ஞாயிறு, 7 நவம்பர், 2021

Breaking News சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

மாலைமலர் : 10, 11ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. சென்னையில் நேற்று முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரெயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுஹர், விழுப்புரத்தில் சில சமயங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சிலநேரத்தில் அதிகனமழையும் பெய்யலாம்.

10, 11ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: