செவ்வாய், 23 மார்ச், 2010

மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் கற்பழிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கற்பழிப்பு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்.

2008 ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் தவல் பபட் சிறுமியைக் கற்பழித்தான். இதுகுறித்து தகவல் வெளியில் ரகசியமாகப் பரவியுள்ளது. இதையடுத்து 71 வயதுக் கிழவன் ஒருவன், சிறுமியை மிரட்டி கற்பழித்துள்ளான்.

இதேபோல மேலும் பலரும் சிறுமியை சூறையாடியுள்ளனர். இந்த அக்கிரமங்களை எல்லாம் தவல் பபட் செல்போனில் படமாக்கி வைத்துள்ளானாம். அதைக் காட்டி மிரட்டி சிறுமியை பேச விடாமல் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில்தான் ஜோத்சனா வீட்டினருக்கு இந்த அக்கிரமச் செயல் தெரிய வந்து அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். தற்போது அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கெடுத்ததாக 71 வயது கிழவனார் உள்பட நான்கு பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தவல் பபட் உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறுமியை, தவல் முதல் முறையாக கற்பழித்தபோது கத்தியைக் காட்டி மிரட்டிக் கற்பழித்துள்ளான். அதன் பின்னர் தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் எல்லாம் அக்கிரமமாக நடந்து கொண்டுள்ளான் தவல்.

ஒருமுறை தவலும், அவனது நண்பன் ராஜு சர்மா என்பவனும், சிறுமியை குர்லாவில் உள்ள ஒரு லாட்ஜுக்குக் கூட்டிக் கொண்டு போய் கற்பழித்துள்ளனர். அப்போதுதான் அதை செல்போனில் படமாக்கியுள்ளான் தவல்.

அதன் பின்னர் மற்ற 7 பேரும் (அனைவரும் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள்) சிறுமியை சீரழித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: