வெள்ளி, 30 ஜனவரி, 2026

பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! - சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு..

May be an image of one or more people

 News4 Tamil Digital :  சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரிய் தொடங்கியுள்ளன. 
குறிப்பாக, தேமுதிக, பாமக ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால், அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது. 
அதனால் தான், பாஜக தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவர் தடையாக நிற்கிறார் என்கின்றனர்.

வியாழன், 29 ஜனவரி, 2026

பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தலித்துகளுக்கு கிடைக்க வேண்டிய.. அடிப்படை நீதி

UGC 2026

 tamil.oneindia.com  : டெல்லி: இந்திய உயர்கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2026 ஆம் ஆண்டுக்கான சமத்துவ மேம்பாட்டு (உயர்கல்வி நிறுவனங்களில்) விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், முன்னேறிய ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக இருந்த குறிப்பிட்ட ஜாதியினரும் கூட. பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தால் இந்த விதிமுறைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு. கல்வி நிலையங்களில், பாகுபாடு இல்லாமல் கண்ணியத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதே இந்த 2026 விதிமுறைகளின் முக்கிய நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ கொள்கை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டன.

கூட்டணி திருப்தி தரவில்லையென்றால் .. தாரளமாக விஜயுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! முடிவாக சொன்ன .....

 vikatan.com : “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்"- கிரிஷ் ஜோடங்கர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 
ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி
குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார்.
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்?

புதன், 28 ஜனவரி, 2026

சென்னையில் 5 பிகார் கொலையாளிகள்- மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொலை.. சிக்கந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஸ் உள்பட

 BBC News தமிழ் :  சென்னையில் பிகார் மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் அருகே கடந்த 26 ஆம் தேதியன்று சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அடையாறு காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளனர். முகம் மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் சடலம் இருந்துள்ளது.

அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்- மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு! Mamata Banerjee makes shocking allegation

 மின்னம்பல -Mathi :  மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், விமான விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதி சென்ற போது அவர் பயணித்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு- மஹாராஷ்டிரா

தினமலர் : மும்பை: மஹா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சிறிய ரக விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதி சடங்குகள் நாளை(ஜன29) நடக்கிறது.
மஹாராஷ்டிராவில் மும்பையில் பாராமதிக்கு 8 பேர் இருக்கை கொண்ட விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் பயணம் செ ய்துள்ளனர். பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

புலிகளின் திட்டமிட்ட முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு .. ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

May be an image of ‎text that says "‎முஸ்லம் உறவும் யாழ். முல்லிம்களின் வெளி வெளியேற்றமு் தமிழ் (களக்கில் நின்றவர்களின் நேரடி சாட்சியம்) வட்ட ลนาลใส IFTH. .EBRATIO LICE DI فان கிஹமான் பாறூக் அப் பதுல் காதர் முபீன் அவர் அவர்களின் களின் விசேட நேர்காணல் நேர் காணல் இதுவாகும். இം சந்திப்பு யா ாழ்ப்பா ணம், முஸ்லிம் கல்லூரி விதியில் ்ள அவர து விட்டில் மல 04-03-2018.A திக.தி இடம்பெற்றது. (நேர்காணலின் போது பிடிக்கப்பட்ட புகைப்படம் கணளியில் யில் ருந்து அழிந்து போனதால் இப்புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளத‎"‎

Mhm Ibrahim :   வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளினால் திட்டமிட்டே வெளியேற்றப்பட்டனர்! 
களத்தில் நின்றவரின் நேரடி சாட்சியம்! தொடர் (1)
​“யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னரும் வெளியேற்றப்படும் போதும் தமிழ் - முஸ்லிம் உறவினில் எவ்வித வீழ்ச்சியும் இருக்கவில்லை. 
மிக நெருக்கமாகத்தான் உறவு இருந்தது. 
90 காலகட்டமானது போராட்டக் காலமாகும். 
அரசாங்கத்திற்கும் - புலிகள் இயக்கப் போராளிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 80ஆம் ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்ட இயக்கங்கள் செயற்பட்டு வந்தன. 
இறுதியாகப் புலிகள் இயக்கம் டெலோ இயக்கத்தைத் தாக்கி அழித்து அரசாங்கத்துடன் பலமாக மோதும் நிலைக்கு வந்தது.
​அக் காலகட்டத்தில் இயக்கப் போராட்டத்திற்கு எதிரானவர்கள், இராணுவத்துடன் இணைந்து செயற்படுபவர்கள், தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் எனத் தமிழ் மக்களில் கனபேர் புலிகளால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

செவ்வாய், 27 ஜனவரி, 2026

துபாயில் வீடு வாங்கும் தமிழ் சினிமாகாரர்கள் அஜித் சிம்பு நயன்தாரா யுவன் சங்கர்வீ...

 மாலை மலர் : திரை உலக பிரபலங்கள் பலர் துபாயில் வீடு வாங்கி வருவது அதிகரித்து வருகிறது. தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல பாலிவுட், தெலுங்கு, மலையாள திரை உலகில் பலரும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் அஜித், நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் வீடு வாங்கி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவும் துபாயில் தற்போது சொந்தமாக ஒரு வில்லாவை வாங்கி இருக்கிறார்.
அஜித் வீட்டின் அருகே இருக்கும் இந்த ஆடம்பர வில்லாவின் விலை ரூ.57 கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருக்கிறார்.

திமுக ஆதரவா? ‘No சீட்’- ஆர்டர் போட்ட ராகுல்? கோபத்தில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

 minnambalam.com :  “பொறுமைக்கும் எல்லை உண்டு” என்பது பொருத்தம்தான் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா எந்த கட்சி தலைவரோட பொறுமையை பத்தி சொல்றீரு?
சிஎம் ஸ்டாலினின் பொறுமையைத்தான் சொல்றேன்.. இப்ப நிலைமைக்கு இன்னமும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியா முடிவாகலங்கிறதுதான் நிஜம்.. ”ஆட்சி அதிகாரத்துல பங்கு.. அதிக இடம்”னு ஸ்டாலின் கிட்ட காங்கிரஸ் ஐவர் குழு சொல்லிட்டுப் போச்சு.. ஸ்டாலினும், ”கூட்டணி ஆட்சி கிடையவே கிடையாது”ன்னு ஆ.ராசா மூலமாக ராகுல் காந்திக்கு சொல்லி அனுப்பிட்டாரு..
இதுக்கு பிறகு, கூட்டணியை உறுதியும் இறுதியும் செய்யுறதுக்கு ரெண்டு தரப்பும் எந்த மூவ்-ம் செய்யவும் இல்லை..

மாணிக்கம் தாகூர் எம்.பி : தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது

மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :  அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பற்றி, திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி, “காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.

அடையாறு ஆனந்த பவனில் வடநாட்டு பணியாளர்கள்! மெதுவாக தமிழ் உணவுகள் விடை பெறுகிறதா?

Adyar Ananda Bhavan - South Indian Best ...

 James Vasanthan :  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இதே  Facebook-ல் எழுதியிருந்தேன் - நான் A2B ரசிகன்/ஆதரவாளன் என்று. குறிப்பாக, அவர்களுடைய மதிய உணவு-சாம்பார், ரசம், கூட்டு போன்றவை.
ஆனால், அண்மையில் - கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவர்களுடைய தர அடையாளம் தேய்ந்துகொண்டே வருகிறது.
ரொம்ப நாளாக சொல்ல நினைத்தேன்... ஒரு நல்ல தமிழ்மண் உணர்வுள்ள தொழிலதிபர்... அவர் காதுகளுக்கு எப்படியும் செல்லும், சரிசெய்து விடுவார் எனக் காத்திருந்தேன். அது நிகழாததால், இந்தப் பதிவு.

திங்கள், 26 ஜனவரி, 2026

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் இல்லை - உள்ளே வரும் தேமுதிக

May be an image of dais

 one india : கூடுதல் சீட் கிடையாது.. காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்.. உள்ளே வரும் தேமுதிக.. ஆட்டம் மாறுதே
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் இல்லை, புதிய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கூட கொடுக்கலாம் என்று ஸ்டாலின் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இருப்பினும், பழைய கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க திமுக தலைமை முன்வராது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் திட்டம்

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு - பாஜக விஜய்க்கு கண்டிஷன்... ஆட்சியில் பங்கு

 K.K.   :  ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு... பாஜக பக்கம் சாயும் விஜய்... பாஜக விஜய்க்கு போட்ட கண்டிஷன்... 
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. தவெக என்கிற ஆப்சன் இருப்பதை பயன்படுத்தி கொண்டு திமுகவிடம் அதிக தொகுதிகள் மிரட்டு பெற்று விடலாம் என காங்கிரஸ் போட்ட திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் போட்ட கூச்சலுக்கு திமுக செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் திமுக உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தவெக பக்கம் செல்வதா என காங்கிரசை கட்சி ஆலோசனையில் சமீபத்தில் ஈடுபட்டது, அப்போது செல்வப்பெருந்தகை உட்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள்  திமுக உடன் கூட்டணியை தொடரவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் 1 தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது, தொடர்ந்து திமுக மீது சவாரி செய்து தான் நமக்கு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என தங்கள் தரப்பு வாதத்தை வைத்து இருக்கிறார்கள்.

”பனையூர் பண்ணையார்”, “ப்ளாக் டிக்கெட்” விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

AIADMK Vijay

  minnambalam.com - Mathi   :  அதிமுகவை விமர்சித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் ஐடி விங் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவுக்கு அடிமை கட்சி என்றும் விமர்சித்தார்.
இதற்கு அதிமுகவின் ஐடி விங் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதில்: பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்
@actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

தார் ரோட்டில் காயவைக்கும் நெல் தாரொடு சேர்த்து உண்ணவைக்கும்

May be an image of combine and text that says "P ரோட்டில் நெல்: விஷம் கலந்த சோறு -விழித்துக்கொள்!"
Atputha Piratheep : நம்ம ஊர் 'விஞ்ஞானிகள்' செய்யும் இந்த 'காப்பெட்ரோட் களம்' நெல் காயப்போடும் வைபவத்தை, கொஞ்சம் அறிவியலையும் கலந்து மூளையை களட்டி கிணத்து தண்ணீல கழுவீட்டு வாசியுங்கோ.....
இதை வாசிக்கும்போது சில 'மோட்டு மேதாவிகளுக்கு' கோபம் வரலாம். வரட்டும், அதுவும் ஒருவிதத்தில் உடம்புக்கு நல்லதுதான்!
#கார்ப்பெட் ரோட்டு தார் #tar. இது நெல் காயப்போடும் களம் அல்ல, எமன் பாசம் வீசும் தளம்!
எங்கடை சனத்துக்கு எப்பவுமே ஒரு 'விபரீத புத்தி' உண்டு. "அரசாங்கம் நமக்காக ரோடு போட்டிருக்கு" எண்டு நினைச்சியளோ? இல்ல, நம்மட ஆட்கள் அதை 'இலவச களம்' (Free Drying Floor) எண்டுதான் நினைப்பினம் விளங்குதோ மோனே??
தார்ப்பாய் வாங்க காசு செலவழிக்க மனமில்லாம, "ரோடு கறுப்பா இருக்கு, வெயில் நல்லா அடிக்கும்" எண்டு வியாக்கியானம் பேசுற கூட்டத்துக்குத் தெரியறதில்லை, அவங்கள் அரிசியோட சேர்த்து 'விஷத்தையும்' அவிச்சுச் சாப்பிடுறாங்கள் எண்டு.
அந்த 'ரோட்டு நெல்' தின்னும்போது இலவசமாகக் கிடைக்கும் 'சத்துக்கள்'...?!
1. தார் (Bitumen) எனும் ஸ்லோ பொய்சன் (Slow Poison)

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஓரளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது லீக்கான பட்டியல்

No photo description available.

 Oneindia Tamil: ஏரியா பிரிச்சாச்சு.. கமலுக்காக விட்டுக் கொடுத்த திமுக! காங்கிரஸுக்கு அதே தான்! லீக்கான திமுக லிஸ்ட்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கூட்டணியின் இறுதி வடிவம் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற பல கட்சிகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் தான் மக்கள் நீதி மய்யம் அந்த கூட்டணியில் இடம்பெற்றது.

சனி, 24 ஜனவரி, 2026

பெண் சிசுக்கொலை: பிரிட்டனில் வீசும் கள்ளிப்பால் வாடை! அசிங்கப்படும் இந்தியர்கள்! இப்படியா பண்றது?

 tamil.oneindia.com -Halley Karthik : லண்டன்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெண் சிசுக்கொலை மற்றும், பெண் சிசு கருக்கலைப்பு அதிக அளவில் இருந்தது. ஆனால், கல்வியறிவு பரவலாக்கப்பட்ட பின்னர், இந்த பிரச்சனை குறைந்தது. கல்வியறிவு காரணமாக பெண் சிசு கருக்கலைப்பு குறைந்திருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கையில், நன்கு படித்து இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்கள்.. ஆண் குழந்தைகளுக்காக.. பெண் சிசுக்களை கருவில் கலைப்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டன் செய்தி ஊடகமான, 'டெய்லி மெயில்' இது குறித்து, ஆய்வு செய்து பிரத்யேக தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 
அதன்படி, பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி பெற்றோர்களிடையே ஆண் குழந்தைக்கான தேவை அதிகமாக இருப்பதால்.. பெண் சிசு கருக்கலைப்பு அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது.

15 தொகுதிகள் கேட்ட கமல்ஹாசன்! 3 தொகுதிகள்தான் தரமுடியும் திமுக தரப்பு

No photo description available.

 தமிழ் செய்திகள் :  கோவையை மொத்தமாக பேரம் பேசிய கமல்.. ஒரே போடாய் போட்ட ஸ்டாலின்!!
 8 வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கடந்த தேர்தல்களில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் பயன்படுத்திய 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் அந்த கட்சிக்கே கிடைத்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்டு பட்டியலை வழங்கியிருக்கிறார் கமலஹாசன். அதில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைமையோ கமலஹாசனுக்கு மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இணையும் OPS & தேமுதிக ! | உடைக்கும் உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம்

மயிலாடுதுறை துர்கா ஸ்டாலின் போட்டி?

 திமுக கூட்டணியில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்று சமூக ஊடகங்களில் சில ரசமான கருத்துக்கள் அல்லது செய்திகள் உலா வருகிறது.
இவற்றில் சில செய்திகள் உண்மையாக கூட இருக்கலாம்.
அல்லது சில காரணங்களுக்காக தொடர்பு உள்ளவர்களே மெதுவாக லீக் செய்து பார்க்கும் செய்திகளாக கூட இருக்கலாம்.
தேர்தல் ஏற்பாடுகள் பெருமளவு தொடங்கி விட்டதால் இனி எந்த செய்தியும் எந்த பதிவும் இலகுவில் கடந்து போக முடியாது அல்லவா?
அதே சமயம் மிக கடுமையாக நம்பவும் முடியாது. 
Uma Pa Se  :   MK Stalin - Kolathur
EPS- Edappadi
Udhayanidhi-Chepauk/ Thivaroor 
Annamalai- ?
Vijay - ?
OPS- ?
சீமான்-?
நயினார் நாகேந்திரன்- சாத்தூர்
?- தூத்துக்குடி
?- அரவக்குறிச்சி
?- கோயம்புத்தூர் தெற்கு
?- எழும்பூர்
?- ஆலங்குளம்
What are your predictions.
Raja Rajendran Tamilnadu  : அண்ணாமலையை அருணாச்சல பிரதேசத்துக்கு ஆளுநராக நியமிக்கவிருப்பதால் இம்முறை போட்டி இல்லை.
விஜய் பனையூரில் நிற்கிறார். அங்கு பெட்ரூமில் படுத்துக் கொண்டே ஜெயிப்பார்.  - சீமான் விருதுநகர்.

(தி.மு.க. - 164, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, ம.தி.மு.க. - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 6, இந்திய கம்யூனிஸ்டு - 6, தே.மு.தி.க. - 6 (ஒரு ராஜ்யசபா சீட்), பா.ம.க. (ராமதாஸ் அணி) - 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -3, மக்கள் நீதி மய்யம் - 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2
இதுபோக, தனியரசு, வேல்முருகன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையார் போன்ற தலைவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது உபயம் - ரிபெல் ரவி ).

ஷேக் ஹசீனா! ஆவேச பேச்சு! இந்தியாவில் தஞ்சம் அடைந்த பின் முதல் முறை.. பொதுநிகழ்ச்சியில் உரை...

 tamil.oneindia.com  -Mani Singh S  :  டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். இதில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.

ஏர் இந்தியா நஷ்டத்தில் - விபத்துக்குப் பின்பு பாகிஸ்தான் வான்வழி தடுப்பு பெரிய அடி!

மின்னம்பலம் - Santhosh Raj Saravanan : Air India airline in loss of several crores of rupees Big blow after the accident
ஏர் இந்தியா நிறுவனம் இந்த நிதியாண்டில் வரலாறு காணாத இழப்பைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த விமான விபத்து மற்றும் நீண்ட கால வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் மீண்டு வர எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. மார்ச் 31 அன்று முடிவடையும் நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனம் குறைந்தது 15,000 கோடி ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோ கார்சியா - பிரித்தானியாவின் முடிவை ‘முட்டாள்தனம்’ எனச் சாடுகிறார் ட்ரம்ப்

 இலக்கியா இரு னியஸ் : இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாக்கோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியா எடுத்துள்ள முடிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனை ஒரு “மிகப்பெரிய முட்டாள்தனம்” (Great Stupidity) என்று அவர் வர்ணித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் போக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.

குன்னம் தொகுதியா வேண்டவே வேண்டாம் ... மயிலாடுதுறையா தாங்க தாங்க தாங்க

 Giri Sundar :  இரண்டு விஷயங்கள் சொல்லப்போகின்றேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையா இல்லையா என்கிற பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யாதீர்கள். ஜஸ்ட் படிச்சுட்டு போய்கிட்டே இருங்கள்.
இரண்டு தொகுதிகள்:
1.குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த குன்னம் தொகுதி. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு போக்குவரத்துத்துறை - மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சி சார் அவர்கள். 
தொகுதியில் ஒரு பிரச்சனையெனில் ""ஆய்வு'' செய்தலெல்லாம் அடுத்த்தது தான். முதலில் ""தீர்வு''. பின்னர் தான் அந்த சமாச்சாரம் நல்லவிதமாய் முடிந்ததா என்பது குறித்தான ""ஆய்வு''. தொகுதி நிதியிலிருந்து சும்மாங்காட்டியும் ""பேருந்து நிறுத்தம்'' கட்டுவதெல்லாம் அமைச்சர் தன் ""தொகுதி சேவை'' க்கான கணக்கில் கொள்வதில்லை. அதல்லாம் போகிற போக்கில் செய்து வருகின்றார். ஆனால் அவர் செய்யும் சேவை என்பதெல்லாம் பெரிய லெவலில் இருக்கின்றன. தொகுதியின் அடிப்படை தேவைகள் இனி இல்லையெனும் அளவுக்கு எல்லாமே சேச்சுரேட்டட் அங்கே. 

வெள்ளி, 23 ஜனவரி, 2026

கேரளா -பெண்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்!

 Sufan Channel  :  அன்றைய கேரளா திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில்   பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்!
பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் மேலங்கி அணிய தடை விதிக்கப்பட்டனர்.
இந்த அடக்கு முறையின் நீட்சி இன்றும் சில இடங்களில் நிலவி வருவது தெரிந்ததே.
1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)
4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.
5) இடையர் (கோனார்).
6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.