வெள்ளி, 1 மே, 2020

இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு -உள்துறை அமைச்சகம்

 தினத்தந்தி :  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்  வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: