புதன், 30 மார்ச், 2022

புதிய அரசியலமைப்பு குறித்து நம்பிக்கை கொள்ளவேண்டாம்!! கூட்டமைபிடம் ஜெய்சங்கர்‌ கூறினார்

 இலக்கியா : • 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌
அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ – கூட்டமைபிடம்  ஜெய்சங்கர்‌  எடுத்துரைப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம்‌ என்றும்‌ ஆனால்‌ 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌
அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ எனவும்‌ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்‌ கலாநிதி எஸ்‌.ஜெய்சங்கர்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பிடம்‌ உறுதியளித்துள்ளார்‌.
பிம்ஸ்டெக்‌ மாநாட்டில்‌ கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்‌ ஜெய்சங்கர்‌ நேற்று பிற்பகல்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்து உரையாடியிருந்தார்‌.


நேற்று பிற்பகல்‌ 4.30 மணிக்கு கொழும்பில்‌. உள்ள இந்திய இல்லத்தில்‌ இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
ஆர்‌.சம்பந்தன்‌ தலைமையில்‌ எம்‌.பி. க்களான எம்‌.ஏ.சுமந்திரன்‌, தர்மலிங்கம்‌ சித்தார்த்தன்‌, செல்வம்‌ அடைக்கலநாதன்‌ ஆகியோர்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌ கலந்துகொண்டனர்‌.

தமிழ்‌ தேசிய கூட்டமைப்புக்கும்‌ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்‌ இடையில்‌ இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து இச்சந்திப்பில்‌ முக்கியத்துவம்‌ கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயங்களில்‌ தாம்‌ கூடிய அக்‌கறை செலுத்துவதாகவும்‌ அரசியல்‌ கைதிகளின்‌ விடுதலை, காணாமல்போனோர்‌ விடயங்களில்‌ உண்மையை கண்டறிதல்‌, வடக்கு-கிழக்கு பகுதிகளில்‌ காணி விடுவிப்பு மற்றும்‌ வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்‌ குறித்தும்‌ அரச தரப்‌புடன்‌ பேசியதாகவும்‌ இது குறித்து கூடிய கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பினர்‌ இதன்போது தெளிவுபடுத்தியுள்ளனர்‌.

மேலும்‌ 13ஆம்‌ திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்‌.

எனவும்‌ ஆனால்‌ நீண்ட காலமாக அரசாங்கம்‌ கொடுத்த வாக்‌குறுதிகள்‌ மீறப்பட்டு வருவதாகவும்‌ சம்பந்தன்‌ எடுத்துக்கூறியுள்ளார்‌.

வடக்கு, கிழக்கு தமிழ்‌ மக்களை பிரதிநிதித்துவப்‌ படுத்தும்‌ தமிழ்‌ கட்சிகள்‌ ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதம்‌ தொடர்பில்‌ இந்தியா கவனம்‌ செலுத்த
(வேண்டும்‌ எனவும்‌ அதற்கு பதிலளிக்க வேண்டும்‌ எனவும்‌செல்வம்‌ அடைக்கலநாதன்‌ எம்‌.பி. சுட்டிக்காட்டியுள்ளார்‌.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்‌ குறித்து எம்மத்தியில்‌ நம்பிக்கை ‘இல்லை எனவும்‌ ஆனால்‌ அரசியல்‌ கைதிகள்‌ விடயத்தில்‌ அரசாங்கம்‌ சில நடவடிக்கைகளை எடுக்கும்‌ என்ற நம்பிக்கை இருப்பதாகவும்‌ ஒருசில அரசியல்‌ கைதிகள்‌ விரைவில்‌ விடு. ‘விக்கப்படலாம்‌ எனவும்‌ தர்மலிங்கம்‌ சித்தார்த்தன்‌ எம்‌.பி. கூறி:யுள்ளார்‌.

தமிழ்‌ தேசிய கூட்டமைப்பினரின்‌ கருத்துக்களை கேட்டறிந்‌துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்‌ கலாநிதி எஸ்‌.ஜெய்சங்கர்‌, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்‌தித்த வேளையில்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்புடன்‌ இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகள்‌ குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக தெரிவித்ததுடன்‌, தமிழ்‌ தேசிய கூட்டமைப்பும்‌. இப்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டு.
நகர வேண்டும்‌ எனவும்‌ கூறியுள்ளார்‌.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்‌ கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம்‌ எனவும்‌
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ என்ற நம்பிக்கை தமக்கும்‌ இல்லையெனவும்‌ 13 ஆம்‌ திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌ அரசாங்கத்துக்கு அழுத்தம்‌
கொடுப்போம்‌ எனவும்‌ வெளியுறவுத்துறை அமைச்சர்‌ ஜெய்சங்கர்‌ தெரிவித்ததாக தர்மலிங்கம்‌ சித்தார்த்தன்‌ எம்‌.பி. கூறியுள்ளார்.

மேலும்‌ தமிழர்‌ தரப்பு இந்தியாவுக்கு, அனுப்பிய கடிதம்‌ குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும்‌ அதற்கு ஜெய்சங்கர்‌ பதில்‌ தெரிவிக்கவில்லை.
Post Views: 59

கருத்துகள் இல்லை: