கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2025) ‘டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 6 டிசம்பர், 2025
இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்! உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு
கனிமொழி : மக்களவையில் திமுகவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர்.
minnambalam.com-Mathi : :திருப்பரங்குன்றம் (Thirupparankundram) விவகாரம் குறித்து மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு எம்.பி. பேசிய போது, “நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல”என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜு மிரட்டல் விடுத்ததாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் கனிமொழி எம்.பி. நேற்று டிசம்பர் 5-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவிற்கும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.
கனிமொழி எம்.பி : “திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி!”
hindutamil.in : புதுடெல்லி: “உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். இதுபோன்ற தவறான தீர்ப்புக்குப் பிறகுதான் மணிப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
1927 இல் யாழ்ப்பாணத்தில் திரு சு.ராசரத்தினம் தொடங்கிய திராவிட இயக்கம்! . தந்தை பெரியார் 1944 இல் திராவிடர் கழகம் தொடங்க முதலே இலங்கையில் திராவிடம்
ராதா மனோகர் : தந்தை பெரியார் 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு முன்பே
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் திராவிட அமைப்பும் திராவிட பள்ளிக்கூடமும் திராவிடன் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து திராவிடத்தை இங்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறுவோர்க்கு தெளிவாக கூறிக்கொள்கிறோம்!
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே!
அதுவும் 1927 ஆம் ஆண்டிலே திராவிட கருத்தியலும் திராவிட அமைப்பும் திராவிட பத்திரிகையும் அறிமுகமாகி விட்டது!
அதன் முன்னோடியாக இருந்தவர் வழக்கறிஞர் திரு சு. இராசரத்தினம் அவர்கள்!
அவரது படங்கள் இப்போதுதான் நமக்கு கிடைத்தது.
அவற்றில் ஒன்றுதான் இப்போது நீங்கள் பார்ப்பது!
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெள்ளி, 5 டிசம்பர், 2025
Indigo மிரட்டலுக்கு பணிந்தது ஒன்றிய அரசு.
![]() |
விமான பணியாளர்களுக்கான புதிய விதியை திரும்ப பெற்றது இந்திய பொது விமானப் போக்குவரத்து துறை இயக்ககம்.
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக Flight Duty Time limitations விதிகளை மத்திய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதுவும் விமானிகள் சங்கங்கள் வேலை பளுவை குறைக்கவும் , ஓய்வு நேரத்தை அதிகரித்து , பறக்கும் பணி நேரத்தை குறைக்க பல்வேறு கோரிக்கைள் வைத்த பிறகு (Director General of Civil Aviation ) இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் புதிய விதியை அமல்படுத்தியது.
வியாழன், 4 டிசம்பர், 2025
இலங்கை 1,593 கி.மீ. தொடருந்து பாதையில் 478 கி.மீ. மட்டுமே பயன்பாடு- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தண்டவாளங்கள்
ஹிரூ நியூஸ் : டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் தொடருந்து வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சூறாவளி பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏ.வி.எம்.நிறுவனத்தின் எளிமையான முதலாளி AVM சரவணன்
Abdul Samath Fayaz · உங்கப்பா 36 வருஷமா சர்க்கரை நோயாளி!.
அவருக்கு இருக்கிற டயாபடீஸ் உனக்கும் வர வாய்ப்பிருக்கு!.ஜாக்கிரதை!
குடும்ப டாக்டர் ரங்க பாஷ்யம் ஒரு சின்ன சர்ஜரி செய்தபோது எச்சரித்தார்!.
அதற்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார் அந்த மனிதர்.
காபி சாப்பிடுவதில் ஆர்வமுள்ள அந்த மனுஷன் அதற்குப் பிறகு காபியில் சர்க்கரையே போடவில்லை.
மனுஷனுக்கு கட்டுப்பாடு அவசியம்.
மனம் அலை பாயும்.ஐம் புலனும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும்.
காங்கிரஸ் 40 சீட் + ஆட்சியில் பங்கும் கேட்கிறதாம்! காலாவதியான கட்சியின் கனவுக்கு குறைச்சல் இல்லை
மின்னம்பலம் - Mathi :காங்கிரஸ் கட்சிதான்.. சென்னையில இன்னைக்கு திமுக தலைவரான சிஎம் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்திச்சு பேசுனதை பத்தி நிறைய தகவல்கள் இருக்குய்யா..
கொட்டுகிற மழைக்கு நடுவே அனலடிக்கும் அரசியல்.. சொல்லுமய்யா
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகுதுன்னு தீயா தகவல் பரவுன நேரத்துல காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அறிவிச்சது..
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில அறிவிக்கப்பட்ட இந்த குழுவுல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தாங்க..
ஏவிஎம் சரவணன் காலமானார்
![]() |
Meenakshi Sundaram : திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஏவி எம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு!
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் .
இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது.
நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா,
பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார்.
தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை.
திருப்பரங்குன்றம் வழக்கு . 28 நிமிடம், 36 விநாடிகளுக்குள் விசாரித்து வாதங்களை கேட்டு தீர்ப்பை வெளியிட்ட உலகமகா அதிசயம் சுவாமிநாதன் என்ற பிரகிருதி
![]() |
Giri Sundar : ஜி.ஆர்.சுவாமிநாதன் எனும் கலவர மனிதன்.
இன்று தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை,
மாலை 5 மணிக்கே விசாரணைக்கு எடுத்தது மட்டுமின்றி,
மாலை 5 மணி முதல் 6.05 மணி வரை ஏற்கனவே 01/12/25-ஆம் தேதியன்று மலை உச்சி மீது விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தீர்ப்பை,
நடைமுறைப் படுத்துகிறார்களா என கால அவகாசம் கொடுத்து பொறுமையாக பார்த்த பின்னர்,
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்து,
மீண்டும் வழக்கு விசாரணையை 6.05 மணிக்கு தொடங்கி இருதரப்பு வாதங்களை கேட்டு,
உச்சநீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை மட்டும் துணைக்கு அழைக்காமல்,
இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் கடன் வாங்கி
13 பக்கம் கொண்ட தீர்பை தயார் செய்து
மாலை 6.33.36 PM மணிக்கு எல்லாம் அந்த தீர்பை இணையத்தில் பதிவேற்றம் செய்து,
அதனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமா ?
புதன், 3 டிசம்பர், 2025
திருப்பரங்குன்றத்தில் வெடித்த பதற்றம்... 144 தடை உத்தரவு : அரசு அவசர முறையீடு!
மின்னம்பலம் - Kavi : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க கேட்டு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அனுமதி வழங்கினார்.
சிஐஎஸ்எப் படை வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் இந்து முன்னணியினரும் பாஜகவினரும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, போலீசார் தடுப்புகளையும் மீறி சென்றனர்.
ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்காவுக்கு எதிரான அவதூறு! சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!
ilakkiyainfo.com : ஜனாதிபதிக்கு எதிரான அவதூறு: சமூக ஊடகப் பரப்புரையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொலிஸாருக்கு உத்தரவு!
Mathdusha
நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடுகல, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்: பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
Milk Mafia பால் மாபியா
இனமொன்றின் குரல் : இலங்கை தீவு ஆண்டு தோறும் பால்மா பவுடர் (Milk Powder) இறக்குமதிக்கு 300- 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து வருகின்றது.
இங்கு சுமார் 1.2 மில்லியன் கால்நடைகள் இருந்தும், உற்பத்தியாகும் பால் சுமார் 450 மில்லியன் லிட்டர்களாக மட்டுமே உள்ளது.
இந்த உற்பத்தி தேசிய தேவையின் 40% ஐ மட்டும் பூர்த்தி செய்வதால் , ஆண்டுக்கு 75,000 மெட்ரிக் டொன் பால் பவுடர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், உள்ளூரில் பால் உற்பத்திக்கு (Fresh Milk) பங்களிக்க கூடிய வடக்கு மற்றும் கிழக்கு பண்ணையாளர்களை தொடர்ந்தும் வஞ்சிக்கின்றார்கள் .
குறிப்பாக, இந்தப் பகுதிகளில் கால்நடை உற்பத்திக்கு ஆதாரமான மேய்ச்சல் நிலங்களை பெற்று கொடுப்பதில் ஜேவிபி ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.
செவ்வாய், 2 டிசம்பர், 2025
இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வெறும் 4 மணிக்கூறுகளை மட்டுமே இந்தியா வழங்கியது? இலங்கை எம்பி கடும் ஆட்சேபம்!
இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டுவரும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு வெறும் 6 மணிக்கூறுகளை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
ராவல் பிண்டி விமான நிலையத்தில் இருந்து இலங்கை வருவதற்கு குறைந்தது 4 மணிக்கூறுகளும் 30 நிமிடங்களும் தேவை.
இந்த விமானங்கள் இலங்கையில் இறங்கி பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் செல்வதற்குமாக குறைந்த பட்சம் 24 மணித்தியாலங்கள் தேவை.
இது பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு முஜிபுர் ரஹ்மான் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளார்!
கோ.சி.மணி பெயரில் துரைமுருகன் ஆடிய ஆட்டம்.. கடுப்பான ஸ்டாலின்.. கதிர் ஆனந்துக்கு கட்சி பதவி கிடைத்த பின்னணி!
![]() |
| கோ.சி.மணி |
மின்னம்பலம் - Mathi : திமுகவின் சோழமண்டலத் தளகர்த்தர் என்று கலைஞரால் பாராட்டப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுக அடையாளமான முன்னாள் அமைச்சர், முன்னாள் தஞ்சை மாவட்டச் செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர் கோ.சி.மணியின் 9 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று டிசம்பர் 2 அனுசரிக்கப்படுகிறது.
கோ.சி. மணி மறைந்து 9 ஆண்டுகள் ஆன பின்னாலும், திமுகவில் அவரது தடமும், அவரது முத்திரையும் இன்னும் அப்படியே உள்ளது.
அண்மையில், திமுகவின் வேலூர் மாவட்டப் பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டதில் கூட கோசி.மணியின் பங்கு இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?
இலங்கை பேரழிவு பற்றி ஆய்வு நடத்த திரு .ரணில் விக்கிரமசிங்கே அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்கிறார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலைமையை ஆய்வு செய்யும் பொருட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறார்!
இயற்கை அழிவை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது .
இந்த கூட்டம் வருகின்ற புதன்கிழமை (03) கொழும்பில் உள்ள மல்பாரா அரசியல் அலுவலகத்தில் நடைபெறும்!
Ranil calls all party leaders the day after
Former President Ranil
Wickramasinghe has called a party leader meeting to discuss the steps
that Sri Lanka should be taken due to the extreme adversity faced by the
hurricane.
Accordingly, all party leaders are scheduled to meet at Malpara political office in Colombo on Wednesday (03).
திங்கள், 1 டிசம்பர், 2025
அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு ‘சினிமா’: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!
மின்னம்பலம் - Santhosh : “பள்ளிக்கூடம் என்றாலே பாடம், பரீட்சை, வீட்டுப்பாடம் மட்டும்தானா? கொஞ்சம் ஜாலியாக இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஒரு இனிப்பான செய்தியைச் சொல்லியுள்ளது.
இனி அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் குழந்தைகள் அதிக நேரம் டிவி அல்லது போனில் படம் பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆனால், “நல்ல சினிமா என்பது ஒரு பாடம்” என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு புதிய முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.
cyclone ditwa: பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 30 நவம்பர், 2025
50 குடும்பங்களும் வீடுகளும் மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!
இலக்கியா : : ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை! நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.
இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள்.
பதுளையில் ஏற்பட்ட பேரழிவு : வெளியானது அச்சமூட்டும் அறிவிப்பு
தமிழ் மிரர் :பதுளை மாவட்டத்தில் இன்று (30) பிற்பகல் நிலவரப்படி, நிலச்சரிவு, மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளால் 71 பேர் உயிரிழந்துள்ளனர், 53 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 7,973 குடும்பங்களைச் சேர்ந்த 32,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக சிறி பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டத்தில் நிறுவப்பட்ட 181 தங்குமிடங்களில் 5,524 குடும்பங்களைச் சேர்ந்த 22,373 பேர் தற்போது தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். பேரிடர்களில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 151 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 1,073 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.
சனி, 29 நவம்பர், 2025
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யாழ் பேருந்திலிருந்து அனைவரும் மீட்பு – யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றிய ராணுவம்
தமிழ் மிரர் :கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வெள்ளி, 28 நவம்பர், 2025
கொழும்பு அடுத்த 24 மணி நேரத்தில் மூழ்கும் அபாயம் – நீரியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று நீரியல் & பேரிடர் மேலாண்மைக்கான இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இயற்கை அழிவுகளுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு
ராதா மனோகர் : இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
Collective Consciousness ... become Collective Unconsciousness. Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு கிடையாது என்பதே உண்மை
ஐராவதம் மகாதேவனும் தமிழும்!
![]() |
Giri Sundar : நவம்பர் 26, ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள். அவர் கல்வெட்டு ஆய்வாளர் என்பது பலரும் அறிந்தது. ஆனால் அவர் தினமணி ஆசிரியராகத் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனைத் தம் கட்டுரையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் தினமணி நாளிதழின் இணை ஆசிரியரும் கட்டுரையாளருமான திரு. எம். பாண்டியராஜன். அதனை இங்கே பகிர்ந்திருக்கிறேன்!
தமிழும் ஐராவதம் மகாதேவனும்!
-எம். பாண்டியராஜன்
அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.
வெள்ளக் காடாக மாறிய இலங்கை - இதுவரை 70 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு பதுளையில் மட்டும் 31 பேர் உயிரிழப்பு
bbc.com : திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





