ஞாயிறு, 12 மார்ச், 2017

சிறையில் இருந்தே வென்ற போட்டி வேட்பாளர் அகிலேஷுக்கு அதிர்ச்சி

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி அமர்மணி திரிபாதி. இவரது மகன் அமன்மணி திரிபாதி. மனைவி சாராசிங்கை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமன்மணி திரிபாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமர்மணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நாட்டான்வா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அமன்மணி திரிபாதி மனு அளித்திருந்தார். இதனை அகிலேஷ் யாதவ் தலைமையிலான குழு நிராகரித்தது. சமாஜ்வாடி கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சிறையில் இருந்தபடியே சுயேச்சையாக போட்டியிட்டார் அமன்மணி திரிபாதி. வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாடி வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கைவிட 32 ஆயிரத்து 478 வாக்குகள் வித்தியாசத்தில் அமன்மணி திரிபாதி வெற்றி பெற்றார். இந்த முடிவை கேட்ட அகிலேஷ்க்கு அதிர்ச்சி ஏற்பட்டதாம். நக்கீரன்

கருத்துகள் இல்லை: