புதன், 21 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடி அதிகரித்துள்ளதாக

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடி அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாய் முகாமில் வசித்துவந்த 13வயதான துரைசிங்கம் அஜித்குமார் என்ற மாணவன் இன்று கறுப்புவேனில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். முகாமிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மாணவன் கடத்தப்பட்டுள்ளார். மாணவன் கத்திக் குழறியதையடுத்து கடத்தியவர்கள் அருகிலுள்ள படைமுகாமிற்குள் தள்ளிவிட்டு சென்றதாகவும் பின்னர் படையினர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த வாகனத்திற்குள் மேலுமிரு சிறுவர்கள் வாய் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தப்பிய மாணவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டினை மானிப்பாய் பொலீசார் ஏற்கவில்லையென்றும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: