புதன், 29 ஏப்ரல், 2015

ரூபா மஞ்சரியின் சிவப்பு’. 2 வருடமாக தணிக்கை சிக்கல்

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. 2 வருடமாக இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. இது குறித்து இயக்குனர் சத்ய சிவா கூறும்போது, ‘இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தப்பிப்போக நினைக்கின்றனர். அப்படி முடியாதவர்களின் வலி, காதலை உள்ளடக்கிய படம்தான் இது. இலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தப்பட்ட படம் என்றாலே தணிக்கையில் சான்றிதழ் கிடைப்பது கடினம். இதனால் பல முறை இப்படத்துக்கு ரீ ஷூட் நடத்தப்பட்டது. அதனால்தான் இதன் ரிலீஸ் தாமதமானது. முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. எஸ்.எஸ்.மீடியா தேசிகன் ரிலீஸ். என்.ஆர்.ரகுநந்தன் இசை. மது அம்பாட் ஒளிப்பதிவு’ என்றார். முக்கிய வேடத்தில் நடிக்கும் ராஜ்கிரண் கூறும்போது, ‘இயக்குனர் சொன்னதுபோல் இலங்கை தமிழர் பிரச்னை படத்துக்கு சான்றிதழ் கிடைப்பது கடினமானதுதான். தணிக்கையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: