திங்கள், 23 மார்ச், 2026

மகாராஷ்ட்ரா ஆசிரமத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் .. சி சி டிவியில் மாட்டிய பாஜக பிரமுகர்கள்

 Maha Laxmi  :  சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு.‌
இந்த சாமியார் தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 
மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். 


அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். 
இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார்.
பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சையை மீண்டும் மீண்டும் தீர்த்து வந்துள்ளார். 
புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். 
ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர்.
காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில்.‌
• 150+ அசிங்கமான காணொளிகள் 
• 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள்.
• 8,00,000 ரூபாய் பணம்.
• ஒரு கை துப்பாக்கி.
• தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள்.
• 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் 
• லேப்டாப்கள்.
• சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள்.
என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். 
குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். 
கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது.‌ பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது.
இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். 
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: