திங்கள், 13 ஜூலை, 2020

பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது-.. உச்சா நீதி மன்றம்

   நக்கீரன் :புதுடெல்லி: நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறையை திறப்பது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த மன்னர் குடும்பத்தின் மேல்முறையிட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட தலைமையின் கீழ் இடைக்கால குழு அமைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: