புதன், 3 மார்ச், 2010


 கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது.
ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி [^] நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது.
மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தன்.
சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இங்குதான் தாக்குதல் [^] நடந்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் கல்கி பகவானின் 3 வேலைக்காரர்களுக்கு சரமாரி அடி விழுந்தது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.பக்தி, முக்தி என்ற பெயரில் இந்த ஆசிரமத்தில் செக்ஸ் அக்கிரமங்கள் நடப்பதாகவும், பெண்களுக்கு போதைப் பொருட்களைத் தருவதாகவும் பொதுமக்கள் குற்றம் [^] சாட்டியுள்ளனர்.
ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: