திங்கள், 30 ஜனவரி, 2023

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை எதிரொலி: கடும் பாதுகாப்பு- வாகனங்கள் சோதனை தீவிரம்

 மாலைமலர் : சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பகுதிகளை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று முதல் மாமல்லபுரம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பபடுகிறது. ஹோட்டல், ரிசார்ட், விடுதி, ஹோம் ஸ்டேகளில் தங்கியிருக்கும் அனைவரின் விபரங்களும் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். புராதன சின்னங்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிப்ரவரி 1ம் தேதி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. புராதன சின்னம் அருகே சாலையோர கடைகள் நடத்தவும் அனுமதி இல்லை. தற்போது மாமல்லபுரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: