திங்கள், 11 ஏப்ரல், 2011

இலங்கை கடவுச்சீட்டு தொடர்பாக தவறான கருத்து


இலங்கை கடவுச்சீட்டு இனி புகலிடத்தமிழர்களுக்கு வழங்கப்படமாட்டாது என தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடவுச்சீட்டின்றி புலம்பெயர்நாடுகளில் அகதி அந்தஸ்து கோருபவர்கள், கடவுச்சீட்டின்றி அகதிளாக வாழ்ந்து வருபவர்கள்தான் மேற்படி சிக்கலை எதிர்கொள்ளுகின்றனர். ஏற்கனவே கடவுச்சீட்டு உள்ளவர்கள் புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது பொருந்தாது என தெரியவந்துள்ளது. இணையத்தளங்களில் வெளியான மேற்படி செய்தி குறித்து புகலிடத்தில் வாழும் தமிழர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். செய்தியை வெளியிட்ட இணையத்தளங்கள் சரியான முறையில் செய்தியை வெளியிடாதது குறித்து  தூதரக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: