப்போது பேசிய நடிகர் விஷால், இங்கு இருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக பேசுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். மாதா மாதம் திரையுலக குடும்பம் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவோம்
என்றார். அப்போது பேசிய ரோகினி, ஜெயித்தவுடன் முதல் கையெழுத்து மூத்த உறுப்பினர்களுக்கு மாதம் ரூபாய் 5000 பென்சன் திட்டம் தான் என்றார். ஜெ.டி.ஆர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக வாக்குகள் சேகரிக்க பாண்டவர் அணியினர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி,நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையின் படிப்புக்காக வந்திருந்தார். அவர்களை அழைத்துக்கொண்டு போய் காலேஜில் சீட் கேட்டோம். உங்களுக்கு இல்லாதா சீட்டா. கண்டிப்பாக சேர்த்துக்கொள்கிறோம் என்றனர்.சேலை விக்கவும், துணி விக்கவும் எங்க முகத்தை விற்கிறோம். அப்படி இருக்கையில் நாங்க உங்களுக்காக யாருகிட்ட வேண்டுமானாலும் நிற்க தயாராக இருக்கிறோம். இந்த வயதில்தான் அண்ணன் ராதாரவியும் சங்க பொறுப்புக்கு வந்தாரு.nakkheeran.in

கருத்துகள் இல்லை: