சனி, 2 மே, 2020

ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்!

ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்!மின்னமபலம் : ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பயனடைந்த அதிமுக உறுப்பினர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா மற்றும் அதன் காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக கிராமம், நகர்ப்புறம் என பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவக் கூடிய வகையில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தினை திமுக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் திமுகவினர் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு நல்லித் தோட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ், ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த வா ஒன்றிணைவோம் என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அதிமுக உறுப்பினர். ஆனால், தற்போது அதை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெறும் ஆயிரம் ரூபாய், அழுத்து போன அரிசி, இதை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், “நீங்கள் கூறிய 5000 ரூபாய் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்த கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்டச் செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்” என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஸ்டாலின், “ஒன்றிணைவோம் வா மூலம் உதவி பெற்ற பல இலட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அதிமுக உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. ஒன்றிணைவோம் என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான் .திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எழில்<

கருத்துகள் இல்லை: