ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

அமர்த்தியா சென்:தமிழகம், கேரளாவின் வளர்ச்சி தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது

சென்னை: "தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.;நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள, "நிலையில்லா புகழ்- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' என்ற நூல் பற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றின் வளர்ச்சி, தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது' என, அமர்த்தியா சென் குறிப்பிட்டு உள்ளார். அதேநேரத்தில், வளர்ந்த மாநிலங்கள் என்பதற்காக, நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கிறது. இது, வளர்ச்சி பெற்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் உள்ளது. இதை, மத்திய அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளேன். நாட்டில் நிலவும் வளர்ச்சி ஏற்றத் தாழ்வுக்கு பல கராணங்களை சுட்டிக் காட்டுகின்றனர். இதை சரி, செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பின், பெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம். அதே நேரத்தில், வறுமை, அடிப்படை வசதி குறைபாடுகளும் நீடிக்கின்றன. சமூக, பொருளாதார நிலையில் ஏற்பட்டு வரும் பின்னடைவு குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முக்கிய பிரச்னைகள் குறித்து, வசதி மிக்கவர்கள் மத்தியில் மட்டும் விவாதம் நடக்கிறது. இதை, வசதியற்ற மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டும். சமூக, பொருளாதார தளங்களில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க, நாடு தவறிவிட்டது. அமெரிக்க பாதையைப் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விடலாம் என, எண்ணிவிடக் கூடாது. பொதுத் துறை, தனியார் துறை பொருளாதாரம் பற்றி தவறான அணுகு முறைகளே, துவக்கத்திலிருந்து பின்பற்றப்படுகின்றன. மாற்றம் என்பது, உடனடியாக ஏற்படாது. கொஞ்சம், கொஞ்மாகத் தான் அது உருவாகும். கேரளாவும், தமிழகமும் தனி நாடுகளாக இருந்திருந்தால், எவ்வளவோ முன்னேறியிருக்கும். மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கி பார்க்காமல், அவற்றின் வளர்ச்சி, அதற்கான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனி அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும். இந்த அடிப்படையில், சேது கால்வாய் திட்டத்தை தடுக்காமல், அதன் ஒட்டுமொத்த பயனை எண்ணிப் பார்த்து, அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: