![]() |
![]() |
Thulakol Soma Natarajan : நீதிக்கட்சியின் நிறுவனர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் , 27, ஏப்ரல் (1852) அவர் நினைவாக..
நீதிக்கட்சியின் தந்தை சர். பிட்டி தியாகராயர் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்
௮ளவுக்கு தன் குடும்பச் சொத்தை நீதிக்கட்சிக்காகச் செலவளித்த வள்ளல்,
நாற்பது ஆண்டுகாலம் சென்னை மாநகராட்சியின் ௨றுப்பினராக இருந்ததோடு
௮தன் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும் (மேயர்) ஆனார்.
இந்தியக் குடியரசு வரலாற்றில் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் தனது ௨யிரினும் மேலாக
நேசித்த நீதிக்கட்சி வெற்றி வாகைசூடியதற்கு முழு முதற்காரணம் சர்.பிட்டி தியாகராயர்!
நீதிக்கட்சியின் வெற்றி பெற்றதைக் கண்டு பூரித்துப் போனார்.
தனக்கெனவாழாப் பிறர்க்குரியாரான சர். பிட்டி.தியாகராயர் தாம் முதல்வராக விரும்பவில்லை என அறிவித்தார்.
அவரின் ௮றிவிப்பு ௭திரிகளையும் வியக்கச்செய்தது.
தியாகராயரால் பரிந்துரைக்கப் பட்ட மூவர் கொண்ட முதலாவது
நீதிக்கட்சி௮மைச்சரவை 17-12-1920 ல் பதவி ஏற்றது.
இந்தியத் குடியரசு வரலாற்றின் துவக்க ஆட்சி ௭ன்று வர்ணிக்கப்ப டும்
நீதிக்கட்சியின் முதல் ௮மைச்சரவையில் கடலூர் ஏ. #சுப்பராயலு_ரெட்டியார்
முதல்வராக இருந்து கல்வி,
மக்கள் நல்வாழ்வு ஆகிய
துறைகளைக் கவனித்துக்
கொண்டார்.
இரண்டாவது ௮மைச்சராக பனகல் ௮ரசர் ௨ள்ளாட்சித்துறை
முதலிய சில துறைகளைக்
கவனித்துக் கொண்டார். '
கே. வி. ரெட்டி மூன்றாவது ௮மைச்சராக இருந்துகொண்டு
வளர்ச்சி முதலிய துறைகளைக் கவனித்தார்.
ஆட்சியும் பதவியும் தேடிவந்தபோதும் அதைத் தவிர்த்தவர் பிட்டி தியாகராயர் !
சற்றேறக்குறை இதே போன்று 1967 தேர்தலில் திமுக வெற்றிபெற்று
ஆட்சி அமைக்கும் தகுதிபெற்றது.
#பேரறிஞர்_அண்ணா 1967 தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு
நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கு முதல்வராக இயலாத சூழல் இருந்தது.
அண்ணாவும், நடாளுமன்றத்தில் உறுப்பினராகச் செயல்படவே
விருப்பினார்.
எனவே கழக முன்னோடிகளில் மூத்தவரான #நாவலர்_நெடுஞ்செழியனை,
முதல்வராக்க விரும்பினார்.
அப்போது, #கலைஞர் உள்ளிட்ட பிற மூத்த தலைவர்கள் அதை
ஏற்கவில்லை !
அண்ணா தான் முதல்வராகப் பதவிஏற்கவேண்டும்
என்று அழுத்தம் கொடுத்தனர் !
மேலும், அப்போதே சட்டமன்ற உறுப்பினர் மத்தியில் கலைஞரின்
ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
அண்ணா முதல்வராக மறுத்தால், கலைஞர்தான் முதல்வராக்கப்படல்
வேண்டும் என்ற கருத்தும் உலா வந்தது !
இதை அறிந்த அண்ணா, தன்னுடைய விருப்பத்திற்கு மாறாகக் தானே
முதல்வராகப் பதவி ஏற்கச் சம்மதித்தார் என்பது வரலாறு.
1969 இல் அண்ணா மறைவுக்குப் பின் நாவலர் ,கலைஞர் இடையே முதல்வர்
பதவிக்குக் கடும் போட்டி நிலவியபோது கலைஞருக்கே சட்ட மன்ற உறுபினர்கள்
ஆதரவு தந்தனர் என்பதும் இதை
உறுதிப்படுத்தியது !
(பல்வேறு தரவுகளின் தொகுப்பு)
துலாக்கோல்/27 - 4 - 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக