திங்கள், 1 பிப்ரவரி, 2016

மதிமுகவில் மூன்று கோஷ்டிகள்...அம்மாவா? அய்யாவா? அரசியலை விட்டே ஓட்டமா?

மதிமுகவில்  திமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் அதிமுகவுக்கு ஆதரவான கோஷ்டியும் சத்தம் போடாமல் பிய்த்துகொண்டு போக முயற்சிப்பதாக தெரிகிறது. வைகோவின் பின்னால் சென்று மீண்டும் மீண்டும் சுடுமணலில் யாத்திரை செய்ய முடியாது  என்ற முடிவுக்கு பலரும் வந்து விட்டார்கள் . வைகோ ஜெயலலிதாவிடம் இருந்து எதை உறுதியாக பெறுவார் என்பதில் ஒரு நிச்சயம் இல்லாத நிலையில் அவரை நம்பி இனியும் அரசியல் நடத்த முடியுமா என்ற எண்ணத்தில் பலர் அரசியலை விட்டே ஒதுங்கும் முடிவுக்கும் கூட வந்து விட்டனர் என்று தெரிகிறது .ம.தி.மு.க. மகளிரணியை சேர்ந்த 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர் வடசென்னை ம.தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ராதிகா சந்திரகுமார் தலைமையில் 100 பேர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, ஏற்கனவே ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து தற்போது தி.மு.க. மாநில மகளிரணி துணை செயலாளராக இருக்கும் குமரி விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா சந்திரகுமார், ‘தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே நான் அங்கம் வகித்த கட்சியின் தலைமை செயல்பாடுகள் எனக்கு திருப்தியளிக்காத காரணத்தால், நானும் என்னுடன் சேர்ந்து 100 பேரும் தி.மு.க.வில் இணைந்து இருக்கிறோ nakkheeran,in

கருத்துகள் இல்லை: