சனி, 19 பிப்ரவரி, 2011

50 சோமாலிய அகதிகள் பலி!

மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி!

தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் பெட்ரோ கோசா தெரிவித்ததாவது,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து 129 எத்தியோப்பிய மற்றும் சோமாலிய அகதிகள் சட்டவிரோதமாக தென் ஆப்பிரிக்காவுக்கு கடந்த 9-ம் தேதி கப்பலில் புறப்பட்டனர். ஆனால் அந்த கப்பல் கடந்த 13-ம் தேதி தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே தண்ணீருக்குள் மூழ்கியது. இதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தானாசானிய கேப்டனும் கடலுக்குள் மூழ்கி இறந்தனர்.

இதில் காப்பாற்றப்பட்ட 89 பேரையும் மொசாம்பிக் கடற்படையினர் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 3 ஆயிரம் அகதிகள் உள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார்.

ஆப்பிரிக்காவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஏராளமானோர் வழியில் ஏற்படும் விபததுகளில் பலியாகின்றனர்.

கருத்துகள் இல்லை: