வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சொத்துகுவிப்பு வழக்கில் மாயாவதி விடுதலை ! இனி தைர்யமா குவிக்கலாம் ?

புதுடில்லி: உ .பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு எதிரான மனுவை
சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், இநத மனு தேயைற்றது என்றும் கூறியுள்ளது. மாயாவதி முதல்வராக இருந்த போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆதாரமில்லை என்று சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரப்பட்ட மனு கமலேஷ் வர்மா என்பவரால் தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை நீதிபதி சதாசிவம் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கில் மாயாவதிக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரமில்லை என்றும், இது தேவையற்றது என்றும் சி.பி.ஐ., அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: