ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

துக்ளக் மன்னன் கி.பி 1324 முதல் 1351 வரை இந்தியாவின் வடக்குப் பகுதிகள் மற்றும் டெக்கான் பகுதிகளையும் .... வரலாறு

Susairaj Babu : இனிய இரவு வணக்கம் நண்பர்களே,.
இன்றைய நாளில் முஹம்மத் பின் துக்ளக்கின் நிர்வாக திறமையை படிப்போமா?
வங்காளத்திற்கு படையெடுத்துச்சென்ற முகமது பின் துக்ளக்கின் தந்தை கியாசுதீன் துக்ளக் மாபெரும் வெற்றியுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வரவேற்க பிரம்மாண்ட மண்டபம் ஒன்றைக் கட்ட நினைத்தார் முகமது பின் துக்ளக். இந்த விஷயமாகத்தான் மீர் இமார்த்திற்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. கலையில் கைதேர்ந்தவரான இமார்த் பிரம்மாண்ட வெற்றி மண்டபத்தை அமைத்தார். வரவேற்பு தடபுடலாக நடந்தது கியாசுதீனுக்கு. அலங்கார விளக்குகள், நவரத்தினங்கள் பதித்த விரிப்புகள் என காசை வாரி இரைத்திருந்தார் இளவரசர். இவற்றைக் கண்ட மாத்திரத்தில் சொக்கிப்போய் நின்ற மன்னர் கியாசுதீனை கை பிடித்து இருக்கையில் அமரச் சொன்னார் இளவரசர் முகமது பின் துக்ளக். அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட முகமது, தூரத்தில் நின்றிருந்த இமார்த்தைப் பார்த்து தலையை அசைத்த சில வினாடிகளில் அந்த விபரீதம் நடந்தது. மண்டபத் தூண்கள் சரிந்து விழுந்தன மன்னர் மரித்துப் போனார்.
. கில்ஜி வம்சத்தை முடிவிற்குக் கொண்டுவந்த பெரும் வீரரான கியாசுதீன் துக்ளக்கை இப்படி தீர்த்துக்கட்டிய பிறகு பதவிக்கு வந்தார் முகமது பின் துக்ளக்.

கி.பி 1324 முதல் 1351 வரை இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகள் மற்றும் டெக்கான் ஆகியவற்றை துக்ளக் ஆண்டார். இவர் தன்னுடைய தந்தை கியாசுதீன் துக்ளக்கிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்து சர்ச்சைகள் நிறைந்த மன்னராக இருந்தார். டெல்லியை ஆண்ட சுல்தான்களிலேயே அதிகளவு இலக்கிய, மத மற்றும் தத்துவக் கல்வியை பெற்ற ஒரே மன்னர் இவர்தான். இவரை ஏன் புத்திசாலியான முட்டாள் மன்னர் என்று அழைக்கிறார்கள்?
டோக்க நாணயம்
இவர் டோக்கன் நாணயங்களை அறிமுகம் செய்தார். 14 ஆம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் வெள்ளி பற்றாக்குறை இருந்தது. பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும் வெள்ளி நாணயங்களின் மதிப்புக்கு இணையாக அவர் செப்பு நாணயத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் செப்பு நாணயத்தை வாபஸ் பெற்றார் மற்றும் அரச கருவூலத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுடன் செப்பு நாணயங்களை பரிமாற்றிக் கொள்ளுமாறு மக்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
சீர்திருத்தங்கள் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட நிதி சிக்கலை சமாளிக்க இவர் கங்கை மற்றும் யமுனை நதிக்கரையில் இருந்த வண்டல் நிலங்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதிக வரிச்சுமை காரணமாக, மக்கள் தங்கள் விவசாயத் தொழிலைக் கைவிட்டு, கொள்ளை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டனர். இருப்பினும், பெரும் பணத்தை இழக்கும் சூழ்நிலையை சமாளிக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையில் அவரது ஆட்சி பல பஞ்சங்களையும் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது பின் துக்ளக் பிரச்சினையை உணர்ந்தபோது அது மிகவும் தாமதமாகி இருந்தது. அவர் அவர்களை தங்கள் வீடுகளை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் மற்றும் அவர்களின் பொருளாதார தரத்தை புதுப்பிக்க அனைத்து வகையான விவசாய உதவிகளையும் கடன்களையும் வழங்கினார். அவரது வரிவிதிப்புக் கொள்கையின் நோக்கம் இராணுவ வளங்களை அதிகரிப்பதாகும். இது அடையப்படவில்லை, மாறாக அவர் ஒரு பைத்தியக்காரர் என்று மக்களால் கருதப்பட்டார்.
சுல்தானுக்கு பரவலான வெற்றியின் கனவு இருந்தது. அவர் இரானயும், ஈராக்கையும் வென்றெடுக்கத் தேர்ந்தெடுத்தார் மற்றும் இந்த காரணத்திற்காக ஒரு பிரம்மாண்டமான படையை அனுப்பி வைத்தார். ஆனால் இவரின் திட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.
சீன தாக்குதல்களை எதிர்கொள்ள இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேபோல், குமாவோன்-கர்வால் மாவட்டத்தில் உள்ள சில தலைசிறந்த பழங்குடியினருக்கு எதிராக டெல்லி சுல்தானகத்தின் கீழ் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது என்றாலும் தோல்வியில் முடிந்தது.
முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஆட்சி செய்வதற்காக, அவர் தனது தலைநகரை டெல்லியில் இருந்து தௌலததாபாத்திற்கு மாற்றினார். டெல்லியின் ஒட்டுமொத்த மக்களுக்கும், அறிஞர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர் உள்ளிட்ட அரச குடும்பத்தினரையும் புது தலைநகருக்கு குடியேறும்படி உத்தரவிட்டார். இந்த இடமாற்றத்தின் போது பலரும் இறந்தனர், மக்கள் தௌலததாபாத்தை அடைந்த போது அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார். மங்கோலிய படையெடுப்பிலிருந்து ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக தலைநகரை மாற்ற அவர் விரும்பினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் தலைநகரை

கருத்துகள் இல்லை: