ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஆனந்தகீதம்

Automatic Writing என்பது நிரூபணம் செய்ய இயலாத ஒன்று (பிறப்பு இறப்புச் சுழற்சி போல). ஒரு குழந்தையைப் பார்த்து அது ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்ததென்று தெரிந்து கொள்கிறோம் . அதேபோல ஒரு இறப்பின்போது உயிர்ச்சக்தி போய்விட்டது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அதே போல தன்னிச்சையான எழுத்தென்பதைப் பார்க்கவும் வாசிக்கவும் இயலும். ஆனால் அதை எழுதவோ டைப் பண்ணவோ இயக்கும் அந்த விசை எமது எந்த ஐம்புலன்களாலும் அறிய முடியாத ஒன்று. பல புத்தகங்கள் இந்த மாதிரி எழுதப்படிருக்கின்றன. அவற்றுள் ஒன்று Patience Worth Series Received by a Midwestern Housewife என்பதும் இன்னொன்று The Fascinating New Testament Stories Dictated through Geraldine Cummins என்பதுவும் அடங்கும்.
பொதுவாக இப்படிப்பட்ட உந்துசக்தி நம்மைப்போலப் பிறந்து வாழ்ந்து இறந்து போன ஒருவரிடமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை மறுப்பவர்கள் பொதுவாக இது எமது அடிமனத்திலிருந்துதான் வருவதாகச் சொல்வார்கள். அடிமனத்தில் தான் எல்லா நினைவுகளும் தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். இப்படியாகக் கருத்து வேறுபாடுகள் பல விதமாக உள்ளன.
என்னால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமென்று சொல்லவரவில்லை. என்னால் ஒன்று மட்டுமே சொல்ல இயலும். அதாவது இப்புத்தகத்தில் வரும் மறுவாழ்வைப் பற்றிய விளக்கங்களெல்லாம் எனது கற்பனையோ இயற்றியதோ இல்லை. அவை எனது டைப்ரைட்டரில் டைப்பண்ண முன் எனக்குத் தெரியாதவை.
உதாரணத்துக்கு இந்தியாவிலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உதய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ.சி.சர்மா என்பவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தத்துவவியற் பீடத்துக்குத் தலைவராவார் (head of the department). அக்கடிதத்தில் அவர் தனது மாமியார் இறந்ததை முன்னிட்டு உடனடியாக 'ஹிஸார்' என்ற இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததாகவும், உதய்பூர் வந்ததன் பிற்பாடு எனக்குத் தன்னிச்சை எழுதுகை (automatic writing) வருவதையறிந்ததாகவும் தனது மனைவி பாக் (Bhag) க்கு ஆறுதல் தரும் விதமாக ஏதாவது செய்ய இயலுமா ஏனெனில் அவரது மாமியார் 'சீதா தேவி மனுஜா' அகால மரணமடைந்ததாகவும் எழுதியிருந்தார்.
அடுத்த நாள் காலை ஆர்தர் போர்ட் (Arthur Ford) இடம் இறந்த 'சீதா தேவி'யைப் பற்றி ஏதாவது தெரியுமாவெனக் கேட்டதற்கு ஆர்தர் சொன்ன (எழுத்து மூலமான) பதில் "நாம் அவரைச் சந்தித்தோம். அவர் சந்தோஷமான ஆத்மா. இங்கு வந்ததில் அவர் வெகு சந்தோஷமாகவும் சக்தியுடனும் இருப்பதாகவும் அவரது பூவுலகத்திலிருக்கும் குடும்பத்தினரைப் பிரியவில்லை என்றும் கூடிய நேரம் அவர்களுடன் தான் இருப்பதாகவும், அவர்கள் மனத்தைத் தேற்றுமளவும் தான் அப்படியிருப்பேன் என்று சொன்னதாகவும் அதனுடன் வேறு பல பிரத்தியேகச் சமாச்சாரங்கள் எழுதப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட நீல மலரொன்றைச் சொல்லித் தனக்கு விருப்பமான அந்த மலரைப் பார்க்கும் போது தன்னை நினைக்கும் படியும் அந்த நேரத்தில் அங்கு தானும் இருப்பேனென்று சொன்னதாகவும் எழுதப்பட்டது.
இந்த சீதா என்பவரைப் பற்றி எனக்கு ஒரு நாளும் தெரியாது. அவர் இருக்கும் இடத்தில் அந்த நீலப்பூப் பூப்பது பற்றியும் எனக்குத் தெரியாது. எனவே இதை டாக்டர் சர்மாக்கு எழுதுவதற்குத் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் எதற்கும் எழுதுவோமெனத் தீர்மானித்து எழுதினேன். ஏப்பிரல் 20 ஆம் திகதி 1971 ஆம் ஆண்டு டாக்டர் சர்மா ஜோட்பூரிலிருந்து அதற்குப் பதில் எழுதினார். ஆர்தருடைய ஒவ்வொரு சொல்லும் உண்மையென்றும் அந்த நீலப்பூவைப் பற்றித் தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றும் ஆனால் மாமனார் சொன்னதாக ஒரு விஷயம் அதில் எழுதியிருந்தார். கடந்த ஆறு மாதங்களாக சீதா பூக்களில் அதிகம் விருப்பமடையவராக இருந்ததாகவும் அதிலும் குறிப்பாக அந்த நீலப்பூவை அவர் உண்டாக்கி அதை வீட்டை அழகுபடுத்த அவர் உபயோகித்ததாகவும் மாமனார் சொன்னதாக எழுதியிருந்தார்.
சர்மாவுக்கோ அவரது மனைவிக்கோ கூட சீதாவின் இந்தக் கடந்த ஆறுமாதமாக நீலப்பூவிலிருந்த ஈடுபாடு தெரிந்திருக்கவில்லை. எனக்கோ திருமதி சர்மாவின் பெற்றார் உயிருடனிருக்கிறார்களா என்பதே அவரது (மாமியாரின் இறப்பைப் பற்றிய) கடிதம் வருமளவும் தெரியாது. எனவே இந்த விஷயம் சாதாரணமான வழிகளில் எனக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை. நிச்சயமாக இது ஆர்தர் சீதாவை மேலுலகில் சந்தித்தை உறுதிப்படுத்துகிறது.
இப்புத்தகம் மேலுலகைப் பற்றிய சந்தேகங்களை ஆர்தரின் சொந்த அனுபவங்களின் மூலமாக நிவர்த்திக்கும்
http://ananthageetham.blogspot.com/