திங்கள், 28 மார்ச், 2022

டீச்சரை பதுங்கி இருந்து வெட்டிய மாணவன் .. விருத்தாசலத்தில்

government school teacher attacked by student..police investigation

tamil.asianetnews.com  : விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பெண் ஆசிரியரை பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் ரோடு, திருவள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி ரேகா (42). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு அருகில் வீடு இருப்பதால், மதிய உணவு இடைவேளையில், தினசரி வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் ரேகா மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்று உணவருந்தினார். பின்னர், மீண்டும் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த 18 வயது மாணவன் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அவரை பின்புறத்தில் தலையில் மூன்று முறை வெட்டினார்.

வலி தாங்க முடியாமல் ஆசிரியர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததுமே அங்கிருந்து மாணவன் தப்பி சென்றான். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை ரேகா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: