வியாழன், 2 பிப்ரவரி, 2023

ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்ட எந்த உடன்படிக்கையையும் நான் மதிக்க மாட்டேன்.” – சஜித் பிரேமதாச

 தேசம்நெட் - அருண்மொழி : மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியது அவசியம். ஆனால் ஒப்பந்தங்கள் நேராக இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் மாத்திரமே தேசத்திற்கு நன்மை பயக்கும்.


எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு அனைத்தையும் செய்து வருகின்றது.  எந்தவொரு நிபந்தனைகளுக்கும் இணங்கவும் அவர்கள் தயாராகவுள்ளனர்.
தேசத்தின் குடிமக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் மதிக்க எனது  கட்சி கடமைப்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: