வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கோயில் தேர் மின்சார வயரில் முட்டியது இருவர் உயிரிழப்பு .. பதுளை இலங்கை

 hirunews.lk : பதுளை - நமுனுகுல - பூட்டாவத்த பகுதியில் இரதம் ஒன்று அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பதுளை நமுனுகுல பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதலாவத்த பகுதிக்கு சென்ற இரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 27 மற்றும் 37 வயது மதிக்கதக்கவர்களே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமமைடந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: