திங்கள், 13 ஏப்ரல், 2026

வவுனியா ஓமந்தை இந்திய ராணுவ முகாமில் புலிக்கொடி!. 7-august 1987


 ராதா மனோகர்
: ராஜிவ் ஜேயார் ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை வந்த  இந்திய அமைதி படையை புலிகள்  கோலாகலமாக வரவேற்றார்கள்!
இவர்களுக்கு இடையே ஒரு கல்யாண வீட்டுக்கு நிகரான கொண்டாட்டம் இருந்தது 
இந்திய ஹெலிகாப்டர்களில் தங்கள் தளபதியின்  மணப்பெண்ணை அழைத்து வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது.
பரஸ்பரம் உணவு பரிமாறினார்கள். 
இந்திய படையினரும் கூட  புலிகளை இட்டு பெருமிதம் கொண்டிருந்தனர் 
ஒருவேளை புலிகளை ஒரு இந்து வீரர்கள் என்ற நோக்கத்தில் அணுகினார்களோ தெரியவில்லை. 
இவர்களுக்கு இடையேயான அந்த தேன்நிலவு எப்படி கசந்தது?
பச்சையாக சொன்னால் புலிகளுக்கே உரித்தான பேராசையும் முரட்டுத்தனமும் கத்துக்குட்டித்தனமும்  எல்லையற்ற பாசிச குணாம்சம் அதில்  அடங்கி இருக்கிறது!   
.7-august 1987 -ஈழநாடு பத்திரிகை 
வவுனியாவில் இந்திய இராணுவத்தினர் 
ஓமந்தை ராணுவ முகாமில் புலிக்கொடி!

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள்? - பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி

 hindutamil.in - ஒய்.டேவிட் ராஜா  : மதுரை: “நீங்கள் ஏன் பதவி இறக்கப்பட்டீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்” என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து புதிய நீதி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆஷா போஸ்லே காலமானார் – 9 வயத்தில் இருந்து 92 வயது வரை

 BBCTamil  : 9 வயதில் தொடங்கிய இசைப் பயணம்.. யார் இந்த ஆஷா போஸ்லே.? கடந்துவந்த பாதை!
இசை உலகில் கொடிக்கட்டிப்பறந்த பாடகி ஆஷா போஸ்லே தன்னுடைய 92 வயதில் வயதுமூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
ஆஷா போஸ்லே.. இந்திய இசையின் மயக்கும் குரல். இசை உலகில் பல சாதனைகள் புரிந்த குரலை இன்று மரணம் மௌனமாக்கி இருக்கிறது. ஏகப்பட்ட பாடல்கள் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் மனங்களிலும் இடம்பெற்றவர், வாழ்க்கை பயணமும், இசைபயணமும் கவனிக்க தக்கது.

டொமினிக்கன் குடியரசும் மிராபேல் சகோதரிகளும் - வரலாறு

 Neander Selvan :  டொமினிக்கன் குடியரசை 31 ஆண்டுகள் (1930 - 1961) தனது இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தவர் ரஃபேல் ட்ருஜிலோ. சுமார் 50,000 பேரின் கொலைகளுக்குக் காரணமான இவர், பயப்பட்டது இருவருக்கு மட்டுமே. ஒன்று கத்தோலிக்க திருச்சபை, இரண்டு மிராபெல் சகோதரிகள். 
டொமினிக்கன் ரிபப்ளிக்கின் சகல சக்திகளும் வாய்ந்த அந்தச் சர்வாதிகாரி ஒருமுறை, "எனக்கு இருக்கும் இரண்டு பெரிய பிரச்சினைகள் கத்தோலிக்க திருச்சபையும், மிராபெல் சகோதரிகளும்தான்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் பயந்தது போலக் கத்தோலிக்க சபை அவரை வீழ்த்தவில்லை, மிராபெல் சகோதரிகள் தான் வீழ்த்தினார்கள்.

நல்லதொரு சைவ உணவகம் KMS மெஸ்

No photo description available.
No photo description available.

 ந. சரவணன் :  மதிய உணவிற்கு அருகில் உணவகம் இருக்கிறதா என்று அலுவலக தோழர் ஒருவரிடம் கேட்க விபரம் கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் கூறிய உணவகம் இன்று விடுமுறை. அருகிலிருந்தவர்களிடம் வேறு உணவகம் இருக்கிறதா என கேட்க, இன்னும் சற்று முன்னே செல்லுங்கள் இடப்புற ஒழுங்கையில் உணவகங்கள் இருக்கிறது என்றார் ஒருவர். 
சென்று பார்த்தால், சுமாரான முகப்பு தோற்றத்துடன் KMS மெஸ் என இருந்தது. சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு பின்புறம் இருக்கும் பெரும்பாலான கட்டிடங்கள் மேன்சன்களாக இருப்பதால் அநேக மெஸ் இருக்கிறது. சென்னை வந்த ஒரு வாரத்தில் பல்வேறு மெஸ்களில் சாப்பிட்டு மெஸ் இப்படிதான் இருக்கும் எனும் அனுமானம் இருந்தது. திருச்சி அனுபவமும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் மெஸ் அனுபவமும் இருந்ததால் கற்பனையில் இப்படித்தான் இருக்கும் சமாளித்துக்கொள்ளலாம் என்று சென்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கியதும் நெய் பருப்பு வேண்டுமா என கேட்டு அதற்கும் தனியாக டோக்கன் கொடுத்தார் ஒருவர். ஒரு இடம் காலியாக இருக்க அங்கு அமரப்போகையில், காத்திருங்கள் அனைவரும் எழுந்த பின் அமரலாம் என்றார். பசி அதிகமாக இருந்தது. டோக்கன் வாங்கியாயிற்று என அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன்.

இந்திய நிரந்தர விசா உள்ள இலங்கையர்களுக்கு (OCI card) தமிழகத்தில் வேலை வாய்ப்பு

 Sudee Subee (சுடீ சுபீ) திறமைகளை இணைக்கிறது, எதிர்காலத்தை உருவாக்குகிறது
இலங்கை கடவுச்சீட்டு மற்றும் OCI அட்டைதாரர்களுக்கு பிரத்தியேகமானது
இந்தியாவில் உள்ள எங்கள் தயாரிப்புக் குழுக்களில் சேர ஆர்வமுள்ள நபர்களை நாங்கள் தேடுகிறோம்
நீங்கள் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநராக இருந்தாலும் சரி அல்லது ஊக்கமுள்ள புதியவராக இருந்தாலும் சரி, உங்களுக்கென எங்களிடம் இடம் உண்டு.
பதவிகள் அனுபவம் சம்பளம்
உற்பத்தி மேலாளர் 5 - 10 ஆண்டுகள் 40,000- 90,000
சரக்கு மேலாளர் 2 - 5 ஆண்டுகள் 20,000 - 35,000
மேற்பார்வையாளர் 3 - 6 ஆண்டுகள் 18,000 - 30,000
இயந்திர இயக்குபவர் 2- 5 ஆண்டுகள் 15,000 -25,000
தரச் சரிபார்ப்பாளர் 1-3 ஆண்டுகள் 12,000 -18,000
தையல்காரர் / தையல் வேலை 1-3 ஆண்டுகள் 12,000 -20,000
பொதியிடல் பணியாளர் 0- 2 ஆண்டுகள் 10,000 - 14,000
உதவியாளர் / இயக்குபவர் 0-1 ஆண்டு 10,000 - 15,000
நன்மைகள் மற்றும் தகவல்
வழங்கப்படும் பயிற்சி : புதியவர்களுக்கு அனைத்து திறன் சார்ந்த வேலைகளுக்கும் முழுமையான பயிற்சி வழங்கப்படும்
தகுதி : அனைவருக்கும் பொருந்தும் செல்லுபடியாகும் OCI அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைக் கொண்ட அனைத்து இலங்கை குடிமக்களும் 
பணிபுரியும் இடம் : இந்தியா ( இடமாற்றத்திற்கான உதவி வழங்கப்படும்) 
விண்ணப்பிக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும் : +91 9843680194

சனி, 11 ஏப்ரல், 2026

“சுந்தர்.சி முதலில் சென்றது ஆர்எஸ்எஸ் அலுவலகம்தான்! அமைச்சர் பிடிஆர் விவரிப்பு

 hindutamil.in -ஒய்.டேவிட் ராஜா  :  மதுரை: "சுந்தர்.சி 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால், அவருக்கு எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை” என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பேசியுள்ளார். மேலும், சுந்தர்.சி-யை ‘சினிமா சங்கி’ என்று அவர் குறிப்பிட்டார்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிரம்மர்புரம், முரட்டன் பத்திரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐசியுவில் வானதி சீனிவாசன் – நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy  :  பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்த வானதி சீனிவாசன் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 
நேற்று பிற்பலில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஜனநாயகனை லீக் செய்த முக்கிய நபர் ! ஜக்கி வாசுதேவ் control-ல் விஜய் | Singer Suchitra

ஜனநாயகன் லீக்கானது எப்படி? நடிகர் விஜய்யின் கைங்கரியம்? காரணம் இருக்கிறது

 Akilan Arul  :  ஜனநாயகன் leak யார் மூலம்?ன்னு கேட்குறதுக்கு முன்னாடி basic fact தெரிஞ்சிருக்கணும்...
இது சாதாரண piracy கிடையாது....Edit Reference Mark ஒட  இந்த print வெளில வந்துருக்கு. இது direct Personal Copy..Theatreல எடுக்குற piracy printல இப்படிப்பட்ட mark இருக்காது...Cinema industry protocol படி இந்த மாதிரி personal copy தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் இந்த 4 பேர்கிட்ட மட்டும் தான் இருக்கும்...அப்படின்னா எப்படி leak ஆகி எங்கிருந்து வந்திருக்கும் புரிஞ்சிக்கனும்..
Edit reference water mark உள்ள திரைப்படத்தின் காட்சிகள் 4 பேரிடம் இருந்து மட்டுமே லீக் செய்ய வாய்ப்புள்ளது
1 - Producer - KVN Productions 
2 - Hero - Actor Vijay 
3 - Director - H.Vinoth
4 - Editor - Pradeep E Ragav
லீக் ஆனா நஷ்டப்படுற மொத ஆள் producer so அவரு பண்ணியிருக்க வாய்ப்பில்லை, டைரக்டர் ஆசை தன்னோட படைப்பை எல்லோரும் தியேட்டர்ல பாத்து ரசிக்கணும் நல்லா ஓடினா அடுத்த படவாய்ப்பு வரும், எடிட்டர் பண்ண அவசியம் இல்லை... 

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

கேரளா மேற்கு வங்கம் புதுசேரி வாக்கு பதிவு நிறைவு - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஏன் வெளியாகவில்லை?

 tamil.news18.com  : புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் வாக்குப் பதிவு நிறைவடைந்தும் ஏன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவில்லை தெரியுமா?
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் நிலையில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? 12 நாட்களே மிச்சம்!

May be an image of one or more people

 News4 Tamil Digital  12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா?
தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. 
குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் தமிழகத்தையே சுற்றிச் சுழன்று வருகின்றனர். 
இந்தச் சூழலில் தான் திமுக கூட்டணியில் ஒரு புரியாத மௌனம் நிலவி வருகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஜாம்பவான்கள் வாரத்திற்கு ஒருமுறை தமிழகம் வந்து வாக்குச் சேகரிப்பதோடு, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து ஆக்ரோஷமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: ஐகோர்ட் கிளை கண்டிப்பு; மனு தள்ளுபடி; ரூ.50,000 அபராதம் -

 dinakaran.com - Karthik Yash : மதுரை: திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்னையே இல்லையா? இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என மனுதாரரை கண்டித்த ஐகோர்ட் கிளை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று வழிபட அனுமதி அளித்துள்ளனர். எனவே, கடமையை நிறைவேற்ற தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

வியாழன், 9 ஏப்ரல், 2026

புதுவை - ஸ்டாலினை சந்திக்க மறுத்த ராகுல்!

 தினமலர் : புதுச்சேரியில் ஒரே நாளில் பிரசாரம் செய்தும் கூட்டணி தலைவர்களான ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நெல்லையில் நடிகர் விஜய்யின் பேச்சு, ஏற்கனவே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி உள்ளது.
ஏப்.6ம் தேதி புதுச்சேரியில் ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலினும் காங்., தலைவர் ராகுலும் பிரசாரம் செய்தனர். கூட்டணி கட்சிகளாக இருந்தும், ஒரே யூனியன் பிரதேசத்தில் பிரசாரம் செய்த ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. ஸ்டாலினை சந்தியுங்கள் என்று ராகுலுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு ராகுல் மறுத்து விட்டதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

சுருதி ஹாசன் : 5 பேருக்கு மனைவியாக வாழ்ந்து விட்டேன்! கல்யாணமா?

 வெப்துணியா :  5 பேருக்கு மனைவியாக வாழ்ந்து விட்டேன்; கல்யாணமா?
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.

ஹிட்' ஆனதா ரூ.8000 கூப்பன்? - சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி

May be an image of television and hospital

 இந்து தமிழ் திசை : வெற்றி கூட்டணி அமைத்த 5000 & 8000
'ஹிட்' ஆனதா ரூ.8000 கூப்பன்? - சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
தலைவர்களின் பிரச்சாரம், பதில் தாக்குதல்களால் தமிழக தேர்தல் களம் கனன்று கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டு காலத் திட்டங்களை மேடைக்கு மேடை பட்டியலிட்டபடி, மிகுந்த நம்பிக்கையுடன் இடைவிடாது பயணித்து வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
முந்தைய தினம், திருமங்கலம், விருதுநகரில் தனது பிரச்சாரத்தை முடித்திருந்தார். சென்னையில் இருந்து நேற்று புதுச்சேரி பிரச்சாரத்துக்காக புறப்படும் முன்னர், நமக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார்.

காங்., வேட்பாளர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய மாட்டாரா சிதம்பரம்?

தினமலர் : கோவை: கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சுற்றுப்பயண பட்டியலில், அந்தக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் விடுபட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்.கட்சிக்கு கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூர்யபிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை விடுத்து, புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் வழங்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொற்கொடியை வைத்து திருமா ஆடிய நாடகம் -விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி கேள்வி குறி

May be an image of one or more people

 Live Tamil News -  :  பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி
தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் அதன் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையே புகைச்சல்கள் ஆரம்பமாகியுள்ளன. 
மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குத் தகவல்களைத் திரட்டுவது போல, 
மாநில உளவுத்துறையும் கள நிலவரங்களை உடனுக்குடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தாக்கல் செய்து வருகிறது. 

புதன், 8 ஏப்ரல், 2026

பதுளை 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பௌசர் விபத்து: வாளி வாளியாக அள்ளிச் சென்ற மக்கள்

 தமிழ் மிரர் : சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் வெளியேறிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் வாளி, கேன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எரிபொருளை அள்ளிச் சென்றுள்ளனர்.

20 மதவெறி இயக்கங்களை வளர்த்துவிட்ட ஈரான் எதிர்காலத்தில் இந்தியாவிலும் அதுபோன்ற இயக்கங்களை வளர்த்து விடும்?

May be an image of text that says "TRUMP ANNOUNCES 2-WEEK CEASEFIRE WITH IRAN DonaldJ.Trump Donald J.Trump @realDonaldTrump Based on conversations with Prime Minister Shehbaz Sharif and Field Marshal Asim Munir, of Pakistan, and wherein they requested that| that|hold hold offthe destructive force being sent tonight to Iran, and subject IslamicR Islamic-Republic Republic of Iran eing.tothe COMPLET OPENINGoftheStratotHormuz,lagr endthe bombing and attack NDTV WORLD W RLD"

 பிரம்ம ரிஷியார் :  தன் ஒரு நாள் கெடு முடிவடைந்த நிலையில் மிக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடுத்ததை அடுத்து,
 ஈரான் இப்போதைக்கு ஹோர்ம்ஸ் நீரிணையினை நிபந்தனையின்றி கப்பல் போக்குவரத்துக்கு திறப்பதாக அறிவித்துள்ளது , 
இதை அடுத்து 15 நாட்களுக்கு டிரம்பர் போரை நிறுத்தியுள்ளார்
இது ஈரானின் சரணாகதியினை காட்டுகின்றது,  1980 முதல் 1988 வரை இதே போன்றதொரு போரை அரபுலகம் சந்தித்தது அப்போது ஈராக்கில் சதாமும் ஈரானில் பெரிய கொமேனியும் இருந்தார்கள் சண்டை உள்நாட்டில் பெரிதாக இல்லை மாறாக ஈராக்கிய எண்ணெய் கப்பல்களை ஹோர்ம்ஸ் பக்கம் அனுமதிக்கமாட்டோம் என ஈரான் கிளம்ப ஈராக் அதை எதிர்த்து தாக்க இந்த நீரிணைக்கு எதிராக வந்த முதல் சண்டை அதுதான்

தமிழக அமைச்சர்கள் சொத்துக்கணக்கு பட்டியல்

 தினமலர் : தமிழக அமைச்சர்களின் சொத்துக்கணக்கு விவரம், அவர்கள் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திர தகவல் அடிப்படையில் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 111 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அமைச்சர் காந்தி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் துரைமுருகன், மூன்றாமிடத்தில் டி.ஆர்.பி.ராஜா உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், வரும் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் சொத்து விவரங்கள், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர்களது சொத்து, சார்ந்தோர் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி கணக்கில் ரூ.111 கோடி
வேட்பு மனுவுடன் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விவரம்

2026 சட்டசபை தேர்தல்.மொத்தமாக அள்ளும் திமுக- மின்னம்பலம் மீடியாவின் மெகா சர்வே ரிசல்ட்

  minnambalam.com -  Mathi : தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் எப்படி இருக்கும்? தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் நமது மின்னம்பலம் மீடியா நடத்திய மெகா சர்வே முடிவுகள் மின்னம்பலம் யூ டியூப் சேனலில் இன்று முதல் வெளியாக இருக்கிறது.
மார்ச் 20 முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் என
234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப
நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை நீங்கள் மின்னம்பலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
தென் சென்னை சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

திமுகவுக்கு எதிராக ”திருமா” திருவிளையாடல்..திருவிக நகரில்! கூட்டணி’ சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, Kavi

 minnambalam.com-  Kavi : வைஃபை ஆன் செய்ததும், “எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இமயமலைக்கு போறீரா?
நாம எதுக்கு போகப் போறோம்.. எஃப்.எம். ல் பாட்டு கேட்க சுகமா இருந்துச்சு.. அதான் ஹம்மிங்.. நான் சொல்ல வந்த சங்கதியை முதல்ல சொல்லிடுறேன்..
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அதிமுக வேட்பாளரா நிற்கிறாங்க.. திமுக வேட்பாளரா கே.எஸ்.ரவிச்சந்திரன் நிற்கிறாரு..
திருவிக நகர் தொகுதியில திடீர்னு திமுக கூட்டணியில இருக்கிற விசிக நிர்வாகிகள், பொற்கொடிக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க..

டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.

 KR Athiyaman : அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு பெரும் தவறுகளையும், மீறல்களையும், குற்றங்களையும் புரிந்தவர், புரிந்து வருபவர் தான். மாற்றுக் கருத்தில்லை. 
ஆனால் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது. 
வெனிசுலா அதிபர் மடேரோவை நள்ளிரவில் கடத்தி வந்து, அமெரிக்காவில் வீட்டுச் சிறையில் வைத்துள்ளார். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணானது, அநீதியானது என்பதெல்லாம் உண்மை தான். 

சாத்தான் குளம் லாக்கப் கொலை- முழு விபரம்

May be an image of one or more people

 நிலவன் மாணிக்கம்  :  சாத்தான் குளம் லாக்கப் கொலை!
எடபாடுவின் பித்தலாட்டம் அம்பலம்!
சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண்! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு பெண் தலைமைக் காவலர் ரேவதி இந்த விவகாரம் வலுவாக வெளிவந்துள்ளது!.
இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...

TVK BJP திரிஷா அமித்ஷா டெல்லியில் பேச்சு வார்த்தை அம்பலமாகிய ரகசிய டீல்

 நிலவன் மாணிக்கம் :  TVKவின் முதல்வர் வேட்பாளர் திரிஷாவின் மும்பை டீல் வெட்ட வெளிச்சமானது..
விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!*
* மும்பையில் விஜய், த்ரிஷாவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.*
*▪️. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா.    மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார்.  அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.*

காட்டுமன்னார்கோவில் ஜோதிமணி : நான் காங்கிரஸ்தான். விசிக வேட்பாளராக அறிவித்த திருமாவுக்கு நன்றி

 minnambalam - Mathi : காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி, தாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; தமக்கு வாய்ப்பு கொடுத்த திருமாவளவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் தாமே வேட்பாளராக போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவை எம்.பி.யாக உள்ள திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜி : என் பெயரில் 100 பேர் வந்தாலும் பரவாயில்லை

  dinamalar.com : தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தான் எங்கள் இலக்கு. கோவைக்கு கடந்த 5 வருடங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், செய்ய போகும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு கேட்போம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுகிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி செய்திருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல சொல்லுங்கள்.

திங்கள், 6 ஏப்ரல், 2026

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் (தந்தை, மகன்) கொலை வழக்கு! 9 போலீசாருக்கும் மரண தண்டனை

 தினமலர் :மதுரை: சாத்தான்குளத்தில் போலீஸ் ஸ்டேசனில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் தில்லாலங்கடி

 கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் எப்படி எப்படி எல்லாம் குளறுபடி செய்தார் என்பதை நடுநிலைமையோடு இவர் கூறுகிறார் 
ஏற்கனவே உள்ள எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் திமுக அந்த தொகுதியை தரவில்லை இந்த தொகுதியை தரவில்லை என்று செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை 
மேலும் 28 தொகுதிகளை ஏற்கனவே பெற்றுவிட்ட காங்கிரசுகு மேலும் அடிஷனல் தொகுதியாக விசிகாவுக்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார் கோயில் தொகுதியை தன்னிச்சயாக தாரை வார்த்தார் 
இவரது கட்சியில் இவர் நினைத்தபடி எல்லாம் நடக்க முடியும் என்றால் இவரது கட்சிக்கென்று ஜனநாயக அமைப்புக்கள் கிடையாதா? 

கலைஞர் இறந்த அன்று நடந்தவைகள் - பத்திரிகையாளர் உமா மகேஸ்வரன் பார்வையில்

May be an image of temple and text

 Uma Pa Se  :  கலைஞர் இறந்த அன்று நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அன்று முழுவதும் கலைஞர் கலைஞர் கலைஞர்.
அங்கு மட்டுமல்ல எங்கெங்கும் கலைஞரே நிறைந்திருந்தார்.
ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு சட்டப்போராட்டம் வெற்றியடைந்த செய்தி வந்த நொடி அங்கிருந்தேன்.
அந்த தருணத்தை அனுபவித்தவனுக்கு தான் ஒரு மகத்தான தலைவனுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தார்கள் என்று தெரியும். 
பொதுவாய் கலைஞரை adore செய்து காலம் முழுவதும் வளர்ந்ததால் எனக்கு ஸ்டாலின் அதுகாறும் அவ்வளவாய் பிடிக்காது. சொல்லப்போனால் கலைஞரின் பெருமையில் கால்வாசி இல்லை. இவரை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்று ஒரு எரிச்சல். (அது பற்றி பின்னர் வேறு பதிவில் )

விளவங்கோட்டில் பச்சை துரோகம்! அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான் இன்றைய கேரள காங்கிரஸ்

May be an image of text that says "മുന്നണി ഐക്യ ജനാതിപത്യ പ്രവീണിനെ സ്ഥാനാർഥി വിളവൻകോട് വിജയിപ്പിക്കുക"

 குமரிக் கிழவனார் :  காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
 வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.

கேரள சட்டமன்ற தேர்தலில் "மும்முனைப்" போட்டி: வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன?

  bbc.com - சேவியர் செல்வக்குமார் : காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வலுவான "மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்" என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.

சனி, 4 ஏப்ரல், 2026

ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்- புதுச்சேரியில் ஏப்.6-ல்

 minnambalam.com -Mathi : புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் 14 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ததை திரும்பப் பெற மறுத்ததால் குழப்பம் நீடிக்கிறது.

வியாழன், 2 ஏப்ரல், 2026

RSS இல் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அறிவியல் வளர்ச்சியும் ஏற்படவில்லை

 Sridhar Subramaniam  : ஐஐடியில் ஒரு அறிவீனம்!
. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 250ஆவது நிகழ்ச்சி ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி பேசி இருக்கிறார். அந்த உரையைக் கேட்டேன். 
'நியூட்டனின் அறிவியல் பார்வை' எழுத்தறிவற்ற பார்வை என்றுதான் ஆரம்பிக்கிறார். ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி தியரியை எடுத்துக் கொள்கிறார். அந்த ஃபார்முலாவில் ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் தவறு செய்திருக்கிறார். காரணம், இந்தப் பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்கிறார். 

புதன், 1 ஏப்ரல், 2026

காங். தேர்தல் குழு பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

 தினமலர் : புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்த உடனடியாக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
காங். வேட்பாளர் பட்டியல் எப்போது; ராகுல் வரணும் என்கிறார் செல்வப்பெருந்தகை

திமுக, அதிமுக, தவெக – லோக்பால் அமைப்பின் கருத்து கணிப்பு

  minnambalam.com  -Pandeeswari Gurusamy : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

திருமாவின் ஜாதிப்பாசம் - பொற்கொடிக்கு ஆதரவு


 மதுரம் சந்திரசேகர்
; பொற்கொடிக்கு பிரதிநிதித்துவம் அளித்த அதிமுக அளித்துள்ளதால் அண்ணன் திருமாவளவன் அவருக்கு ஆதரவா இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார் போல..
ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிவிட்டார் என்கிறீர்கள்..
பூவை மூர்த்தி பாஜகவுடன் கூட்டு.ரஞ்சித் சங்கிகளுடன் கைகோர்த்திருக்கிறார்.. 
இவர்களெல்லாம் அவர்களது சாதியவர்கள் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர் சித்தாந்தாந்தத்தை ஆதரிக்கின்றனர். 
இவர்களுக்கு எதிராக அண்ணன் சனாதன எதிர்ப்புக்குரல் எழுப்புவதில்லை.
அதிமுக இவருக்கு எதிர் கூட்டணி..

திங்கள், 30 மார்ச், 2026

நடிகர் கருணாஸ் சிவகங்கை அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த முயற்சி!

 hindutamil.in  :  சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை இந்த முறை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களது தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திமுகவில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உள்ளிட்டோரும், காங்கிரஸில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோரும் சீட் பெற முயற்சித்தனர்.

திருமாவளவன் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்; சீமான் கேள்வி

 தினமலர் : காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திருமாவளவன் அதில் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறார்? அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது, கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார்.

திருமாவளவன் அமைச்சர் பதவிக்காக சட்டமன்ற தேர்தலில் போட்டி! பேராசை பெரும் வினையாகும்

 மின்னம்பலம் -Mathi : அமைச்சர் பதவிக்காகவா சட்டசபை தேர்தலில் போட்டி? திருமா சொன்ன பதில் என்ன? முழுமையாக!
தமிழக சட்டசபை தேர்தலில், மக்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் தாம் போட்டியிடுவது அமைச்சர் பதவிக்காக அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மார்ச் 30-ந் தேதி மாலை நடைபெற்றது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

மத்திய கிழக்கு போர் - 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் சம்பவங்களும்

 hirunews.lk : 1. ஹவுதிகளின் தொடர் தாக்குதல்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2. ஈரான் மீதான தாக்குதல்களும் பதிலடி எச்சரிக்கையும்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. புஷெர் (Bushehr) மாகாணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதுடன், குசிஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளது.

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் Vs சுந்தர் சி - நட்சத்திர தகுதி பெற்ற மதுரை மத்தி

 hindutamil.in - ஒய்.ஆண்டனி செல்வராஜ் : மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக போட்டி யிடவில்லை என்று வருத்தத்தில் இருந்த அக்கட்சியினருக்கு சுந்தர் சிபோட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் 2016. 2021 தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பேராசிரியர் ஜெயபாலிடம் வெறும் 5,762 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு அதிமுக போட்டியிடாமல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், பழனிவேல் தியாகராஜன் எளிதாக வெற்றி பெற்றார்.

ஒரு கட்சி ஆட்சியும் பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையும்

 Santhirapalan Saminathar  : ஜனநாயக நாடுகளில்  பலர் குறிப்பிடும் குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.  ஜனநாயகம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதை . 
இதை வளர்த்து எடுப்பது மக்கள் தான். 
நவீன உற்பத்தி முறை வளர்ச்சி,  மக்களை சிந்தனையிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
இலங்கை இந்தியாவில் இருக்கும் ஜனநாயக அரசுகளுக்கும் நோர்வே, சுவீடன், சுவிஸ் அரசுகளுக்கும் இடையே ஜனநாயக வளர்ச்சி பாரிய அளவு வித்தியாசம் ஆகும் 
நோர்வே,டேன்மார்க், சுவீடன், நியூசிலாந்து, ஜஸ்லாந்து அரசுகளின் ஜனநாயகம் நல்ல வளர்ச்சி அடைந்தவை. ஜனநாயகத்தில் குறைகள் இருக்கு என்பதற்காக மன்னர் ஆட்சிக்கு சென்று விட முடியாது. 
அல்லது அதன் சாயலான  ரஸ்சியா, சீனா, வடகொரியா, ஈரான் சர்வாதிகார ஆட்சிக்கு சென்றுவிட முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை பல கருத்துக்களும் மோதி மக்கள் தெளிவடைவதற்கான களமாக இருப்பதுதான். பல கட்சிகளின் தேர்தலில் மக்கள் தமது ஆட்சியாளரை  தெரிவு செய்யும் முறையாகும்.  

அரசியலில் நடிகர்கள் - இடஒதுக்கீடு -இலவசங்கள் - மகளிர் மேம்பாடு! தஞ்சை மாணவர்களின் காரசாரமான கருத்துக்கள்

 

அண்ணா அறிவாலயத்தில் நின்று வீரலட்சுமி

‘தனி ஆவர்த்தனம்’ செய்யும் செல்வப்பெருந்தகை: கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திப்பிரிவு

 hindutamil.in  : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடக்கம் முதலே முரண்பாடுகள் தலைதூக்கின. 
இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்பதில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால், அதற்கு ஸ்டாலின் உடன்படவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உதவியுடன் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டு காங்கிரஸை கையெழுத்திட வைத்தார் செல்வப்பெருந்தகை. அவரது இந்த தடாலடி முடிவு, ஒட்டுமொத்த காங்கிரஸ் சீனியர்களையும் அதிரவைத்தது.

திமுக வேட்பாளர்கள்: 4 முஸ்லிம்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!

 minnambalam.com  - Mathi  : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 5 பேர் முஸ்லிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்.
5) டாக்டர் சுபேர் கான்- ராயபுரம்
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2

சனி, 28 மார்ச், 2026

மத்திய கிழக்கை சீரழிக்க ஈரான் இஸ்லாமிய கடும்போக்கு அரசு முயல்கிறது.

 ராதா மனோகர் : உலகம் முழுவதும் இஸ்ரேலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் 
இதை விட முக்கியமான லெபனானை பற்றி பேசுவதிலை 
லெபனானுக்குள் ஊடுருவி இருக்கும் ஹிஸ்புல்லா என்பது வெறும்  ஒரு  பயங்கரவாத இயக்கம் அல்ல 
அது ஈரானின் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரங்கேற்ற ஈரானால் பணமும் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து லெபனானுக்குள் ஊடுருவிய அமைப்பாகும் 
இந்த ஹிஸ்புல்லா அமைப்பானது ஈரானிய இஸ்லாமிய தீவிரவாத அரசை லெபனானுக்குள் அமைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது 
லெபனானுக்குள் மட்டுமல்லாமல் முழு மத்திய கிழக்கையும் ஈரான் போன்று ஒரு அடிப்படை வாத மதவெறி ஆட்சியை அமைப்பதற்காக ஈரான் ஆட்சியாளர்களால் ஹிஸ்புல்லா ஹமா ஐ எஸ் ஐ எஸ் ஹுத்தி போன்ற இயக்கங்கள் வழி நடத்த படுகின்றன 
இன்று லெபனானில் என்ன நடக்கிறது?

திமுக வேட்பாளர்கள் பட்டியல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

 தினமலர் : சென்னை: 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அமைச்சராக இருந்த காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது .கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சி சின்னங்களிலும் போட்டியிடுகிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட பட்டியலில் வாய்ப்பு கிடைத்தவர்கள் விவரம்
1. கன்னியாகுமரி - மகேஷ்
2. நாகர்கோயில் - ஆஸ்டின்
3. ராதாபுரம்- அப்பாவு

யாழ்மாவட்டம் திருட்டு மணல் உழவு இயந்திரம் மோதி போலீஸ் உயிரிழப்பு!

hirunews : சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவல்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்..வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணங்கள்

 tamil.oneindia.com-  Mani Singh S  :  சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர் லிஸ்ட் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஆகியுள்ளது. 
எப்போதும் ரேசில் முந்தும் திமுக இந்த முறை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு கூட்டணி கட்சிகள் வைக்கும் நெருக்கடியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ்-28, தேமுதிக -10, விடுதலைச் சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் கட்சி-2 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதுசேரியிலும் முதுகில் குத்திய காங்கிரஸ் - ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்!

 tamil.oneindia.com -  Shyamsundar : அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்?
சென்னை: திமுக கூட்டணியில் 28 இடங்களை காங்கிரஸ் தட்டித் தூக்கிய போதே, உடன்பிறப்புகள் மத்தியில் ஒருவித சலசலப்பு இருந்தது. இப்போது அது எரிமலையாய் வெடித்திருக்கிறது. காரணம், காங்கிரஸ் கேட்டிருக்கும் தொகுதிகள் அனைத்தும் திமுகவின் 'கோட்டை' என்று சொல்லப்படும் வலுவான இடங்கள்.
"ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை எங்களிடம் தள்ளிவிட்டு, நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த தொகுதிகளை அவர்கள் கேட்பதா?" என மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
புதுச்சேரி 'நட்பு ரீதியான' மோதல்? ஸ்டாலின் செம அப்செட்!
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் நிலைமை படுமோசம். அங்கே காங்கிரஸ் - திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்த நிலையில், பல தொகுதிகளில் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. "இதைவிட ஒரு மோசமான 'நட்பு ரீதியான' போட்டியை பார்க்க முடியாது" என புதுவை திமுகவினர் கொந்தளிக்கின்றனர்.
ராகுல் காந்தி மீது பாயும் கோபம்!

வெள்ளி, 27 மார்ச், 2026

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் லிஸ்ட்!

minnambalm :மின்னம்பலம் Mathi :  திமுக (DMK) கூட்டணியில் காங்கிரஸ் (Congress) கட்சி மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன. 5 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள்
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு

காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்

  தினமலர் : சென்னை;காங்கிரஸ் தொகுதிகள் தேர்வு அனைத்தும் ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத்தன்மை இல்லை என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
காங்கிரஸ் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.

மோடியோடு படுத்து பதவி வாங்கிய பெண்கள்?

May be an image of one or more people Ethiraj Madhavan Madhavan  ;  இந்திய அரசியலில் மாபெரும் வெடிப்பு......
இந்தப் பெண் மது கிஷ்வர், இவர் இந்துத்துவா சித்தாந்தத்தின் ஆதரவாளர், 
இவர் 2013-2014 இல் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரானார். 
மோடியை பற்றி ("Modi, Muslims and Media") புத்தகம் எழுதி, ஊடகங்களை விமர்சித்து, மோடியை டெவலப்மெண்ட் மேன் என்று அழைத்தார்.
இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக நேற்று இரவு ட்வீட், பிரதமர் மோடி மீது தீவிர குற்றச்சாட்டு... இதுதான் முழு ட்வீட் 👇
"2014 மே மாதம் மோடி ஆட்சியை கைப்பற்றிய போது அவரிடம் இருந்து நான் என் பாதுகாப்பான தூரத்தை கடைபிடித்தேன். என் புத்தகத்தின் நகலை நானே அவர்களுக்குக் கொடுக்கவில்லை. 
இப்போதுதான் கையொப்பமிடாத பிரதியை அவருக்கு பிடித்த பீரோ பாரத் லால் வழியாக அனுப்பி வைத்தேன்!

வியாழன், 26 மார்ச், 2026

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய இலங்கையர் பலி

 வீரகேசரி : இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து பரிசீலிக்கிறது- ஈரானிய வெளிவிவகார அமைச்சர்!

  hirunews.lk  : மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படும் '15 அம்ச சமாதானத் திட்டத்தை' ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி உடனடியாக நிராகரிக்கவில்லை.
எனினும், அந்தத் திட்டம் குறித்த ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவை ஒருசில இடங்களில் '15 அம்சத் திட்டம்' என அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

புதன், 25 மார்ச், 2026

ஒற்றை வதந்தி.. 10 தொகுதிகளை அள்ளி தந்த திமுக.. தேமுதிகவுக்கு ‘ஜாக்பாட்’ அடித்தது எப்படி

 minnambalam.com - Mathi  :   “அவனுக்கு என்ன தூங்கிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா..”என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இந்த நேரத்துல தத்துவ பாடல்?
தத்துவம் காலத்துக்கும் பொருந்துமே.. அந்த டிபேட் இப்ப எதுக்குய்யா? நாம ஏற்கனவே சொன்ன மாதிரி தேமுதிக 10 சீட்டை வாங்கி கையெழுத்து போட்டிருச்சே..
தேமுதிகவுக்கு இந்த 10 சீட்டை திமுக கொடுத்ததுக்கு பின்னாடி ‘நிறைய’ சம்பவங்கள் இருக்குய்யா.. வரிசையா சொல்றேன்..
தேமுதிகவை அதிமுக கூட்டணியில இருந்து திமுக கூட்டணிக்கு கொண்டு வரனும்னு 2 மாசத்துக்கு மேல தொடர்ந்து பிரேமலதாகிட்ட பேசிகிட்டு இருந்தவர் எ.வ.வேலு..

கமல் முடிவுக்கு காரணம் என்ன? தியாகமா; தந்திரமா?

https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4182037.jpg

தினமலர் : கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா ‛சீட்' கொடுத்து அமுக்கியது போதும் என திமுக நினைத்துவிட்டது போலும். அதனாலேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக அழுத்தம் கொடுத்தது. 
அந்த அழுத்தத்தின் வெப்பத்தை உணர்ந்து கொண்ட கமல், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், 'தேர்தலிலேயே போட்டியிடவில்லை' என்று ஜகா வாங்கி விட்டார்.
இந்த ‛‛டுவிஸ்ட்' யாரும் எதிர்பாராதது. இது, கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான முடிவு, என்று சிலரும், தேர்தலில் போட்டியிடாத கட்சி, களத்தில் இருந்து காணாமல் போகும் என்று சிலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமேரிக்கா ஈரான் பேச்சு வார்த்தை -15 நிபந்தனைகளுடன் - இஸ்ரேல் தரப்பு அச்சம்

 டைம்ஸ் ஆப் இந்திய : 15 நிபந்தனைகளுடன் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம்! – இது குறித்து இஸ்ரேல் தரப்பு அச்சம்
– அந்த 15 நிபந்தனைகள் எவை முழுவிபரங்கள்…
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக டிரம்ப் கூறுகிறார், முன்கூட்டியே போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என இஸ்ரேல் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தத்திற்காக வாஷிங்டன் தெஹ்ரானுக்கு 15 நிபந்தனைகளை அனுப்பியதாக அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்;
உச்சிமாநாடு சில நாட்களில் பாகிஸ்தானில் நடைபெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன;
 அமெரிக்காவிற்கு ‘மிகப் பெரிய பரிசை’ வழங்கியதாக அமெரிக்க அதிபர் கூறுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கா (24 March 1949) அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்தநாள்.

 முன்னாள் ஜனாதிபதி திரு  ரணில் விக்கிரமசிங்கா (24 March 1949) அவர்களுக்கு இன்று 76 ஆவது பிறந்தநாள். 
எப்போதும் தன்னை ஒரு மாணவனாகவே கருதும்  ஒப்பற்ற கல்வியாளர்தான்  திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
இவரின் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை.
இவர் தொடர்புடைய சில விடயங்களை தற்போது குறிப்பிடலாம் என்றெண்ணுகிறேன் 
நாட்டில் அமைதியை ஏற்படுத்த புலிகளோடு ஆறு சுற்று சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் 
 16–18 September 2002, Bangkok
31 October-3 November 2002, Bangkok
2–5 December 2002, Oslo
6–9 January 2003, Bangkok
7–8 February 2003, Berlin
18–21 March 2003, Tokyo
(இந்த பேச்சுக்களில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்ற புலி தலைவர்கள் இரவு நேரங்களில் உல்லாச விடுதிகளில் சல்லாபித்த கதைகளை திரு அன்டன் பாலசிங்கம் விலாவரியாக கூறி இருந்தது தெரிந்ததே)

1996 இல் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமல் ஹாசன்

Kalaignar 100 Ceremony Updates: Kamal Haasan Rajnikanth Full Speech Check  Here | Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய  கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல் ...

ராதா மனோகர் :  அம்மையார் ஜெயலலிதாவின் 100 கோடியை புறக்கணித்த கமலஹாசன்!  ஒரு பிளாஷ் பேக் ( மீள் பதிவு 28 -5-2025)
சுதாகரன் ஆடம்பர திருமணத்திற்கு பின்பு (1996 இல்) நடந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தன் தோல்வியை ஓரளவு ஊகித்து விட்டார்.
எப்படியாவது என்ன விலை கொடுத்தாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்
அந்த தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் திரு கமலஹாசனுக்கு 100 கோடி தருவதாக தூண்டில் விட்டு பார்த்தார்! 
1996 இல் நூறு கோடி என்பது சாதாரண தொகை அல்ல.
ஆனாலும் கமலஹாசன் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து விட்டு அமேரிக்கா சென்றுவிட்டார்
செல்லும்போது கலைஞரை சந்தித்து அய்யா நீங்கள் வெற்றி பெறப்போகிறீர்கள்,
இதை அம்மையாரின் டீல் முயற்சியை பற்றியும் கலைஞரிடம் கூறிவிட்டு சென்றார்.

செவ்வாய், 24 மார்ச், 2026

கமலுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை : ஸ்டாலின் பதிவு! I

 மின்னம்பலம் -  Kavi :  2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு  முழு ஆதரவு கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இதைத்தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை: கமல் அறிவிப்பு

 தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் மநீம போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.
கூட்டணி தர்மம்
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தேச நன்மைக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். 
கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். 
அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் ராஜ்யசபாவில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

திங்கள், 23 மார்ச், 2026

ஈரான் பணிந்தது- பேச்சு வார்த்தைக்கு தயார் - தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு

 BBC News தமிழ்   மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு 'முழுமையான தீர்வு' காண்பது குறித்து இரானுடன் 'பயனுள்ள பேச்சுவார்த்தை' நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார் டிரம்ப் .

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

 hindutamil.in - கி.மகாராஜன்  :  மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 
அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 
கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, 

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்! தமிழ்நாடு

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
சென்னை பிரஸ் கிளப்பில் கருத்து கணிப்பு வெளியீடு!

Air Canada ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்!L: இருவர் உயிரிழப்பு

 மாலைமலர் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

மகாராஷ்ட்ரா ஆசிரமத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் .. சி சி டிவியில் மாட்டிய பாஜக பிரமுகர்கள்

 Maha Laxmi  :  சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு.‌
இந்த சாமியார் தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 
மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

ஞாயிறு, 22 மார்ச், 2026

ஈரான் அல் காமினிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய இடதுசாரிகள்

 Sridhar Subramaniam : ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்: 
கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான். 
பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள். 
கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம். 
அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர். 
அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது. 
காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது. 
காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை.     வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம், 
அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'. 

வெள்ளி, 20 மார்ச், 2026

2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்க கப்பல்

 தினமலர் : வாஷிங்டன் : மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், 'யு.எஸ்.எஸ்., திரிபோலி' என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் மூடி உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., திரிபோலி, 2,000க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் நீர் வழியை திறக்க நடவடிக்கை

 தினமலர் : வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா நிறுவனங்கள் 38.- ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து 10 நிறுவனத்தை மூடுவாங்க! அத்தனையும் போலி கம்பனிகள்

May be an image of one or more people, people smiling, newsroom and text that says "க் ர்க்கு 1 1L"

 மாரி தாஸ் : ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா... 
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38.  (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies.  அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம் 

வியாழன், 19 மார்ச், 2026

என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்! ஷார்மிளா சையத்

May be an image of one or more people and people smiling

 Sharmila Seyyid  :  அன்பார்ந்த மக்களே, என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்!  என்னம்மோ அமெரிக்கா வந்த பிறகு தான் முக்காட்டைக் கழற்றினாற் போலவும்,
 எனக்கு சுதந்திர தாகம் வந்தது போலவும்,
 இங்குவந்த பிறகுதான் பிறந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் முஸ்லிம் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பேசும் ஞானதோயம் வந்ததென்றும் உங்கள் பாட்டுக்குப் பிதற்றாதீர்கள். 
நான் அமெரிக்கா வந்து நான்கரை ஆண்டுகள் தான் ஆகிறது. 
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண் உடல் மீது நிகழும் பல வித வன்முறைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 
அமெரிக்கா வருவதற்கு  முன்பு இஸ்தான்புல்லில் வசித்தபோதும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கு இருக்கும் புழங்கு வெளிகளை சிலாகித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் விவகாரம் - முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கும் தொடர்பு

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 hirunews.lk  : 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின்படி, தமக்குக் கிடைத்த 60 மில்லியன் ரூபா பணம் மூன்று தவணைகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎம் சில தொகுதிகளில் தனித்து போட்டி… பல தொகுதிகளில் திமுக அணிக்கு ஆதரவு - ஆலோசனை

  minnambalam.com  - Kavi :  திமுக கூட்டணியில் சிபிஎம் கூடுதல் தொகுதிகளை கேட்பதில் உறுதியாக இருக்கிறது.  
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இதில் கந்தர்வ கோட்டை, மதுரை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
கடந்த மார்ச் 17ஆம் தேதி  திமுகவுடன் சிபிஎம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், ‘அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என பேட்டி அளித்தார். 

