ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

தனுஷின் படத்துக்கு நோ சொன்ன வித்யா பாலன்! நஷ்டம் யாருக்கு?

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என்ற இரு படங்களின் வெற்றியால் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு கிடைத்த பரிசு, தனுஷை இயக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அவரது அடுத்த பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முடிந்த அளவிற்கு பெரிய படமாக இந்த படத்தை எடுக்க முடிவு செய்து முதல் முயற்சியாக பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார் துரை செந்தில்குமார். கோலிவுட் கைவிரித்ததால், பாலிவுட்டில் தஞ்சம் புகுந்து கூடு கட்டிய வித்யாபாலன் இன்று அந்த கூட்டை மாளிகையாகவே மாற்றிவிட்டார். அவரை சமரசம் செய்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர பலரும் எடுத்த முயற்சிகள் வீணாகிப்போக, தன் கதையின் மீது கொண்ட நம்பிக்கையுடன் சென்ற துரை செந்தில்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘கால்ஷீட்ல பிரச்சனைப்பா. அவங்க குடுக்குற தேதி செட் ஆகல, நாம என்ன பண்ண முடியும்’ என்று வித்யா பாலன் கமிட் ஆகாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: