ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

புலிகளின் துணுக்காய் வதைமுகாம் பற்றிய நேரடி சாட்சியம்! சுகன் கனகசபை

புலிகளின் துணுக்காய் வதைமுகாம். – Sooddram
புலிகளின் துணுக்காய் வதைமுகாம்

Suhan Kanagasabai :  இப்படியாக புலிகளின் வதைமுகாங்களில்  2009 மே 17 வரை 6000 பேருக்குமேல் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் .
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!
பகுதி 1
யூதர்களை கிற்லர் எப்படிக் கொடுமைப் படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான மிருகம்கள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த மிருகம்கள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க மிருகம்களே வழி கோலியுள
புலிகள் பற்றியஉண்மைத் தகவல்களை வெளியிட நாம் அவர்களாலேயே தள்ளப்பட்டுள்ளோம். இங்கே வரும் புலிகள் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் மிருகம்கள் என்று குறிப்பிட்டுள்ளோம். கீழே வரும் தகவல்களில் மிருகம்கள் என்ற பதத்தினை புலிகள் என்று எடுத்துக்கொள்ளவும். நாசிகளின் கொடுமைகளை விட மிருகம்கள் செய்த கொடுமைகள் பயங்கரமானது.


எங்கள் இணைய தளம் மூலமாக தனது அனுபவங்களை வெளியிடுகிறார், திரு. அந்தோணி. இவர் நாப்பது மாதங்கள் மிருகங்களின் வதை முகாம்களில் இருந்துள்ளார். இதோ அவரே:-
எனது சொந்த ஊரான நாவாந்துறை யாழ்ப்பாணம் நகரில் நான் இருந்தபோது ஆயுதம் தரித்த மிருகம்கள் ரெண்டு பேர் என் வீட்டுக்கு வந்தனர். விசாரணை ஒன்று உள்ளது எங்களுடன் வரவேண்டும் என்றனர்.
எங்கள் ஊரின் தலைவர் முன்னிலையில் இவர்கள் மிருகம்கள்தான் என்பதை உறுதி செய்த பின்னர், என்னை நல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு வானில் ஏற்றி கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர். என்னுடன் மூன்று மிருகம்கள் ஒட்டிக்கொண்டிருந்தனர்.
மறுநாள் அங்கிருந்து வட்டக்கச்சிக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கூடவே இரண்டு மிருகம்கள் சைக்களில் வந்தனர். அங்கு சென்றதும், வட்டக்கச்சி பொறுப்பாளர் நசீர் என்னும் பெரிய மிருகம்யிடம் ஒப்படைத்தனர். அவர் என்னுடைய முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விபரங்களைச் சேகரித்தார்.
ஒருநாள் அங்கு வைத்திருந்தனர். மறுநாள் காலை மீண்டும் சைக்கிளில் உருத்திரபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே “அத்தார்” என்ற பெரிய மிருகம்யும் உதவி மிருகம் \"கீதன்\" என்பவரும் என்னை விசாரித்தனர். 1990 மார்ச் 15ம் திகதி என்று நினைக்கிறேன், உருத்திரபுர வயல்வெளியில் தனியாக ஒரு வீடு இருந்தது. அங்கே அழைத்துச் சென்றனர். அந்தத் தனி வீட்டினுள் ஏறக்குறை 15 தமிழ் இளைஞர்கள் விலங்கு மாட்டப்பட்டு தனித்தனியாக அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தலையைக் குனிந்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இலங்கை ராணுவம்தான் கைவிலங்கிட்டு தமிழர்களை வதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். முதல் தடவையாக தமிழர்கள் தமிழர்களை கைவிலங்கிட்டு அமரவைத்திருந்ததைப் பார்த்தேன். பின்நாளில் நான் படவிருக்கும் கொடுமைகளை அன்று அறிந்திருக்கவில்லை.
அந்த தனிவிடுதியில் இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். இந்த இரண்டு நாளும் அங்கிருந்த ஏனைய 15 பேருடனும் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களும் என்னுடன் கதைப்பதற்கு முற்படவில்லை. அந்த அறையினுள் எந்த நேரமும் நான்கு ஐந்து மிருகம்கள் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மூன்றாவது நாள் ஒரு ட்ராக்ரர் ஒன்று நாம் இருந்த வீட்டின் முன் வந்து நின்றது. அதில் உருத்திரபுரம் பெரிய மிருகம் அத்தார் இருந்தார். மாலை ஆறுமணியளவில் அந்த ட்ரக்ரரில் ஏறச் சொன்னார் ஒரு முரட்டு மிருகம். நாம் ட்ராக்ரரில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டோம். ஏறுவதற்கு முன்னர் என்னுடைய கண்கள் கட்டப்பட்டன. அதே போன்று ஏனையவர்களது கண்களும் கட்டப்பட்டன. இருட்டு வேளை, வாகனம் நகர்கிறது. எந்தப்பக்கம் அந்த வாகனம் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ட்ராக்ரர் பெட்டி குலுக்கிக் கொண்டும், சிலவேளை எங்களை ஒருவருக்கு மேல் ஒருவர் மோதி விழவும் செய்தது. கண்கள் கட்டப்பட்டிருந்ததால் விழுந்துவிடாமல் இருக்க எதனைப் பிடிக்கவேண்டும் என்று தெரியாது. ஒரு தடவை அத்தனை பேரையும் மூன்றடி உயரத்துக்குத் தூக்கி வீசி நாம் அனைவரும் பெட்டியின் ஓரங்களில் அடிபட்டு விழுந்தோம். இதனைக் கண்டு நகைத்தனர். அவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். ஏனென்றால் நாம் அவர்களுக்கு அப்போ மனிதர்களாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்று பின்னால் கண்டுகொண்டேன்.
மூன்று மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் அந்த இருட்டுவேளையில் ஓர் வீட்டினில் வாகனத்தை நிறுத்தி அனைவரையும் இறங்கும்படி அத்தார் என்ற பெரிய மிருகம் உத்தரவிட்டார். கட்டப்பட்டிருந்த கண்கள் கழற்றப்பட்டன. அந்த வீட்டில் \"மல்லி\" என்ற ஓர் கொடிய மிருகம் எங்களைப் பார்த்து முறைத்தது. இந்த மிருகம்க்குத் துணை மிருகம்யாக இருந்தது \"ராஜன்\" என்ற மிருகம். எங்களை அத்தார் மிருகம் மல்லி மிருகம்யிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்.
இந்த அத்தாரை நான் இதன் பின்னர் பார்க்கவே இல்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த அத்தார் மிருகம் தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன். இராணுவத்திடம் அகப்பட்டுக்கொடதால் தற்கொலை செய்து கொண்டதாக என்னவேண்டாம். பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதும், மக்களிடமிருந்து பறித்த பணத்தை இவர் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதால் அவமானத்தினால் விசாரணைக்கு முன்னரே சைனையிட் உண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தெரியவந்தது நாம் இருக்கும் இடம் வவுனிக் குளத்தில் இருக்கும் சிவபுரம் என்பது. இந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு வீடுகள் வரையில் மிருகம்கள் வைத்திருந்தனர். கையில் போடப்பட்டிருந்த விலங்குகள் கழற்றப்பட்டன. அதற்குப் பதிலா சங்கிலி கொண்டு வந்தனர். அந்தச் சங்கிலி 2 அடி நீளம் இருக்கும். என்னுடைய இரண்டு கால்களையும் அதன் இரு முனைகளாலும் சுற்றி முனைகளில் பூட்டுப் போட்டு பூட்டினர். எனது இரு கால்களுக்குமிடையில் இருந்த சங்கிலி நீளம் 10 அங்குலங்களாகும். எனதருமைத் தமிழர்கள் எங்களுக்கு மிருகங்களைப் போன்று கால்களில் விலங்கிட்டனர். நான் ஓர் கிறிஸ்தவன், “ஓ ஆண்டவரே இந்தப் பாவிகளை மன்னிக்க வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். ஏனெனில் இதுவே கொடுமை என்று அப்போது எண்ணிக் கொண்டேன். இதையும் விடக் கொடுமைகள் எனக்கு நடக்கப் போகிறது என்று என்னால் உணர முடியவில்லை!
நான்கு நாட்கள் இந்தச் சங்கிலியுடன் பெரும் அவதிப்பட்டேன். மலம் கழிப்பதற்கு கழிவிடம் ஒரு திசையிலும் கிணறு ஒரு திசையிலும் இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு கழிவிடத்துக்குச் செல்ல வேண்டும். நிதானம் தவறி காலை எடுத்துவைத்து ஐந்தாறு தடவைகள் முகம் நிலத்தில் படுமளவு விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. நான் நடந்து செல்வதை மிருகம்கள் தள்ளி நின்று ரசிப்பார்கள். எங்கள் வேதனை அவர்களை மகிழ்வித்தது.
'ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய மிருகம்தான். இந்த மல்லி என்ற மிருகம் பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய மிருகம்கள் புகழ்ந்து சொன்னார்கள்.
தமிழர்களைக் கொன்றதில் புகழ்ச்சி கொண்டவர்களா விடுதலைப் போராளிகள்? மனதுக்குள் நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்து அந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கே, என்னைத் தரையில் அமரும்படி கூறினர். நானும் அமர்ந்தேன் என் எதிரில் ஓர் கதிரை போடப்பட்டது. அந்தக் கதிரையில் மல்லி என்ற மிருகம் அமர்ந்தது.
                                                                                                                                தடித்தக் குரலில் கேட்டார்:-
                                                                                                                                                                                                                                                                மல்லி         -    உனது பெயர் என்ன?
அந்தோணி    -    எனது பெயர் அந்தோணி.
மல்லி        -     சொந்த ஊர்?
அந்தோணி     -    நாவாந்துறை
மல்லி         -    எந்த இயக்கம்?
அந்தோணி     -    ஈ.என்.டி.எல்.எப்.
மல்லி         -    எப்போது அதில் சேர்ந்தாய்?
அந்தோணி     -     1987ல்
மல்லி         -     எங்கே பயிற்சி எடுத்தாய்?
அந்தோணி     -     கிளிநொச்சியில்.
மல்லி         -     எத்தனை பேரைக் கொலை செய்தாய்?
அந்தோணி     -     நான் யாரையும் கொன்றதில்லை.
மல்லி         -     எங்கே எல்லாம் கொள்ளையடித்தாய்?
அந்தோணி     -     நான் எங்கும் கொள்ளையடித்ததில்லை.
மல்லி         -    உன்ர கொக்காவை இந்தியன் ஆமிக்கு எத்தனை தரம் கூட்டிக்கொடுத்தாய்?
அந்தோணி     -     பதில் எதுவும் கூறவில்லை.
மல்லி (மீண்டும்)-     அப்ப கொம்மாவைக் கூட்டிக் குடுத்தியா
அந்தோணி     -     மரியாதையான கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன்.
                                                                                                                                உடனே மல்லி மிருகம்க்கு கோபம் வந்து எனது முகத்தில் அவரது செருப்புக் காலால் உதைத்தார். நான் மறு முனையில் வீழ்ந்தேன். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்னைச் சுற்றி எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தெரியாது. மல்லி கோபத்துடன் கத்துகிறார். “அந்தக் கருங்காலி கட்டையை எடுத்துவாடா” என்று. அடுத்த நிமிடத்தில் ஓர் முரட்டுத்தனமான கட்டையால் நிலத்தில் கிடந்த என்னைத் தாக்கினார். கைகள், கால்கள், முதுகு. வயிறு என்று அனைத்துப் பகுதியிலும் மாறி மாறி அடித்தார். ஒரு அடி விழும் போது வலியினால் துடித்துத் திரும்புகையில் மறு புறத்தில் அடிப்பார். அந்தப் பக்கம் வலியினால் திரும்புகையில் எதிர்புறத்தில் அடிப்பார். தலையைத் தவிர ஏனைய அனைத்துப் பாகங்களிலும் அடித்தார் அந்தக் கருங்காலிக் கட்டையால்.                                                                                                                                மரணத்தின் வேதனை எனக்குத் தெரியாது. ஆனால் சித்திரவதையின் ஆரம்பக்கட்டத் தண்டனையை அனுபவித்தேன். நான் எனது நண்பர்களையோ, உறவினரையோ, என் வயதில் குறைந்தவர்களையோ “வாடா, போடா” என்று கதைப்பது கிடையாது. என்னைத் தாக்கும் போது அந்த மல்லி என்ற மிருகம்யிடமிருந்து வந்த வார்த்ததைகளை இதில் எழுத முடியாத நிலையில் இருக்கிறேன். தமிழில் அப்படியான கொடிய வார்த்தைகள் இருக்கிறதா என்று வியந்தேன் அந்த வேதனையிலும்.                                                                                                                                 குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரையில் இவ்விதம் தாக்கிய அந்த மிருகம், களைப்படைந்து விலகிச் சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அதே கட்டையால் தாக்கினார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               அவருக்குக் கோபம் வந்தது எதனால் என்றால் நான் “மரியாதையான கேள்வி” என்று கேட்டதுதான். அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மரியாதையானவை, நான் கேட்டதுதான் மரியாதைக் குறைவான வாசகமாக அவர் அறிவுக்குப் பட்டது.
                                                                                                                                மீண்டும் களைப்படைந்த அந்த மிருகம் சிறிய மிருகம்களிடத்துச் சத்தமாகச் சொன்னார், “இவனை இழுத்துக்கொண்டு போய் அந்த அறையில் போற்றா” என்றார். அவர்களும் எனது கால்ச் சங்கிலியில் பிடித்து இழுத்துச் சென்று அறையினுள் விட்டனர். எனது முதுகு நிலத்தில் உரசியதால் அடி வலியுடன் அதுவும் சேர்ந்து வதைத்தது.
                                                                                                                                தொடர்ந்து நான்கு நாட்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். இரவு 11மணியளவில் பல மிருகம்கள் சேர்ந்து கதைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு லொறிகள் எங்கள் கைதிக் கல்லறைகள் முன் வந்து நின்றன.
                                                                                                                               நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றிலுமிருந்த வீடுகளிலிருந்தும் பல பேருக்கு விலங்கிட்டு அழைத்து வந்திருந்தனர். எங்களையும் வெளியில் அழைத்தனர். மெதுவாகச் சென்றோம். என்னுடன் அந்த அறையில் இருந்தவரது பெயர்கள்
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               (01)     திரு. ஈசன் (நெடுந்தீவு)
(02)     திரு. நாகேஸ் (புங்குடுதீவு)
(03)     திரு. கண்ணன் (அரியாலை)
(04)     திரு. பாலசுப்பிரமணியம் அல்லது ஜோதி (காங்கேசன் துறை)
(05)     திரு. சிவலிங்கம் (குருநகர்)
(06)     திரு. பிரசாந்த் (கிளிநொச்சி)
ஆகியோர் அங்கு நின்ற லொறியினுள் ஏறினோம். எங்கே கொண்டு செல்கின்றனர் என்பதும் எமக்குத் தெரியாது.
                                                                                                                                இவர்கள் யார்? ஏதற்காக இப்படிக் கொடுமைப்படுத்துகின்றனர்? விடுதலை யாருக்காக? நாங்கள் எங்கள் இனத்தின் எதிரிகளா? சிங்களவருடன் நாம் எதற்காகப போராடவேண்டும், விடுதலை இந்தக் கொடிய மிருகம்களிடமிருந்தா? அல்லது சிங்கள இராணுவத்திடமிருந்தா? சட்டம், ஒழுங்கு, விசாரணை என்று இருந்த காலம் போய் மிருகங்களிடம் அகப்பட்டுக்கொண்ட மனிதர்களாகி விட்டோமே என்று எண்ணிக் கொண்டு லொறியின் உள் ஓரத்தில் அமர்ந்தேன்.                                                                                                                                வாய் பேசும் மிருகங்களிடம், வாய் பேசும் மனிதன் அகப்பட்டுள்ளான் என்ற எண்ணத்துடன் அடுத்த வதை முகாமுக்கு பயணம் செய்ய தயாராக்கிக் கொண்டேன். ஏறக்குறைய இரண்டு லொறிகளிலுமாக 150 பேர்வரை ஏற்றப்பட்டோம். மிருகங்கள் போல் உள்ளே தள்ளி தார்ப்பாயால் லொறியின் பின்பகுதியை மறைத்தனர். இந்தவேளை மல்லி மிருகம் அங்கே வந்தார்.
                                                                                                                                                                                                                                                               டே, சலீமிட்ட சொல்லடா, “ இவர்கள் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி” என்று கூறி லொறிகள் இரண்டையும் புறப்படச் சொன்னார்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               இந்த மல்லிப் பற்றி சிறு குறிப்பைத் தருகிறேன்:-
                                                                                                                                 மல்லியின் பிடியில் நான் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தேன். தினமும் அந்த அறையில் இருந்த தமிழ் இளைஞர்களை தாக்குவதும் சித்திரவதைச் செய்வதுமாகத்தான் இருந்தார். இவர் இப்படி ஓர் பதவியை அடையக் காரணமாக இருந்தது இவர் செய்துவிட்ட கொலைகள்தானாம்.                                                                                                                                 யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் இருந்த ஏனைய இயக்க உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும், சந்தேகப்படுபவர்களையும் இவர் சுட்டுக் கொன்று விடுவாராம். பின்னர் சுட்டுக் கொன்றவர்களது விபரங்களை எழுதி தலைவர் பிரபாகரனுக்கு அனுப்புவாராம். சுட்டுக்கொல்லப்படும் அனைவரும் துரோகிகள் என்று இவரே தீர்ப்பும் கூறி எழுதி அனுப்ப தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்து இவரைத் தேர்வு செய்து பதவி உயர்வு கொடுத்து சிவபுரம் முகாமுக்கு சித்திரவதை வல்லூனராக அனுப்பிவைக்கப்பட்டாராம்.
                                                                                                                                இவரை \"மண்டை மல்லி\" என்றும் \"பினம் தின்னி\" என்றும் இவரது சகாக்களால் பெருமையாக அழைக்கப்பட்டனர். தமிழர்களை இவர் தலையில் சுட்டுக்கொல்வதால் இவருக்கு மண்டை மல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறினர்.
                                                                                                                                என்னுடன் இருந்தவர்களை இவர் சித்திரவதை செய்யும் போது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். எனது மனதுக்குள் நான் வேண்டிக்கொண்டேன், இவனது மரணத்தை நான் பார்க்க வேண்டும், இறைவன் இவனுக்கு உரிய தண்டனை வழங்குவார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது.                                                                                                                                 இரண்டு ஆண்டுகளின் பின் இரண்டு வாரங்கள் மட்டுமான ஓர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. மிருகம்களாக(புலி) அறிவித்த அந்த யுத்தநிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
                                                                                                                                                                                                                                                               யுத்த நிறுத்தம்தானே என்ற துணிச்சலில் மல்லி மிருகம்யும், வேறு ஓர் மிருகம்யும் ஒட்டுசுட்டான் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவம் இந்த இரு மிருகம்களையும் சுட்டது. இதில் மல்லி கீழே விழுந்ததும். கூட வந்த மிருகம் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டது. மல்லியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.                                                                                                                                தகவல் அறிந்த மிருகம்க் கூட்டம் ஒட்டுசுட்டான் சென்று மல்லியின் தலையில்லா முண்டத்தை எடுத்து வந்தனர். மல்லியின் தலைக்காக மிருகம்கள் (புலிகள்) மூன்று நாட்களாகக் காத்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்திடம் மிருகம்கள் முறையிட்டு மல்லியின் தலையைக் கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடி நின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளில் தேடிப்பார்த்தனர்.                                                                                                                                இராணுவம் மல்லியின் தலையை வெட்டி காடுகளக்குள் வீசியிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் சந்தேகப்பட்டது.
சிலவேளை நாய் அல்லது நரிகள் மல்லியின் தலையை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சந்தேகம் தோன்றியது. இதனால் செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளிலும், நாய்கள் உள்ள வீடுகளிலும் தேடிப்பார்த்தனர் மல்லியின் தலையை!                                                                                                                                 கடைசிவரை கிடைக்கவே இல்லை மல்லியின் தலை. நான்காம் நாள் தலையில்லாத மல்லிக்கு பட்டம் வழங்கப்பட்டு எரியூட்டப்பட்டார்.
லெப்ரினள் கேணல் நவநீதன் (மல்லி) (புதுக்குடியிருப்பு) என்று கூறி எரியூட்டப்பட்டார் மண்டை மல்லி.
மல்லியின் சித்திரவதையை அனுபவித்த போது நான் என்மனதுக்குள் இறைவனிடம் வேண்டிக்கொண்டது என் கண் முன்னாலேயே இவரது மரணத்தைப் பார்க்க வேண்டும் என்று. மண்டை மல்லி மண்டை இல்லாமலேயே மக்கள் முன் மாண்டுபோனார். இறைவன் ஒரு நாள் தண்டிப்பார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது.
வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது.   எங்களை இறங்கும்படி பணித்தனர் மிருகம்கள். இறங்கினோம். கட்டப்பட்ட கண்கள் கழற்றப்பட்டன. எங்கும் வெளிச்சமாக இருந்தது.
இந்த இடம் துணுக்காய் என்றனர், மிருகம்கள் நடத்திவரும் வதைமுகாம் இதுதான் என்றனர் என்னுடன் விலங்கிடப்பட்டிருந்தவர்கள். இறங்கிய எங்களை ஓர் பழைய அரிசி மில் ஒன்றினுள் அழைத்துச் சென்றனர். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்களது கால்களில் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. இருவர் ஒரு சங்கிலியில் மாட்டப்பட்டிருந்தனர். எங்களது கால் சங்கிலியை கழற்றினர். இருவர் இருவராக நிற்கச் சொல்லி ஒரு சங்கிலியில் இருவரை இணைத்தனர். பின்னர் இவர்களினுடே படுத்துக்கொள்ளும்படி கூறினர். நாளை வருகிறோம் என்று கூறிச் சென்றனர்.
காலை 5.50மணிக்கு எழுந்து காலைக் கடனுக்கு செல்லும்படி பணித்தனர். நாம் இரண்டு பேர் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தோம். அப்படியே சென்று கடனைக் கழித்துவிட்டு வரும்படி கூறினர். அங்கே இருந்த அத்தனை பேரும் இவ்விதம் பிணையப்பட்டு இருந்தனர். பலர் மெலிந்து நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
என்னுடன் விஜயன் என்ற இளைஞர் பிணைக்கப்பட்டிருந்தார். இவர் டெலொ இயக்கத்தைச் சேர்ந்தவர். நாம் இருவரும் காலைக் கடனைக் கழிக்கச் சென்றோம். 15அடி ஆழம் கொண்டதும் முப்பது அடி நீளம் கொண்டதாகவும் அமைந்த குழியின் மேல் மரங்கள் போடப்பட்டு அதன் குறுக்கே பலகைகளைப் போட்டிருந்தனர். பலகைகளின் இடையே அரையடி அளவு இடைவெளியிருக்கும், அதன் ஊடாக நாம் மலம் கழிக்க வேண்டும். வாழ்வின் முதல் தடவை கைதியாக நாசி யேர்மனியரின் வதை முகாம் காட்சிகளைக் நேராகக் கண்டேன் அங்கே!
இருவர் இருவராக பிணைக்கப்பட்ட மாடுகள் போன்று வரிசையாக நடந்து சென்று மலம் கழிக்கும் மையத்தை அடைந்தோம். அருகில் இன்னொருவர் நெருக்கமாக இருக்கும் போது எப்படி காலைக் கடனை முடிப்பது. விஜயன் தனது கடனை முடித்தார். நான் சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களது அரிசி மில் போன்ற வேறொரு அரிசிமில்லில் இதே போன்று பல பேர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காலைக் கடன் கழிக்க வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர்.
காலையில் தண்ணீர், தேனீர், உணவு எதுவும் கிடையாது. கொட்டடிக்குள் மீண்டும் வந்ததும் யாருடனும் கதைக்கக் கூடாது, நிலத்தில் கீழே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும்படி உத்தரவிட்டனர் மிருகம்கள். காலை 8.30 மணியளவில் “சலிம்” என்ற செம்பாட்டு சலீம் அல்லது சேர்லி அம்மான் என்ற குள்ளமான மிருகம் (புலி) வந்தார். தலை மயிர் செம்பாட்டு நிறத்தில் இருந்தது.
நேற்று இரவு இங்க வந்த எல்லாரையும் வெளியில வரச் சொல்லு என்று சத்தமாகச் சொன்னார். சில மிருகம்கள் உள்ளே வந்து இரவு வந்த எல்லாரும் வாங்கடா வெளியில் என்றனர். நாம் அனைவரும் (150பேர்) வெளியில் வந்தோம். செம்படை தலை மிருகம் அங்கே நின்று கொண்டு எங்களை நோக்கி அறிவுரை வழங்கினார்.
நீங்கள் இங்கு வந்திருப்பது விசாரணைக்காக, விசாரணை முடிந்ததும் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். விசாரணை முடியும் வரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். விசாரணை செய்யும் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நீங்கள் இருந்த இடத்துக்கு திரும்பிச் சென்று இருக்கவும் என்று கூறி அவரது அறிவுரையை முடித்தார்.
இவர் தனது அறிவுரையை முடித்துவிட்டு விசாரணைப் பகுதிக்குச் சென்றார். விசாரணைப் பகுதி எங்கள் இருப்பிடத்திலிருந்து சுமார் 20 அடிகள் தள்ளி இருந்தது. இந்த மிருகம் அங்கே சென்றதும் இளைஞர்கள் அலறும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அம்மா, அய்யோ என்ற இரண்டு வார்த்தைகளும் தொடர்ந்து அபயக் குரலுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இந்த ஓநாய்கள் எங்கள் இளைஞர்களை வதைக்கிறார்கள், யாராக இருந்தாலும் மனித நேயம் என்பது இயற்கையாக இருக்க வேண்டியது மனிதனுக்கு. இந்த மிருகம்களுக்கு இதயம் என்ற ஒன்றே இருந்ததாகத் தெரியவில்லை. தமிழனை இவ்வளவு அரக்கனாகவா இறைவன் படைத்தான். இளைஞரது அலறும் சத்தம் ஒரு மனிதனால் கேட்கமுடியாததாக இருந்தது. நான் தாக்கப்படும் போது ஏற்பட்ட வலியை விட இந்த இளைஞர்கள் தாக்கப்படும் போது அவர்கள் எழுப்பும் அவலக் குரல் மிருகங்களையும் இரங்கவைக்கும். முதலில் “ஆண்டவரே இவர்களை மன்னித்துவிடும்” என்று கோரிக்கை வைத்த நான் இப்போது, “ஆண்டவரே இவர்களை மன்னிக்காதீர்” என்ற கோரிக்கையை வைத்தேன்.
காலை 9மணியளவில் “தீபன்” என்ற ஒரு மிருகம் உள்ள வந்தது. விசாரணைக்கான நபர்களைத் தேர்ந்து கைதிகளாகிய எங்களை இந்த நபர்தான் அவர்களிடத்து அனுப்பிவைப்பார். உள்ளே வந்த  இந்த மிருகம் புதிதாக வந்த எங்களுக்கு கைதி இலக்கம் வழங்கப் போவதாகக் கூறி ஓர் கதிரையில் அமர்ந்தார். நாங்கள் வரிசையாக நடந்து அவர் முன் ஆஜர் ஆனோம். அவர் ஒவ்வொருவருக்கும் இலக்கங்களை வழங்கினார். எனக்கு வழங்கப்பட்ட இலக்கம்; K. 87 இந்த மிருகங்களின் சிறை நிர்வாகத்தில் A முதல் Z வரை ஒவ்வொரு எழுத்துக்கும் 100 பேர் வீதம் இருக்கும்.
இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த மில்லுக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன். மறுபடியும் உள்ளே வந்த தீபன் மிருகம் கைதிகள் இருக்கும் நிலத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளத்தில் பெட்டி போன்ற வடிவத்தில் நீல நிறத்தில் கோடுகள் வரையும் படி உத்தரவிட்டார்.
சில மணி நேரங்களில் வண்ணப் பெயிண்ட் வந்தது. நான்கு கைதிகளை அழைத்து கோடுகளை வரையச் சொன்னார். சதுரங்க மிருகம் போல இருந்தது அந்தக் கோடுகள். இந்த 2X2 அளவில் உள்ள கோடுகளுக்கு நடுவில் கைதிகள் அமர்ந்திருக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் கதைக்கக் கூடாது. கால்களை நீட்டக் கூடாது. நிமிர்ந்து சப்பாணி போட்டபடி அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஓர் உத்தரவு போட்டார் தீபன் மிருகம்!
நாம் இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்தோம். அதனை நீக்கிவிட்டு தனித் தனியாக சங்கிலி கொண்டு இரண்டு கால்களையும் இரு முணைகளாலும் சுற்றி எலக்ரிக் வெல்டிங் செய்தனர். இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள சங்கிலியின் நீளம் ஒன்றேகால் அடி இருந்தது. எலக்ரிக் வெல்டிங் செய்யும் போது எனது காலில் வெப்பம் தாக்கியது. நெருப்பு பொறி முகத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் நடமாட முடியாத மிருகங்கள் ஆக்கப்பட்டோம். எங்கள் சேட்டுகளைக் கழற்றச் சொன்னார்கள். இனிமேல் கைதிகள் மேலாடை அணியக் கூடாது என்று தீபன் மிருகம் சத்தமிட்டுக் கூறினார்.
சேட்டைக் கழற்றச் சொன்னதும் நான் மிகவும் பயந்தேவிட்டேன். சில வேளை எங்கள் பகுதியில் மாடுகளுக்கு அடையாளங்களாக பெயர் அல்லது இலக்கத்தினை நெருப்புக் கம்பிகளால் சூடுவைத்து அடையாளம் இடுவார்கள். அப்படித்தான் இந்த கயவர்கள் செய்யப் போகிறார்களோ என்று மிரண்டு போயிருந்தேன்! நல்லவேளையாக அப்படி சூடு போடவில்லை. அப்படி ஓர் அடையாளம் இடும் முறை ஈழத்தில் இருப்பது தீபன் என்ற அந்த மிருகம்க்கு ஞாபகம் வராமல் விட்டதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் மனதுக்குள்.
முதல்நாள் காலை முதல் இரவு வரை நான் அவர்கள் வரைந்த கோடுகளுக்குள் நடுவில் இருந்தேன். கால்கள் இரண்டும் விறைத்துவிட்டன. இவர்கள் பூட்டிய சங்கிலி விலங்கு கால்களை நெரித்து இழுத்து அண்டிக்கொண்டே இருந்தது. இரண்டு கால்களிலும் சங்கிலி பதிந்து கொப்புளங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிட்டது. மறுநாள் விடிந்ததும் காலைக்  கடன் கழிக்க நடந்து செல்லக் கூடாது ஓடிச் செல்ல வேண்டும் என்று அங்கு நின்றிருந்த ஒரு மிருகம் உத்தரவிட்டது. சங்கிலியால் பிணைத்திருக்கும் எம்மால் எப்படி ஓட முடியும். இரண்டு கால்களையும் அருகருகில் வைத்து துள்ளித் துள்ளிதான் சென்றேன் கழிவிடத்துக்கு சிலர் மெதுவாக வந்தனர், அவர்களுக்கு முதுகில் கட்டையால் அடித்தது அந்த மிருகம்.
அன்று 11மணியளவில் அரை றாத்தல் பாணும் ஒரு தட்டில் பருப்புக் கறியும் கொடுத்தனர். ஒரு தட்டில் இருக்கும் கறியை பாணில் தொட்டு இருவர் உண்ண வேண்டும். ஒரு பிளாஸ்ரிக் கப்பில் தண்ணீர் கொடுத்தனர். மாலை 5மணியளவில் சோறும் பருப்பும் சோயா பீன்சும் கலந்த கறி ஒன்று கொடுத்தனர். பத்துப் பேருக்கு ஒரு பிளேட். ஒருவர் மாறி ஒருவர் உண்ண வேண்டும். பிளேட் கழுவப்படாமல் மாறி மாறிச் சாப்பிட வேண்டும். கைகழுவதற்கு அனுமதியில்லை. விரல்களை நாங்கள் நாக்கினால் நக்கி சுத்தம் செய்தோம்.
காலை மாலை இரு வேளை தவிர இடையில் எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை உபாதைகளைக் கழிக்க அனுமதிக்க மாட்டார்கள். மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இடையில் மலம் சிறுநீர் வந்தால் சொப்பின் பையில் அதனை நிரப்பி வைத்திருந்து மாலையோ அல்லது காலையிலோ வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
நான்கு நாட்கள் இப்படிக் கடந்தன. இரவு ஒரு மணியிருக்கும் ஒரு வாகனம் வந்தது. அதிலிருந்து இந்த மிருகம்கள் வேட்டையாடி வந்த தமிழ் சகோதரர்கள் இறங்கினர். அப்படி வந்தவர்களில் ஒருவர் எனக்கருகில் அமர்த்தப்பட்டார். நானும் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் அவரை உற்றுப்பார்த்தேன். வெள்ளை நிறம், தடித்த உருவம், குறைந்த உயரம், வெறும் மேலுடன் உறங்கிக் கொண்டிருந்தார். சில இடங்களில் லேசாகக் கண்டங்கள் தெரிந்தன. நான் முதலில் இருந்த சிவபுரம் மிருகம்களைக் கடந்து தான் இவர் வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். மல்லி என்ற அந்த மிருகம் இவரது இரத்தத்தை உறுஞ்சியிருப்பார் என்பது உறுதியானது.                                                                                                                                
அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்!
நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும், அந்த றொலெக்ஸ் ஹொட்டலில் நான் உணவு அருந்தியிருக்கிறேன். நான் கதைப்பதை தள்ளி நின்ற மிருகம் ஒன்று பார்த்து விட்டது. என்ன கதைச்சனி என்னிடத்துக் கேட்டது அந்த மிருகம். நான், ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். முறைத்துக் கொண்டு நகர்ந்தது அந்த மிருகம்!
காலைக்கடன்கள் முடித்து மீண்டும் எங்களுக்கு வரையப்பட்ட இடத்தில் அமர்ந்து மிருகம்கள் இல்லாத நேரம் பார்த்து அவருடன் கதைத்தேன். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விசாரணை என்று தாக்குவதன் மூலம் ஓர் பயங்கர சூழல் ஏற்படுத்தப்படும். றொலெக்ஸ் ஓணரும் அன்று காலைதான் இப்படி ஓர் அவல ஓலத்தைக் கேட்டு மிரண்டு போய் கண்களை மூடி இறைவனை ஏதோ வேண்டிக்கொண்டிருந்தார்.
இந்த நான்கு நாட்களும் இரவு 1 மணி அளவில் எங்கள் கொட்டடிக்கு வரும் 10க்கும் மேற்பட்ட மிருகம்கள் ஆயுதங்களுடன் வருவார்கள் 10முதல் 12பேர்களது இலக்கங்களைப் படிப்பார்கள். அந்த இலக்கம் உடையவர்கள் எழுந்து நின்றதும் அவர்களை கெட்டவார்த்தைகளால் பேசி இழுத்துச் செல்வார்கள். அவர்களை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது. புலிகளது (மிருகம்களது) நாசி முகாம்களில் கொடுமையானது துணுக்காயில் இருக்கும் இந்தச் சிறைகள்தான்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கூட ஏனைய இயக்கச் சகோதரர்களையும் இங்குதான் வைத்திருந்தனர். இந்தச் சிறையிலிருந்து தினமும் 10முதல் 15 பேர்வரை இந்த மிருகம்களால் கொல்லப்படுவார்கள் என்று உதயன் என்று கூட இருந்த சகோதரன் என்னிடத்துக் கூறினார். இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் இவ்விதம் கொல்லப்படுவார்கள் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
வழக்கம் போல் அன்று யாருடனும் கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவுடன் அவர்களது கோடு வரையப்பட்ட பெட்டிக்குள் அவர்களது உத்தரவுபடி அசையாமல் இருந்தேன். றொலெக்ஸ் ஓணரும் அப்படியே அன்று முழுவதும் இருந்தார். அவரால் இது போன்று அமர முடியவில்லை. நாங்கள் உழைக்கும் வர்க்கம், எதனையும் தாங்கிக் கொள்வோம், இவர் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார். அவர் படும் வேதனையைப் பார்த்து என்னால் வருந்தத்தான் முடிந்தது. எம் இனத்தின் இரத்தத்தை உறுஞ்சும் இந்த மிருகம்களுக்கு மனிதனின் வலி எப்படித் தெரியவரும்.
மறுநாள் காலைக் கடன் முடித்து அடிமேல் அடிவைத்து மீண்டும் எனது இடத்தில் அமர்ந்தேன். 10 மணியளவில் தீபன் தலைமையில் மிருகம்கள் கூட்டம் ஒன்று வந்தது. சிலரது இலக்கங்களை சத்தமாகப் படித்தனர். எனது இலக்கமான “K 87” ம் அதில் இருந்தது. எழுந்து சென்றேன் மொத்தம் 9 பேர், வெளியே அழைத்தனர்.
அந்த இடம் நீளமான ஓலைக்குடில். ஆறடி அகலத்தில் ஆறடி உயரத்தில் முள்ளுக் கம்பிகளால் குடிலினுள் வேலி போன்று அமைத்திருந்தனர். வரிசையாக ஒன்பது கதிரைகளும், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டெஸ்க்குக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தது 6 அல்லது 7 அடிகள் வரும். ஒவ்வொரு கதிரையிலும் ஒரு களுதையும். மன்னிக்கவும் மிருகம்யும், அவருக்குத் துணையாக இரண்டு மிருகம்களும் அருகில் நின்றிருந்தனர்.
என்னை நான்காவது மேசைக்கு அழைத்தனர். விசாரித்த மிருகம்யின் பெயர் வான்மீன். அருகில் நின்றிருந்த இரண்டுபேரின் பெயர்கள் முறையே மஞ்சு (திருகோணமலை) கௌதமன் (திருகோணமலை). இந்த கொளதமன் பின்நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் ஒரு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இரண்டு யாழ்ப்பாணப் பெண்களை கற்பழித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் கற்பழிப்பு பொதுமக்களுக்குத் தெரியவந்ததும் வேறு வழியின்றி தங்களை இனத்தின் காவலர்களாகக் காண்பிப்பதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற சம்பவம் ஒன்றினால்தான் உருத்திரபுரம் வதைமுகாம் பொறுப்பாளராக இருந்த அத்தார் என்பவரும் தற்கொலை செய்தார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
என்னை விசாரணைக்கு அழைத்த வான்மீன் என்ற மிருகம் அவருக்கான கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். “இடே வாடா இங்கே” என்று அழைத்த அந்தப் பெருமகன் தன் முன்னிலையில் நிலத்தில் இருக்கும் படி உத்தரவிட்டார். இவர்கள் ஆட்சியாளர்ள், நாங்கள் அடிமைகள். ஏஜமானிய தோரணையில் இந்த மிருகம் செயல்பட்டார்.
அமர்ந்தேன் தரையில். பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்கள் விவரங்களை எழுதிக் கொண்டார். விசாரணையை ஆரம்பித்தார், ஆரம்பம் முதலே அவரது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட நல்ல வார்த்தையாக வெளிவரவில்லை. பெண் உறுப்பை வேறு வார்த்தையில் நினைவுபடுத்தி “மவனே” என்பது முதற்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளில் அவ்வளவும் அசைவ வார்த்தைகளாக இருந்தன. இவர் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இருந்த பொறுப்புவாய்ந்த மிருகம்கள் அனைவருமே இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர்.
வான்மீன் - நீ எத்தனை பேருக்குக் கூட்டிக்கொடுத்தாய்? கோத்தை, கொக்கா எல்லாரையும் I.P.K.Fக்கு கூட்டிக் கொடுத்தனிதானே? எத்தனை பேரைக் கற்பழித்தனீ? எத்தனை பேரைக் கொலை செய்தாய்? இப்படி இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுமே பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும், கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தன.
பிற இயக்கங்களைப் பற்றி இந்த மிருகம்கள் இவ்விதமே விசமப் பிரசாரம் செய்து ஏனையோரை துரோகி என்று நம்பும்படி செய்தனர். ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிப்பது என்றால் பாதிக்கப்பட்டவர் முறையிட வேண்டும், கொள்ளை அடித்திருந்தால் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருக்க வேண்டும், அதில் சாட்சியங்கள் இருக்க வேண்டும், கற்பழித்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டிருக்க வேண்டும், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்க வேண்டும், களவு செய்திருந்தால் அதில் முறையீடு இருந்திருக்க வேண்டும், களவு போன பொருட்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றில் எதுவுமே இல்லாமல் பிற இயக்க அங்கத்தினரைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்துவதற்கு இவர்கள் சொன்ன குற்றச் சாட்டு சமூக விரோதிகள் என்பதாகும். நாம் எங்கள் நாட்டை மீட்கப் போராடப்புறப்பட்டவர்கள். ஒவ்வொரு  இயக்கத்திலும் இளைஞர்கள் இணைந்தது நாட்டின் மீது பற்றுக்கொண்டே அல்லாமல், சுகபோகங்களை அனுபவிக்க இயக்கத்துக்கு வரவில்லை. புலிகளது கைகள் ஓங்கியதால் இவர்கள் ஏனைய இயக்க அங்கத்தினரைப் பிடித்துவந்து படுகொலை செய்கின்றனர்.
இவர்கள் 1986ஆம் ஆண்டு ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அப்போது எனக்கு பதினாறு வயது படித்துக்கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் இப்படிக் கொடியவர்களா ஈடுபடுகின்றனர்! ரெலோ இயக்கத்தினரை சுட்டுக்கொன்றனர், வெட்டிக்கொன்றனர், ரயறை எரித்து அதனுள் அந்தச் சகோதரர்களைப் போட்டு எரித்துக் கொன்றனர், கொதிக்கும் தாருக்குள் அவர்களை உயிருடன் போட்டு அவித்துக் கொன்றனர், இவை அனைத்தையும் யாரும் கதை சொல்லி நான் கேட்கவில்லை. என் கண்களால் இவற்றைப் பார்த்தேன். எனது அன்றைய வயதின் ஆர்வக் கோளாறானது இது. இந்தச் செயல்களை நான் நாவாந்துறையிலிருந்து எனது சைக்கிளில் சுண்ணாகம் முதற்கொண்டு பாசை ஊர் வரைக்கும் ஒரே நாளில் தண்ணீர் உணவு எதுவுமின்றி சுற்றித்திரிந்து பார்த்தேன்.
துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பறந்து திரிந்தனர், சுட்டு வீழ்த்தப்படும் தமிழ் சகோதரர்களை தெருக்களுக்கு இழுத்து வந்து நெருப்பில் போட்டனர். இந்த மிருகம்களை அன்று பார்க்கும் போது மனித இனத்தில் இப்படியான விலங்குகளா? என்று வியந்தேன் எனது நண்பன் ஒருவன் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர், நான் சைக்கிளில் இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து நண்பன் விஜித்தைப் பார்க்க அங்கு சென்றேன்.
அவன் என்னை அழைத்துக் கொண்டு முத்திரைச் சந்தை வழியாக செம்மணி நோக்கி சென்றான். நான் ஒரு சைக்கிளிலும் அவன் ஒரு சைக்கிளிலுமாக சென்றோம். செம்மணி சுடலையின் எதிரில் சைக்கிளை நிறுத்தி அங்கபார் என்று காட்டினான். அங்கே ஒன்றும் தெரியவில்லை. நிலத்தைப்பார் என்றான், நிலத்தைப் பார்த்தேன், நிலத்தில் அறுபதிலிருந்து எழுபது அடி நீளத்துக்கு இரண்டடி அகலத்துக்கு சாம்பலாக இருந்தது. என்ன இப்படி சாம்பலாக இருக்குதே என்றேன். பார்த்தாச்சுதானே வா சொல்கிறேன் என்றான். திரும்பியும் நாங்கள் கல்வியங்காட்டுக்கு வந்தோம். இப்போது என்றாலும் சொல்லடா என்று ஆவலுடன் அவனிடத்துக் கேட்டேன் நண்பன் ஆரம்பித்தான்:-
நேற்று மாலையில் செம்மணியை நோக்கி வாகனங்களில் புலிகள் அங்குமிங்குமாக ஓடினர். ஒரு லொறியில் விறகுகளும் ஏற்றி அதன் மேல் ரையர்களும் ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு செம்மணி நோக்கிச் சென்றேன். சுடலைக்கு முன்னால் நான்கு ஐந்து வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லொறியிலிருந்து விறகுகளையும். ரையர்களையும் இறக்கினர்.
தொடரும்

கருத்துகள் இல்லை: