சனி, 28 ஜனவரி, 2023

உக்ரைனுக்கு படையெடுக்கும் ஜெர்மன் டாங்குகள்.. ரஷ்யா பகிரங்க மிரட்டல்.. அடுத்தகட்டத்துக்கு நகரும் போர்!

 கலைஞர் செய்திகள் - பிரவீன் : உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான 10 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.


இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை வழங்க முன்வந்துள்ளது இந்த மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

ஜெர்மனியின் உயரிய தயாரிப்பான லெப்பா்ட்-2 ரக பீரங்கிகள் உலகளவில் சக்தி வாய்ந்த பீரங்கிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. மேலும், இவ்வகை பீரங்கிகள் ரஷ்யா தயாரிப்பான T -72 ரக பீரங்கிகளுக்கு ஈடுகொடுக்கும் என கூறப்படுவதால் அதனை தங்கள் ராணுவத்தில் சேர்க்க உக்ரைன் அதீத ஆர்வம் காட்டி

ஜெர்மனி தனது யாரிப்பான லெப்பா்ட்-2 ரக பீரங்கிகளை சக ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், தங்கள் அனுமதி இல்லாமல் வேறு நாட்டுக்கு அதனை கொடுக்கக்கூடாது என்றும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில், போலந்து லெப்பா்ட்-2 ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் சில ஐரோப்பிய நேட்டோ நாடுகளும் லெப்பா்ட்-2 ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிக்க முனைவந்துள்ளன. இதற்கு முதலில் ஜெர்மனி தயக்கம் காட்டிய நிலையில் தற்போது அதற்கு ஜெர்மனி சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

T 72 Tank
இது குறித்து பேசிய ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் உக்ரைனுக்கு பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன, சக்திவாய்ந்த, கனரக ஆயுதங்களை அனுப்புவது குறித்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது, உக்ரைன் போரில் அந்த நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரிப்பதைக் குறிக்கிறது. ரஷ்யாவைப் பொருத்தவரை, ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட ஐரோப்பிய நாடுகளோ, நேட்டோ அமைப்போ எந்த உதவியை அளித்தாலும் அது போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமமாகும். அத்தகைய பங்கேற்பை அந்த நாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: