திங்கள், 7 அக்டோபர், 2024

வைணவ முறைப்படி வைகோ வீட்டு திருமண அழைப்பிதழ்? - புயலை கிளப்பிய சர்ச்சை

Vaiko Durai Vaiko

tamil.samayam.com :  திராவிட  இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர் வைகோ.
சுமார் 50 ஆண்டுகாலத்திற்கும் மேலான அரசியல் அனுபவத்துடன், தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
தன் கொள்கையை எப்போது விட்டுத் தராத வைகோ, அதற்காக தேர்தல் அரசியலில் கூட சமரசம் செய்துகொள்ளவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.



தற்போது வைகோ வயது முதிர்வின் காரணமாக முன்பைப் போல ஆக்டிவாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் துரை வைகோ கட்சி பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டு, முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் வென்று எம்.பியாகியுள்ளார்.
பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம்னு சொன்னோமா? - அமைச்சர் ரகுபதி பதில்!
இந்த சூழலில் வைகோவின் பேத்தியும் துரை வைகோ மகளுமான வானதி ரேணுவுக்கும், கோகுல கிருஷ்ணன் என்பவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வைக்கும் பணிகளில் துரை வைகோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில்தான் வைகோ வீட்டு திருமண அழைப்பிதழ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது வைணவ முறைப்படி அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ள நிலையில், அது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் மணமகள், மணமகன் வீட்டாரின் குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம், நல்ல நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் என்ற பெயரில்தான் அழைப்பிதழ் தொடங்குகிறது.

சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பை பேசி வரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வைகோ குடும்பத்தினரே இவ்வாறு குலம், கோத்திரம் என்று கூறி திருமண அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்யலாமா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
விஜய் கட்சியில் இணைந்த முதல் நடிகர்.. 2026ல் தவெகதான் எதிர்க்கட்சி - தாடி பாலாஜி பளீர் பேட்டி!அதே சமயம் அழைப்பிதழ் போலியா உண்மையா என்றெல்லாம் விவாதிக்கப்படுகிறது. அதே சமயம் மதிமுக தரப்பில் இருந்தோ, துரை வைகோ தரப்பில் இருந்தோ இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. துரை வைகோ அரசியலுக்கு வந்த சமயத்தில் தான் பெருமாளை கும்பிடுபவர் என்றும், தனக்கு பெரியாரும் தேவை, பெருமாளும் தேவை என்றும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: