வியாழன், 18 ஏப்ரல், 2024

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டது? மருத்துவ மனையில் தேறி வருகிறார்

 தினமணி : நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
நேற்று வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று உணவில் தனக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை அவர் கிளப்பியுள்ளார்.
வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக குடியாத்தம் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார்.

பின்பு, குடியாத்தத்தில் இருந்து எம்புலன்ஸ் மூலம் சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறான பின்னணியில் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார் மன்சூர் அலிகான்.

இதுபற்றி தனது மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சுல தாங்க முடியாத வலி! பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மென்ட் குடுத்தும் வலி நிக்கல.

உடனே சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமணியன் ஐசியூ-ல அட்மிட் பண்ணி சிகிச்சை கொடுத்ததுல இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தாங்க. இன்று மதியம் 2.00 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாத்துவாங்க” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: