திங்கள், 4 ஜனவரி, 2016

வினவு: அடையாற்றின் கரையில் இரு துருவங்கள் ! ஒரு பக்கம் சேரி மறுபக்கம் வானுயர்ந்த கட்டிடங்கள்

பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல்.சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் அடையாறை ஆக்கிரமித்து வானளாவ எழுந்து நிற்கும் மியாட் மருத்துவமனை 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளை படுகொலை செய்த சுவடின்றி பளபளப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய மாநில அரசுகளின் சுண்டு விரல் கூட அதன் மீது படவில்லை.
மருத்துவமனை எதிர்கரையில் சென்னையின் மனித உழைப்பு சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் எம்.ஜி.ஆர் நகர் இருக்கிறது. சென்னை பூந்தமல்லி போரூர் – பரங்கிமலையை இணைக்கும் இந்த சாலையில்தான் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் இருக்கிறது. அதனாலேயே இந்த வட்டாரத்தில் அவர் மற்றும் அவரது தாயர் பெயரிலான நகர்கள், தெருக்கள் ஏராளம்.

miot-mgr-nagar-report-7
ஆதார் அட்டையுடன் டோக்கனுக்காக காத்திருக்கும் மக்கள்
அந்த விதிப்படி அடையாற்றின் கரையில் இருக்கும் இப்பகுதியும் எம்.ஜி.ஆர் நகரென்றே அழைக்கப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்ட  தினக்கூலிகள் வாழும் பகுதி இது. ஆற்றின் கரையான மண்மேடுதான் அவர்கள் வாழும் தெரு. எலி பொந்துகள் போல 300-க்கும் மேற்பட்ட வீடுகள். 10 X 12 அடிகள் கொண்ட சிமெண்ட் கொட்டைகைகள். ஒற்றைக்கல் செங்கல் வரிசைச்சுவர்தான் அதன் கட்டுமானம். புற்றீசல் போல அதில் அடைந்துவிட்டு விடியற்கலையில் பிழைப்பு தேடி எல்லா திசைகளிலும் ஓடுகின்றனர் இம்மக்கள்.
இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர்  திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னரே  பிழைக்க வந்தவர்கள். ஊரிலிருந்து கொண்டு வந்த மண்வெட்டியும் கடப்பாரையும் தான் இவர்கள் வைத்திருக்கும் ஒரே சொத்து. அது தான் பிழைப்பையும் தேடித் தந்தது. “இங்கு எழுந்து நிற்கும் எல்லா கட்டிடங்களும்  எங்கள் தாய் தகப்பன் கட்டியதுதான். இப்போது நாங்களும் அதே கல் மண்ணை தான் சுமக்கிறோம். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள் போல வாழ்கிறோம்.” என்று தாங்கள் கதையை மறக்க முடியாத துன்பியல் கனவு போல கூறுகின்றனர்.
மாரியம்மா
மாரியம்மாள்
மாரியம்மாள்
இவருடைய கணவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். மூன்று குழந்தைகள். …”மூத்த பொண்ணுக்கு இப்பதான் தலப்பெரசவம் ஆச்சு…மூணு மாச கைக்கொழந்த சார், இன்னும் பேருகூட வெக்கல…இப்பக்கி மாதவன்னு கூப்புடுறோம்…நாங்க ஒழுங்கா தூங்கி சாப்பிட்டு 2 மாதம் ஆச்சி..ஏதோ உசுரோடு இருக்கிறோம். போன மாசம் மொதோ வெள்ளத்துக்கு உசிரோட தப்பிச்சோம். ரெண்டாவது மழைக்கு சாமானெல்லாம் ஓட்டுமேல ஏத்திட்டு, அந்த டெலிபோன் கம்பெனி கட்டடத்துக்குள்ள தங்கிகிட்டோம்…வழக்கமா இப்படித்தான் தண்ணி ஏறும், அப்பால ரெண்டு நாள்ல வடிஞ்சுறும்….சரி மழதான் வுட்டுறுச்சேன்னு அடுத்த நாள் சாமானெல்லாத்தையும் எறக்கி வெச்சுட்டோம்…. மொதோ டைம் வெள்ளம் வந்தப்ப அதிகாரிங்க  வந்து காலி பண்ணச் சொன்னாங்க….1-ம் தேதி நைட்டு வெள்ளம் வரப்போறதப் பத்தி யாருமே எங்களுக்கு சொல்லலை. ராத்திரி 3 மணிக்கு திடீர்னு இடுப்பளவுக்கு தண்ணி ஏறுது. பசங்கெல்லாம் அலறுதுங்க! என்ன நடக்குதுன்னே எங்களுக்கு தெரியல.
வெள்ளம் வெள்ளம்னு மேட்டை நோக்கி பசங்கள தூக்கிட்டு ஓடுனோம். பக்கத்தில் கம்பெனிகாரங்க காம்பவுன்ட் கட்டல. அதனால அதுவுள்ள ஓடி தப்பிச்சோம். இல்லைனா மொத்த 1000 பேரும் சமாதி ஆயிருப்போம்….பொழச்சா போதும்னு கைப்புள்ளய தூக்கிகிட்டு பொருளெல்லாத்தையும் வுட்டுட்டு ஓடுனேங்க…எங்கோ ஒரு எடத்துல தடுமாறி விழுந்ததுல, கட்டவெரலுக்கு மேல ஒரு வெட்டு…என்னன்னு கூட பாக்க முடியல…ரெண்டு நாளக்கி அப்பறந்தான் புண்ணாகி போனத பாத்தப்ப தையல் போடச் சொன்னாங்க….உசுரு பொழச்சதே போதும், நம்மெல்லாம் தண்ணிலதான் வாழுறோம் இதுல தையல் வேறயான்னு போடல..ஒரு ஊசி மட்டும் போட்டுகிட்டேன்….ரெண்டாவது புள்ளக்கி கிட்னி ப்ராப்ளம் இருக்கு; அதுக்கு வைத்தியம் பண்ணி அப்பறம் கல்யாணம் பண்ணனும்னு கொஞ்ச கொஞ்சமா சேத்து வெச்சது, இப்ப உசுரத் தவிர ஒன்னுமே எங்ககிட்ட இல்ல”
பாஸ்டர் ரூசோ…கடந்த 15 ஆண்டுகளாக கிறித்தவ மத குருவாய் பணிபுரிகிறார். படிப்பறிவு உள்ளதால் டோக்கன் கொடுக்க வருபவர்களிடம் சிலருக்காக சிபாரிசு செய்து கொண்டிருந்தார்.  …” 15 வருசமா இங்க சர்ச் வெச்சுருக்கேன் சார், இன்னொரு சர்ச் ஒன்னும் இருக்குது…வீடு சக்தி நகர்ல ஒரு பிளாட்ல இருக்குது….சர்ச்சுக்குள்ள வெச்சுருந்த எல்லாமே போச்சு சார்…க்ளீன் பண்ணுறதுக்கே பத்தாயிரம் ரூபாய் ஆயிடுச்சு…”
நிவாரணப் பணியெல்லாம் எப்படி நடக்குது இங்க?
… “இங்க அரசாங்கம் செய்த ஒரே வேலை என்னான்னா 15 நாளைக்கி அம்மா உணவகத்திலேருந்து 3 வேளையும் சாப்பாடு கொடுத்தாங்க, மத்த எல்லா உதவியும் தன்னார்வக் குழுக்கள் எல்லாருமா சேந்து கொடுத்ததுதான்!”
இங்க உள்ளவங்க எதிர்காலமெல்லாம் என்னவாகும்?
“சார்! இங்க உள்ளவங்க இப்ப ரெண்டு விதமான மனக்குழப்பத்துல இருக்காங்க! ஒன்னு இங்க உள்ள வீட்ட செலவு பண்ணி புதுப்பிக்கிறதா இல்லயா? ரெண்டாவது அரசாங்கம் மாற்று வீடு தருவேன்னு சொல்லுதே, அது கெடைக்குமா, கெடைக்காதா?? மத்தபடி அவுங்ககிட்ட இப்ப எதுவுமே இல்ல…..
சார்…கேக்குறோமுன்னு தப்பா நெனைக்காதீங்க? ஆக்கிரமிப்பு கட்டிடத்த இடிக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லையா?
“…சார் நீங்க சொல்லுறது சரிதான் ஆனா அது எதிரே உள்ள அமிர்தானந்தமயி பள்ளிக்கோ அல்லது மியாட்டுக்கோ பொருந்துமான்னு சொல்லமுடியுமா?
ஏழுமலை-கலா தம்பதி
miot-mgr-nagar-report-25இவர்களுடைய வீடு ஆற்று வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது…இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன்….கொத்தனார் வேலை பார்க்கிறார்….வெள்ளம் வந்த நாள் முதல் வேலைக்குச் செல்ல முடியவில்லை…இவர்களின் தற்போதைய வீடு மூடப்பட்டு கிடக்கின்ற டெலிபோன் கம்பெனியின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம். தனது தங்கை குடும்பத்துடன் மேலும் நான்கு குடும்பங்களுடன் அங்கே தங்கியுள்ளனர்.
வெள்ளம் குறித்துக் கேட்ட போது “சார், வூடு மொத்தமும் காலி, ஒன்னுகூட இல்ல, நல்லவேளையா கெளம்புறப்ப ரேசன் கார்டையும், ஓட்டர் ஐ.டி-யையும் எடுத்துகிட்டோம், கட்டிருக்குற இந்தத் துணிய விட்டா வேற எதுவும் இல்ல…..ரெண்டாவது மழ பேஞ்சப்ப பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல இருந்தோம்….பார்த்தா அடுத்த நாள் அங்கயும் தண்ணி ஏற ஆரம்பிச்சுடுச்சு, கழுத்தளவு தண்ணில பையன தலையிலயும், பொண்ண வலது தோள்பட்டையில ஏந்தி புடிச்சுகிட்டே தவழ்ந்து தவழ்ந்து டிரேட் சென்டர் பின்னாடி கேட்டு வழியா கண்டோன்மெண்ட்டு பள்ளிகூடத்துக்கு போயிட்டோம்…
சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணுறீங்க?
“தனியாரு ஆளுங்க வந்து 10 கிலோ அரிசியும் உப்பும் கொடுத்தாங்க, தெனமும் கஞ்சி தான்…புள்ளங்க வேற வெறும் கஞ்சி தானான்னு பொலம்புதுங்க. கையில அஞ்சு பத்து இருந்தா கொஞ்சம் வெங்காயம் தக்காளி வாங்கி தொக்கு பண்ணலாம்; அதுக்கும் வழியில்ல! இதுல இவனுக்கு வேற அம்மை போட்டிருக்கு; இத்தன கஷ்டத்துலயும் மாரியாத்தா எங்கள விட்டுப்போக மாட்டேங்குது….காலையிலேருந்து ஒரு வாழைப்பழம் கேக்குறான்; அதக்கூட வாங்கித்தர முடியுமா கெடக்குறோம்; நானும் காசு கேக்காத ஆள் பாக்கியில்ல! ஆனா ஒரு 10 ரூவா கூட கெடக்கல! இந்த நோவுல அவனுக்கு ஒரு இளநீர் கூட வாங்கித்தர முடியல!
எப்படி இவனுக்கு அம்மை போட்டிச்சு?
miot-mgr-nagar-report-1
அம்மை நோயுடன் சிறுவன்
“ இவுங்க அக்காகிட்டேருந்து ஒட்டிகிச்சு சார்… இன்னும் 10, 15 பேத்துக்கு இங்க அம்ம போட்ருக்கு சார்.
டோக்கன் குடுக்குறாங்களே வாங்கிட்டீங்களா?
“அதெல்லாம் வாங்கியாச்சு சார், என்ன பிரயோஜனம், செம்மஞ்சேரின்னு சொல்லுறாங்க! அங்க இத விட மோசம் சார்! அப்பால அது ரொம்பப் பள்ளம் சார்! இங்கேயே இருந்து 25 வருசத்துக்கும் மேல பழகிட்டோம்….வேலைக்கி போறதுக்கும் மத்த எல்லாத்துக்கும் இதுதான் வசதியா இருக்கு, இதுல திடீர்னு எடத்த காலி பண்ணச் சொன்னா எப்புடி சார்??…ஏற்கனவே சேத்து வெச்ச எல்லாமே போச்சுங்குற கவல! இதுல இத வேற இடிக்கபோறேங்குறாங்க! இதயெல்லாம் நெனச்சா கஞ்சி கூட உள்ள எறங்க மாட்டேங்குது!….
4, 5 வருசத்துக்கு முன்னாடி செம்மஞ்சேரில ஒரு புரோக்கர் நல்ல எடமா இருக்கு வாங்கிக்கங்கன்னு சொன்னான்; அத நம்பி ஒரு லட்சம் கிட்ட் பணத்தப் பொரட்டி ஒரு எடத்த வாங்கிப் போட்ருந்தோம்; இப்போ அந்த எடத்தயும் கெவர்மெண்ட் புடுங்கிகிச்சு சார்! மூத்த பொண்ண எப்படியோ கஷ்டப்பட்டு கட்டிக் கொடுத்துட்டோம்; சின்னப்புள்ளக்கி என்னத்த பண்ணப் போறோம்னே தெரியல! வேல வேற எங்கயும் கெடக்கல! கெடச்சா கூட அங்கயே தங்கனும்கிறான், இந்த நெலமையில எல்லாத்தயும் வுட்டுட்டு நான் மட்டும் எப்படி வேலக்கி போறது! வூட்டுக்காரம்மா வேற பொலம்பிகிட்டே இருக்குது! நமக்குத் தெரிஞ்ச எல்லாத்து கிட்டயும் சொல்லி வெச்சுருக்கேன்! பார்ப்போம் சார்!              “ என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்….
கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ண மூர்த்தி “செக்கியூரிட்டி வேலை பார்க்கிறேன். வெள்ளத்தில் நாங்கள் தப்பிச்சுட்டோம். இப்போது புல்டோசோருகிட்ட மாட்டிக் கிட்டோம். எங்கள வெளியே வாறி கொட்டப் போறாங்களாம். கரையை கட்டபோகிறோம், காவாய் வெட்ட போகிறோம்னு எங்களை காலி செய்ய சொல்றாங்க. நந்தம்பக்கம் ஐ.டி.பி.எல் -லிருந்து மியாட், அம்மா அமிர்தானந்தமயி அகாடமி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டி.எல்.எப் என எல்லாரும் காவாயில் கட்டிருக்காங்க, காம்பவுண்ட்  போட்டிருக்காங்க. அவங்களுக்கு ஒரு  நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?
ஆக்கிரமிப்பெல்லாம் இடிச்சிட்டா தண்ணீர் தாராளாமா ஓடும்; அப்புறம் எந்த பாதிப்பும் இருக்காதுன்னு கவர்மெண்ட் சொல்லுதே?
….”சார் அப்பெல்லாம் ஆறு அந்தப் பாறையா இருக்குற எடத்துல மட்டுந்தான் இருந்துச்சு… நாங்கெல்லாம் கோடையில காத்தோட்டமா இருக்கும்னு போயி படுத்துக்குவோம்….இந்த கத்திப்பரா பாலம் கட்டுனப்ப தான் இங்க இருந்த மண்ணெல்லாத்தையும் எடுத்து இந்த ஆத்தையே அகலமாக்கிட்டாங்க! அதுக்கு முன்னாடியெல்லாம் இந்த ஆறு குறுகலாகத்தான் இருந்துச்சு….இப்ப வெள்ளம் வந்து வீடெல்லாம் இடிஞ்சதுனால இவுங்களுக்கு இன்னும் வசதியாப் போச்சு…அப்பால அந்த பாழடஞ்ச டெலிபோன் கம்பெனிய இப்போ யாரோ அதிமுக விஐபி வாங்கியிருக்காராம்…அதனால தான் ரொம்ப சீக்கிரமா காலி பண்ணப் பாக்குறாங்க! கூடிய சீக்கிரமே இங்க எதவாது கம்பெனியோ, கட்டிடமோ வரலாம்”
சித்ரா
சித்ரா
சித்ரா
“ஓடி விளையாடும் வயசுல இங்க வந்தோம். இப்போ கல்யாணமாகி அதே வயசுல எங்களுக்கு குழந்தைங்க இருக்காங்க. நாங்க யாரும் ஓசியில் இங்கு இல்லை.  ஊர்  தலைவருங்கதான் இந்த இடத்தை மடக்கி எங்களுக்கு வித்தாங்க. குருவி சேர்க்குற மாதிரி சேர்த்து 20, 30 வருசத்தில் ஓலை வீட்டை சிமெண்ட் வீடா மாத்துனோம். இப்போது  எல்லாத்தையும் வெள்ளத்துக்கு வாரி கொடுத்துட்டோம். இப்போ எங்களையும் காலி பண்ணுங்கனு சொல்றாங்க. கட்டின துணியோட நாங்க எங்க போறது?
வாடகை வீட்டில் வசிப்பவர்
வாடகை வீட்டில் இருந்த எங்களுக்கு வழி தெரியல. சொந்த வீட்டுக்காரங்க டோக்கன் வாங்க அடிச்சிக்கிறாங்க. எங்களை எங்க தூக்கி போடப்போறாங்கனு தெரியலை. தெரியாத இடத்தில் நாங்க எப்படி போய் பிழைக்கிறது? கல்லு மண் தூக்குற வேலையை அங்க போய் யாருகிட்ட கேக்குறது. குழந்தைகள் படிப்புக்கு என்ன பண்றது, அவங்களுக்கு நோய் நொடி வந்தால் எங்க ஓடுறது. அவசரத்துக்கு பணம் யாரிடம் கேட்பதுன்னு ஒண்ணும் புரியவில்லை.
கண்ணன்,  நடக்க இயலாத மாற்றுத் திறனாளி
கண்ணன்
கண்ணன்
“20- வருசத்திற்கு முன்னாடி  கர்நாடகாவில் கள்ளுக்கடையில் வேலை செய்தேன். எங்க சித்தி வந்து “நம்ம ஊருக்கு வந்துருடா அது தருமவானுங்க ஊரு”-னு சொல்லி கூப்டுச்சி. அப்ப இங்க வந்தேன். எங்க பசங்க மியாட் ஆஸ்பிட்டல்ல, டிரேட் சென்டர்ல கூட்டிப் பெருக்குற வேலை வாட்ச்மேன் வேலை செய்யுறாங்க. இந்த வெள்ளத்துல எங்க உயிர் மட்டும் தான் பாக்கி. அதையும் இப்ப மவராசனுங்க புடுங்கி வெளியேத்திருவாங்க போல. இடத்த காலி செய்ய சொல்றாங்க.
சிறுவன் வல்லரசு உறவினர்களுடன்
சிறுவன் வல்லரசு உறவினர்களுடன்
வல்லரசு, 10 வது படிக்கும் சிறுவன்
“பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல். “போட்” வருதுனு சொன்னாங்க, எங்க பக்கம் ஒரு “போட்” கூட வரல. எல்லாரும் ஐ.டி.பி. எல் பங்களா பக்கம்  மட்டும்தான் சார் போனாங்க. பணக்காரங்களுக்கு மட்டும்தான் “போட்” குடுப்பாங்களா சார் எங்களுக்கில்லையா?
குழந்தைகளேல்லாம் அழுதுது சார். எங்க அப்பா எங்கள மரத்துல கயிறு கட்டி  அத புடிச்சி இழுத்து இழுத்து எங்கள காப்பாத்துனாரு சார். அவரு கட்டியிருந்த லுங்கி கூட தண்ணியில அடிச்சிருச்சு. துணியில்லாம நின்னுனு எங்கள காப்பாத்துனாரு.”
வல்லரசு பேசி முடிக்கும் போது அவனது கண்களில் கண்ணீர் தளும்பியது.
கரையில் அமைந்துள்ள அமிர்தாயினி அகாடமி
அடையாறின் கரையில் ஆக்கரமிப்புடன் எழுந்து நிறந்கும் அமிர்தாயினி அகாடமி
miot-mgr-nagar-report-10
miot-mgr-nagar-report-11
miot-mgr-nagar-report-12
ஆற்றின் கரையில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனை
ஆற்றின் கரையை ஆக்கிரமித்துள்ள மியாட் மருத்துவமனை
தேவி
தேவி
கரையின் மறுபுறத்திலுள்ள மேட்டுக்குடி பகுதி
கரையின் மறுபுறத்திலுள்ள மேட்டுக்குடி பகுதி
miot-mgr-nagar-report-15– வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை: