ஞாயிறு, 21 மார்ச், 2010

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் லைன் வரிசை வீட்டுமுறையை இல்லாதொழித்து

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் லைன் வரிசை வீட்டுமுறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனிவீடுகளை அமைத்துக் கொடுக்க தேசநிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப்புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள் ளதாகவும் தேசநிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செயலாளர் திருமதி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஆனால், ஊடகங்களில் பெரிதாகத் தகவல் கள் வெளிவருவதில்லை எனத் தெரிவித்துள்ளார். குடிநீர், சுகாதாரம், மலசலகூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக்கொடுத்து வருவதாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்டகாலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்தநிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: