ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கன்னட பகுத்தறிவு எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை! பாஜக கும்பலின் வெறியாட்டம்? Kannada writer M.M. Kalburgi shot dead


இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிகர கன்னட எழுத்தாளரும், கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி மர்மநபர்களால் இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாஜகவின் ஆதரவு அமைப்பான பஜ்ராங்க்தள்  மீதுதான் முதல் சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்திற்கு வந்த மர்மநபர்கள் சிலர், இன்று காலை அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவை திறந்த கல்பர்கி மீது, அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்பர்கியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2006-ம் ஆண்டு ‘மார்கா 4’ என்ற இவரது 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புக்காக, சாகித்ய அகாடமி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. பம்பா, ருபதுங்கா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com 

கருத்துகள் இல்லை: