Hindu Tamil : அனுமதி பெற்றது குடோனுக்கு, கட்டியது மண்டபம்: அதிமுக நிர்வாகியின் திருமண மண்டபத்தை இடிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: திருப்புவனத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று, திருமண மண்டபம் கட்டிய விவகாரத்தில் 12 வாரத்தில் திருமண மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் அதிமுக ஒன்றிய செயலாளர் புவனேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ளார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வியாழன், 10 ஜூலை, 2025
அதிமுக நிர்வாகியின் திருமண மண்டபத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! அனுமதி பெற்றது குடோனுக்கு
மாத்தையாவான மல்லை சத்யா- வைகோ பகிரங்கப் பேட்டி! சத்யா ஆவேச பதில்!
மின்னம்பலம் : பிரபாகரனுக்கு எதிராக மாத்தையா எவ்வாறு துரோகம் செய்தாரோ, அதேபோல தனக்கு எதிராக மல்லை சத்யா துரோகம் செய்திருக்கிறார் என்ற தொனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடுத்த பேட்டி அக் கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. vaiko Mallai Sathya
கடந்த ஜூலை 3 ஆம் தேதி மின்னம்பலத்தில், ’திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் ஜூன் 29ஆம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, பொதுச் செயலாளர் வைகோ நேருக்கு நேராக கடுமையாக விமர்சித்து பேசியதை பதிவு செய்திருந்தோம்.
ரிதன்யா தற்கொலை: ரிதன்யாவின் அம்மா சொன்ன இரகசிய தகவல்; செக்ஸாலஜிஸ்ட் விளக்கம்!
vikatan : ”மனைவியின் கையை, காலை கட்டிப்போட்டுவிட்டு, அடித்தபடி செக்ஸ் செய்வார்கள். இப்படி செய்தால்தான் அவர்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்கும்.”
வரதட்சணைக் கொடுமையை ஒட்டிய தற்கொலை என பதைபதைக்க வைத்த ரிதன்யா மரணம், அதன்பிறகு அவருடைய அம்மாவின் பேச்சுகளின் வழியே அதில் ‘மேரிட்டல் ரேப்’ (‘Marital rape’) என்கிற பிரச்னை இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது தெரிய வந்தது.
இதற்கு முன்னரும் எத்தனையோ பெண்களின் உடலையும் மனதையும் நோகடித்த பிரச்னைதான் இது.
புதன், 9 ஜூலை, 2025
China ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஆதரவாளர்.. சீனாவின் அடுத்த அதிபர் யார்? லிஸ்ட்டில் 2 தலைகள்.. பின்னணி
BBC : பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் பொதுவெளியில் அதிகம் வருவது இல்லை.
சீனாவில் அதிபராக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.
இதனால் ஜி ஜின்பிங் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய அதிபராக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஜாங் யூக்ஸியா மற்றும் வாங் யாங் ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளனர்.
செவ்வாய், 8 ஜூலை, 2025
குலக்கல்வியை இலங்கையில் முன்னெடுத்த தமிழரசு கட்சி - எஸ்ஜேவி செல்வநாயகம் - 1960
![]() |
ராதா மனோகர் குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட இயக்கம்!
திங்கள், 7 ஜூலை, 2025
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்
![]() |
ஜாப்னா முஸ்லீம் : இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்
“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.”
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 வீடுகளை திறந்து வைத்த முதல்வர்-
மாலை மலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம்,
17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அமேரிக்கா டெக்ஸாஸ் வெள்ளப்பெருக்கு பலர் உயிரிழப்பு சேதம் அதிகம்
tamil.oneindia.com -Rajkumar : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பருவ மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. இதில் 21 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், டெக்சாஸ் வெள்ளம் இதுவரை கண்டிராத பேரழிவு என வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
அமெரிக்காவின் தெற்கு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் புயலும் வீசி வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ஞாயிறு, 6 ஜூலை, 2025
மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் தம்பி நவீன்குமார்-!
மின்னம்பலம் - மதி : திருப்புவனம் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு இன்று ஜூலை 6-ந் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Custodial DeathAjith Kumar Naveenkumar
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், திருப்புவனம் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சனி, 5 ஜூலை, 2025
தமிழ்நாட்டின் சாவி குருமூர்த்தி மூலம் குஜராத்திகளின் கைகளில்தான் இருக்கிறது
![]() |
சூர்யா சேவியர் : குருமூர்த்தி எனும் வெப்பன் சப்ளையர்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்த பலரையும் ED மூலம் மிரட்டல் விடுத்து ஒருங்கிணைக்கப்பவர்.
திமுக ஆட்சிக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம், வருவாய்துறை, அமலாக்கத்துறை மூலம் தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்துபவர்.
சுருங்கச் சொன்னால் ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ்நாடு வெப்பன் சப்ளையர்.
அமித்ஷா கடந்தமுறை வந்த போது குருமூர்த்தியின் இல்லம் சென்று திட்டத்தை இறுதிப்படுத்தினார். அதன்படியே அண்ணாமலை அகற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவரானார்.
உலக புகழ் இலங்கையின் முத்து குளிப்பில் தென்னிந்திய தொழிலாளர்கள்
![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமல்ல கேரளம் ஆந்திரம் கர்நாடகம் ஒடிஷா போன்ற மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .
உதாரணமாக இலங்கையின் கரையோர பகுதிகள் முத்து குளிப்பில் உலக புகழ் பெற்ற இடங்களாக இருந்திருக்கிறது
வடமேற்கு பகுதியில் உள்ள மன்னார் கற்பிட்டி நீர்கொழும்பு போன்ற பகுதிகளும் கிழக்கு மாகாண மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் முத்து குளிப்பு பெரிய அளவில் நடந்திருக்கிறது.
சுமார் 1960 ஆம் ஆண்டுவரை இத்தொழில் நடந்திருக்கிறது.
அரபு நாடுகளில் இருந்து முத்துக்களை வாங்குவதற்கும் முத்து குளிக்கவும் கூட ஏராளமானோர் வந்திருக்கிறார்கள்
இவர்களின் வழித்தோன்றல்கள் கூட கணிசமான அளவில் இலங்கையில் தங்கி விட்டார்கள்.
அதிக அளவிலான முத்து குளிப்பவர்கள் தமிழகம் மாத்திரம் இல்லாமல் ஆந்திராவில் இருந்தும் வந்திருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலும் முத்து குளிக்கும் காலம் முடிந்த பின்பு திரும்பி போய்விடுவர்கள்
வெள்ளி, 4 ஜூலை, 2025
ஈரான் தோண்டும் சுரங்கம்… எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை… இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? us sources say iran
Minnambalam Desk : கடந்த மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் 12 நாள் யுத்தம் நடைபெற்றது.
இந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி ஈரானின் முக்கிய அணு நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் கோபமடைந்த ஈரான் ஜூன் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் முன்மொழிவைத் அறிவித்துள்ளது.
ஆனால், இது கட்டாயமான தீர்மானம் அல்ல. இறுதியான முடிவை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்தான் எடுக்க வேண்டியதாகியுள்ளது.
இதற்கிடையில், பாரசீக வளைகுடாவில் ஈரானிய இராணுவ கடற்படை கண்ணிவெடிகளை கப்பல்களில் ஏற்றி மிகப்பெரிய கடற்படை சுரங்கங்கள் தோண்டுவதாகவும், மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஈரான் தயாராகி வருவதாகவும் அமெரிக்காவின் இரண்டு முக்கிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ
![]() |
மின்னம்பலம் : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை (ஜூலை 2) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். Link with DMK Vaiko warns Mallai Sathya
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். இந்த அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் ஒரு வார்த்தை ஒரு விமர்சனம் நான் வைத்ததில்லை, வைக்கவும் மாட்டேன்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே திமுக ஆட்சி அமைக்கும். நாங்கள் திமுக கூட்டணியில் நீடிப்போம்” என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.
வியாழன், 3 ஜூலை, 2025
பலரை ஏமாற்றிய ஒரு நாள் மனைவி நிகிதாவின் தலைமை செயலக செல்வாக்கு
![]() |
![]() |
![]() |
Vigash Billa : திருபுவனம் அஜித் குமார் கொலை வழக்கில் திருடன் கையிலேயே சாவி கொடுக்க பட்டுள்ளதா? வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யார் என தமிழகம் தேடிவரும் நிலையில்,
அது சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போதைய மத்திய அரசின் IAS அதிகாரி G.லதா என்பதாக கூறப்படுகிறது
சம்பவம் நடந்த அன்று சட்டம் சட்டம் ஒழுங்குADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜி பணம் சுமார் 200 கோடி காணாமல் போன வழக்கை விசாரணை செய்ய மதுரையில் இருந்ததாகவும்,
புகார் அளித்த பெண்ணின் தந்தை ஒரு துணை ஆட்சியராக பணிபுறிந்தவர் IAS அதிகாரி லதாவும் அவரும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்
அஜித் - போலீஸ் கொலை வீடியோ எடுத்த சக்திஸ்வரன் : சாட்சிகள் பயத்தில் இருக்கிறோம்; நீதிமன்றத்தை நாடுவோம்!
நக்கீரன் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 01.07.2025 அன்று நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில், 'மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்' எனத் தெரிவித்து இந்த வழக்கை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதன், 2 ஜூலை, 2025
ஒரு அதிகாரிக்கு 10 கார் தந்தால் இப்படிதனதான் நடக்கும்! அரசு பணம் மக்கள் பணம் அல்லவா ?
Kulitalai Mano : ஒரு குற்றசெயலை செய்ய புறப்பட்ட ஒரு கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு
அரசு கார் அரசு டிரைவரை ஒரு ஏடிஜிபி அனுப்புகிறார் என்றால் யாருக்கும் பயப்பட வேண்டி அவசிய நிலையில் அவர் இல்லை என்ற நினைப்பில்தானே அனுப்பினார் ?
தவறு ஏடிஜிபி மேல் அல்ல அத்தகைய சூழலில் அதிகார வர்க்கத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்
யார் ஆட்சி செய்தாலும் நேற்று இன்று நாளையும் நடக்கும்
வேற்று மாநில ஐபிஎஸ் யாராவது குடும்பத்துடன் இங்கே சுற்றுலா வந்தாலும் அரசு காரை வள்ளலாக அனுப்புகிறார்கள்
ஒரு அதிகாரிக்கு 10கார் தந்தால் இப்படிதனதான் நடக்கும் அரசு பணம் மக்கள் பணம் அல்லவா ?
பதவி காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் கூட மக்களுக்கு பயப்படுகின்றனர்
ஆனால் இந்த அதிகாரிகள் ஒரு அரசனின் சுகபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள்
இந்தியாவுக்கு 500 சதவிகிதம் வரி - ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவோடு வர்த்தக உடன்படிக்கை வைத்துள்ள நாடுகளுக்கு
மின்னம்பலம் - Selvam : இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக லிண்ட்சே கிரஹாம் ஏபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
“நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உங்கள் பொருட்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மசோதா ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவும் சீனாவும் 70 சதவிகிதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
விஸ்வரூபமான அஜித்குமார் லாக்கப் மரணம்-யார் அந்த எஸ்.பி ‘சார்’?
![]() |
மின்னம்பலம் : திருப்புவனம் அஜித்குமார் மரணத்தின் பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஜூன் 27-ந் தேதியன்று மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மூதாட்டி 76 வயது சிவகாமி, மகள் மருத்துவர் நிகிதாவுடன் சாமி தரிசனம் செய்ய காரில் வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோவில் காவலாளி அஜித்குமார், வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது காரை பார்க் செய்ய அஜித்குமாரிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் தமக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் வேறொருவர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்துள்ளார்.
செவ்வாய், 1 ஜூலை, 2025
திராவிட கட்டிட அமைப்பாக உருவான யாழ்ப்பாண நூலகம்! மேயர் அல்பிரட் துரையப்பாவின் உரை 11 -10 -1959
![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ்ப்பாண பொது நூலகத்தை திறந்து வைத்த மேயர் திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் ஆற்றிய உரை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
அன்றய இலங்கை தமிழ் பத்திரிகைகள் கடுமையாக இருட்டடிப்பு செய்த செய்தி இது.
யாழ்ப்பாண தொகுதியில் மட்டுமல்லாமல் முழு வட இலங்கையிலும் அரசியல் ரீதியாக வேகமான வளர்ச்சியை கொண்டிருந்தார் திரு அல்பிரட் துரையப்பா!
![]() |
அவரை அரசியல் அரங்கில் இருந்து நீக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தை ஈழநாடு சுதந்திரன் போன்ற பத்திரிகைகளின் இது போன்ற இருட்டடிப்புகள் தெளிவாக காட்டுகிறது
யாழ்ப்பாண பொது நூலகத்தை பற்றிய செய்திகளே இந்த பத்திரிகைகளில் பெரிதாக இடம் பெறவில்லை.
இவர்களின் இந்த இருட்டடிப்பையும் மீறிய அதிசயமாக ஹிந்து ஆர்கன் (Hindu Organ 10 - 11 1959 ) என்ற ஆங்கில பத்திரிகையில் மட்டும் இது வெளியாகி இருந்தது.
அஜித்தை காவல்துறையினர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ
மாலைமலர் : : தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார்.
ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.
திங்கள், 30 ஜூன், 2025
கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் - காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? சகோதரர் அளித்த முழு விவரம்
பீபீ சி - பிரபுராவ் ஆனந்தன் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். .
சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை அஜித்குமார் மரணம்.. காட்டுமிராண்டித்தன நடவடிக்கை.. போலீசாரை கைது செய்க.. சண்முகம் ஆவேசம்!
tamil.oneindia.com -Yogeshwaran Moorthi : சென்னை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர், அந்த இளைஞரை அடித்தே கொன்றுள்ளனர்.
காவல்துறையினர் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார்.
ஞாயிறு, 29 ஜூன், 2025
கொல்கொத்தா பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழர்களின் ஆங்கில மேலாண்மை குறிவைக்கிறார் அமித் ஷா
ராதா மனோகர் : தமிழர்களின் ஆங்கில மேலாண்மை குறிவைக்கப்படுகிறது!
நாம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது வெறும் உளறல் அல்ல. நயவஞ்சகம்!
குறிப்பாக தமிழகத்தின் ஆங்கில மேலாண்மையை அழித்து ஒழிப்பதற்கான முதல் படிதான் இந்த நயவஞ்சக பேச்சு.
கல்வி பொருளாதாரம் மருத்துவம் மட்டுமல்லாமல் தமிழர்கள் கடல் கடந்தும் அகல கால் வைப்பதற்கும், தமிழகத்தின் இரு மொழி கொள்கையும் அதன் காரணமாக பெற்ற ஆங்கில மேலாண்மையும் முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் ஆங்கில மேலாண்மையை ஒழித்து விட்டால் மட்டுமே தமிழர்களை இனி அடிமை படுத்த முடியும் என்ற முடிவுக்கு வடநாட்டு சங்கிகள் வந்துவிட்டார்கள்.
இந்த நிமிடம் வரை அந்த இலக்கை நோக்க்கி பயணிக்க முயற்சி செய்கிறார்கள்.
சனி, 28 ஜூன், 2025
“ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” - அன்புமணி ஆவேசம்
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியது: “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?