செவ்வாய், 13 ஜூன், 2023

புறவாசல் வழியாக அச்சுறுத்தப்பார்க்கிறது பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

 மாலை மலர்  :  சென்னை தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது."

"தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

கூமுட்டை சொன்னது…

அழிவின் விளிம்பில் பாஜக.

கூமுட்டை சொன்னது…

அழியப்போகும் கட்சி. இதுவே கடைசி ஆட்டம்!