ராதா மனோகர் : ராஜிவ் ஜேயார் ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை வந்த இந்திய அமைதி படையை புலிகள் கோலாகலமாக வரவேற்றார்கள்!
இவர்களுக்கு இடையே ஒரு கல்யாண வீட்டுக்கு நிகரான கொண்டாட்டம் இருந்தது
இந்திய ஹெலிகாப்டர்களில் தங்கள் தளபதியின் மணப்பெண்ணை அழைத்து வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது.
பரஸ்பரம் உணவு பரிமாறினார்கள்.
இந்திய படையினரும் கூட புலிகளை இட்டு பெருமிதம் கொண்டிருந்தனர்
ஒருவேளை புலிகளை ஒரு இந்து வீரர்கள் என்ற நோக்கத்தில் அணுகினார்களோ தெரியவில்லை.
இவர்களுக்கு இடையேயான அந்த தேன்நிலவு எப்படி கசந்தது?
பச்சையாக சொன்னால் புலிகளுக்கே உரித்தான பேராசையும் முரட்டுத்தனமும் கத்துக்குட்டித்தனமும் எல்லையற்ற பாசிச குணாம்சம் அதில் அடங்கி இருக்கிறது!
.7-august 1987 -ஈழநாடு பத்திரிகை
வவுனியாவில் இந்திய இராணுவத்தினர்
ஓமந்தை ராணுவ முகாமில் புலிக்கொடி!


