முகாம் தமிழர்களின் குடியுரிமைக்கு குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்! நன்றி கெட்ட புலி ஆதரவாளர்கள்

முகாம் வாழ் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்! இது பற்றி இலங்கை தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை வாயே திறக்கவில்லை மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களும் தமிழக முகாம் வாழ் மக்களை தமிழர்களாகவே கருதவில்லை! உலகிலேயே ஒரு மோசமான இனம் உண்டென்றால் அது தமிழ் தேசியர்கள்தான்!

 Thesam Jeyabalan : தமிழக முகாம்களில் வலிந்து மாவீரர் தினங்களை நிகழ்த்தி இந்திய பிரஜாவுரிமை பெறுவதை திட்டமிட்டு முடக்குகின்றனர் !
சீமானுக்கு உதவினால் தனி ஈழம் அமைக்கலாம் என புலம்த் தமிழர்கள் எண்ணுகின்றார்கள் ! ஆனால் எங்களுக்கு உதவுவதில்லை !
திமுக மீது புலிகளுக்கு இருக்கும் வெறுப்பு, புரிதலில் உள்ள பிரச்சினை ! ராஜீவ், நாபா படுகொலைகளின் எதிர்விளைவு !
திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது ! ஆனால் புலம்பெயர் தமிழர்கள் தான் திமுகாவுக்கு எதிராக உள்ளனர் !
தற்போது இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் மலையகத் தமிழர்கள் ! அவர்கள் இலங்கை வரவிரும்பவில்லை !
புலம்த் தமிழர்கள் இந்திய ஈழத் தமிழர்களைப் பற்றி அக்கறையில்லை ! தங்களுடைய அரசியலுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர் !

புதன், 18 மார்ச், 2026

என் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டதே கிடையாது.. தீயாய் பரவும் வீடியோ.. முதல்வர் வெளியிட்ட பதிவு

 tamil.samayam.com - Ashik Mohamed  : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் சம்பந்தமான பணிகளில் முழு மூச்சுடன் இறங்க துவங்கியுள்ளன. அடுத்தடுத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம் என்று தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திமுகவிற்கு இதுவரை ஓட்டு போட்டது கிடையாது என பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஈரானை தாக்க 2270 கிலோ 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது ஏன்?

 
bbc.com  - கிறிஸ் பார்ட்ரிட்ஜ் :  ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

 தினமலர் : டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 
இன்றைய நாளில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானப்படை தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டுள்ளார்.
அவர்களைவேட்டையாடுவது தொடரும். ஈரானின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து கொல்லும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரதமர் நெதன்யாகு அனுமதி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

கியூபா கம்யூனிஸ்டு ஆட்சி முறை முடிவுக்கு வருகிறது! ஜனநாயகம் மலர்கிறது?

dinatamil.indianexpress.com  - Mona Pachake : வெனிசுலா, ஈரான்... அடுத்து கியூபா-வுக்கு குறி வைக்கும் டிரம்ப்
டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், கியூபாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஒற்றைக் கட்சி ஆட்சியை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், கியூபாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஒற்றைக் கட்சி ஆட்சியை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

செவ்வாய், 17 மார்ச், 2026

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திராவிட இயக்ககங்கள் கட்சிகளின் களப்பணிகள்

 Loganayaki Lona  :  எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் குடும்பக் கொலை ,ஜாதியக்கொலை கலவரம் நடந்துகிட்டு இருக்குது.
இதுக்கு எல்லாம் திமுக  காரணமெனில் வேற யார் இருந்தப்ப அங்க கொலை நடக்கல?
சமூகமாகவே ஆதிக்க ஜாதியவாதிகளும்,அந்த வளர்ப்பு முறைகளும் ,ஆயுதப்புழக்கமும் அங்க இருக்குது.
அதற்கான திருத்தப்பணி பெரியார் இயக்கங்கள்,கம்யூனிஸ்ட் அமைப்புகள் சார்ந்து அங்கு பிற மாவட்டங்களில் நடப்பது போல் நடப்பதில்லை.நடத்தவேண்டும்.அந்த அளவு பண்பட்டு இன்னும் அந்தபகுதி மேம்படவில்லை.
ஜாதியக்கலவரம் என்பதிலிருந்து ஜாதியக்கொலை என தனிநபர் கொலைவழக்காகவும், 
ஜாதியவாதிகள் என்பதிலிருந்து ஜாதி அரசியல் கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் மாறியிருக்கு.

கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் - The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்

 
ராதா மனோகர்
: கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் -   Bennett, Coleman & Co. Ltd. (commonly known as The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்!
2ஜி வழக்கின் போது  தலைப்பு செய்திகளாக  
நாள்தோறும் பச்சை பொய்களை  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு கொண்டிருந்தது அல்லவா?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வந்தால் அது வெறும் செய்தி அல்ல,
அதுவே தீர்ப்பு என்ற அளவில் அதன் நம்பகத்தன்மை கட்டமைக்கப்பட்டு இருந்தது.

No photo description available.

அதே டைம்ஸ் ஆப் இந்தியாவை வெளியிடுவது   Bennett, Coleman & Co. Ltd. குழும நிறுவனம்தான் 
இந்நிறுவனம் பல கம்பனிகளை தன்வசம் வைத்திருக்கிறது 
ஷாஜி ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமானது 
இதன் வருமானம் 2022 இல் Increase ₹4.57 billion (US$54 million!
Bharatiya Jnanpith பாரதீய ஞானபீடம் என்பது இவர்களின் நிறுவனம்தான்.
இவர்களின் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில்தான்  ஆ.ராசா அவர்கள் அமெரிக்க வங்கியில் 3000 அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார் என்று தலைப்பு செய்தியாக முழு பொய்யை வெளியிட்டது 
இந்த செய்தியை பார்த்துவிட்டுதான் 2 ஜி விசேஷ நீதிமன்ற அமர்வில்,
2 ஜி வழக்கை விசாரித்து கொண்டிருந்த நீதிபதி Special Judge OP Saini அவர்கள் ஆர் ராசாவை எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒரு குற்றவாளியாகவே பார்த்தார்