சனி, 6 ஆகஸ்ட், 2022

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் ஆவியுடன் பேசுவதாக பிரபல ஆவி நிபுணர் சார்லி சிட்டன்டன் வீடியோ Charlie Chittenden Paranormal

ivakar M | Samayam Tamil :  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற அனுமதி பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் ஆவியுடன் பேசுவதாக பிரபல ஆவி நிபுணர் சார்லி சிட்டன்டன் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் பல நாடுகளில் மர்மமாக உயிரிழந்தவர்களின் ஆத்மாவோடு பேசுவதாக கூறி பல்வேறு வீடியோக்களை போட்டுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா முதல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் வரை அவரவர் ஆவிகளுடன் பேசுவதாக வீடியோ போட்டு தமிழ் ரசிகர்களிடமும் சார்லி சிட்டன்டன் பிரபலமாகியுள்ளார்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் சூழலில் சார்லி சிட்டன்டன் ஸ்ரீமதியின் ஆவியிடம் பேசுவதாக வீடியோ போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை: