செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சூடானில் அரங்­கேறி வரும் இனப்படு­கொ­லைகள் - ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் நிதி, ஆயுத உத­வி­க­ளோடு

 ilakkiyainfo.com : தற்­போது ஈரா­னுக்கு எதி­ரான இஸ்­ரே­ லி­ய-­-அ­மெ­ரிக்க காட்­டு­மி­ராண்டி   போரின் மீது உலகக் கவனம் திசை திரும்­பி­யுள்ள நிலையில், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் நிதி மற்றும் ஆயுத உத­வி­க­ளோடு சூடானில் அரங்­கேறி வரும் இனப் படு­கொ­லைகள் கார­ண­மாக சூடான் மக்கள் அனு­ப­வித்து வரும் துன்­பங்­ளும் தொடர்ந்த வண்ணம் உள்­ளன.
ஏப்ரல் 2023 இல் மோதல்கள் மூண்­டதில் இருந்து 12 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. இதில் ஒன்­பது மில்­லி­ய­னுக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­நாட்டில் இடம்பெயர்ந்­த­வர்கள். அண்டை நாடான சாட், எகிப்து மற்றும் தெற்கு சூடா­னுக்கு தப்பிச் சென்­ற­வர்­களின் எண்­ணிக்கை மூன்று மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மாகும்.  



2021 ஆட்சி கவிழ்ப்­புக்குப் பிறகு நிறு­வப்­பட்ட, இடைக்­கால நிர்­வா­கத்­திற்குள் ஏற்­பட்ட அதி­காரப் போட்­டியின் விளை­வாக 2023 ஏப்ரல் 15 அன்று மோதல்கள் தொடங்­கின. 


RSF leader Mohamed Hamdan 'Hemedti' Dagalo, left, and army chief Abdel Fattah al-Burhan, right

சர்­வ­தேச அளவில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சூடான் அர­சாங்­கத்தின் படை­க­ளான ஜெனரல் அடெல் ஃபத்தா அல்-­புர்­ஹானின் தலை­மை­யி­லான, சூடான் ஆயுதப் படைகள் (the Sudanese Armed Forces -SAF) மற்றும் இரா­ணுவ துணைக் குழு­வான  ஜெனரல் முக­மது ஹம்தான் டகலோ மூசா தலை­மை­யி­லான துரித ஆத­ரவு படைகள் (he paramilitary Rapid Support Forces -RSF) என்­ப­னவே அதி­கா­ரத்­துக்­காக மோதலில் ஈடு­பட்­டுள்­ளன. 

இன்­றைய நிலையில் துணை இரா­ணுவக் குழு தலை­மையில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள அமைதி மற்றும் ஒற்­று­மைக்­கான அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே இந்த மோதல்கள் உள்­ளன.

முன்னாள் சர்­வா­தி­காரி ஒமர் அல்-­ப­ஷீரின் மூன்று தசாப்த கால ஆட்­சிக்கு இரா­ணுவம் முடிவு கட்­டி­யதன் மூலம், முன்னாள் சர்­வா­தி­கா­ரிக்கு எதி­ரான நாடு தழு­விய எதிர்ப்பு இயக்கம் ஓய்­வுக்கு வந்­தது. இருந்­தாலும் சூடானின் தற்­போ­தைய நெருக்­கடி 2019 இல் இருந்தே அவ­தா­னிக்கத் தக்­க­தாக இருந்­தது.

2021 ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து சூடான் இரா­ணு­வத்­தோடு ஆர். எஸ். எவ். பிரிவை ஒருங்­கி­ணைப்­பது தொடர்­பான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றன. அதில் ஏற்­பட்ட பல முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே தற்­போது நடந்து வரும் மோதல்கள் மூண்­டன. ஆரம்­பத்தில் ஆர்.எஸ்.எவ். தாக்­கு­தல்கள் தலை­நகர் கார்ட்டூம் மற்றும் பிற நக­ரங்­களில் உள்ள அர­சாங்க தளங்­களை குறி­வைத்­தன.  இந்த மோதல் கார்ட்டூம் பிராந்­தி­யத்தில்  தொடங்கி பின்னர் இன்­னொரு முக்­கிய இட­மான டார்பர் பிராந்­தி­யத்­திற்கும் பர­வி­யது.

குடி­யி­ருப்பு பகு­தி­களில் குண்­டு­வெ­டிப்­புகள் நடத்­தப்­பட்­டதால், மக்கள் நக­ரங்­களை விட்டு வெளி­யேறத் தொடங்­கினர். வெளி­நாட்டுத் தூத­ர­கங்கள் தங்கள் ஊழி­யர்­களை வெளி­யேற்­றின. மருத்­து­வ­ம­னைகள் மூடப்­பட்­டன. மற்றும் தலை­நகர் கார்ட்டூம் முழு­வதும் இறந்த உடல்கள் தெருக்­களில் சிதறிக் கிடந்­தன. 2025 பெப்­ர­வரி நில­வ­ரப்­படி, மோதல் 12 மில்­லியன் மக்­களை வலுக்­கட்­டா­ய­மாக இடம்­பெ­யர வைத்­துள்­ளது. 3.5 மில்­லியன் பேர் நாட்டை விட்டு அக­தி­க­ளாக தப்பிச் சென்­றனர்.  இது சமீ­பத்­திய வர­லாற்றில் மிகப்­பெ­ரிய இடப்­பெ­யர்வு நெருக்­க­டி­களில் ஒன்­றாகும்.  

25 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் அல்­லது சூடானின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்­பட்­ட­வர்கள் பட்­டி­னியால் பாதிக்­கப்­பட்டு உள்­ளனர்.

"இன்று சூடான் உலகின் மிகப் பெரிய இடப்­பெ­யர்வு மற்றும் மோச­மான மனி­தா­பி­மான நெருக்­கடி மிக்க நாடாக மாறி உள்­ளது. கடந்த பல தசாப்­தங்­க­ளாக நீடித்த மிக கடு­மை­யான உல­க­ளா­விய நிதி நெருக்­க­டியை அடுத்து இந்தப் பிரச்­சினை தலை தூக்­கி­யுள்­ளது”       என்று கிழக்கு மற்றும் தென் ஆபி­ரிக்­கா­வுக்­கான UNHCR இன் பிராந்­திய இயக்­குனர் மமடோ டியான் பால்டே,  ஜெனி­வாவில் நிரு­பர்­க­ளிடம் பேசும் போது கூறினார்.

ஐ.நா. அறிக்­கைகள், பல்­வேறு உள­வுத்­துறை மற்றும் மனித உரி­மைகள் விசா­ர­ணைகள் மூலம் கிடைக்­கப்­பெரும் பல சான்­றுகள், ஐக்­கிய அரபு இராச்­சியம் தான் (யூ.ஏ.ஈ) இந்த மோதலைத் தூண்டி வரும் ஒரு முதன்­மை­யான வெளிப்­புற ஆத­ர­வாளர் என சுட்­டிக்­காட்­டு­கின்­றன.  துணை இரா­ணுவ மற்றும் துரித ஆத­ரவு படை­க­ளுக்கு அதி நவீன ஆயு­தங்கள், ட்ரோன்கள் மற்றும் தள­வாட ஆத­ரவை ஐக்­கிய அரபு இராச்­சியம் முறை­யாக திட்­ட­மிட்ட வகையில் வழங்­கி­யுள்­ளது.

இந்த ஆத­ர­வு­களைப் பெற்­றுக்­கொண்­டுள்ள ஆர்.எஸ்.எவ், குறிப்­பாக டார்­பூரில் உள்ள அரபு அல்­லாத சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக, இனச் சுத்­தி­க­ரிப்பு மற்றும் இனப் படு­கொ­லை­களில் ஈடு­பட்­ட­தாக பர­வ­லாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. தனது ஆத­ர­வுக்கு ஈடாக, ஐக்­கிய அரபு இராச்சியம் சூடானில் இருந்து கடத்­தப்­படும் தங்­கத்தை பெற்றுக் கொள்ளும், முதன்மை இட­மாக செயல்­ப­டு­வதன் மூலம் மிகப் பெரிய அளவில் பொரு­ளா­தார ரீதி­யான பயன்­களை அடை­கின்­றது.

2025 ஆம் ஆண்டில், தனது நாட்டில் இனப் படு­கொ­லையில் உடந்­தை­யாக இருந்­த­தாகக் கூறி சூடான், ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் மீது சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் (ஐ. சி. ஜே) வழக்குத் தொடர்ந்­தது. ஆனால், இந்த விட­யத்தில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் மீது தனக்கு அதி­காரம் இல்லை என்று கூறி சர்­வ­தேச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததால், இந்த வழக்கு இறு­தியில் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.  

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் உட்­பட இன்னும் சில அமைப்­பு­களின் அறிக்­கைகள், சூடானில் ஆர்.எஸ்.எவ். உடன் இணைந்து போராட, கொலம்­பிய கூலிப் படை­யி­னரை அபு­தா­பியை தள­மாகக் கொண்ட பாது­காப்பு நிறு­வ­னங்கள், எவ்­வாறு பயிற்­று­வித்து அனுப்­பி­யுள்­ளன என்ற விவ­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளன.  

ஆர்.எஸ்.எவ் இன் யுத்த இயந்­தி­ரத்­திற்கு நிதி­ய­ளிக்கும் வகையில் சூடானில் இருந்து கடத்­தப்­படும் தங்­கத்தை, பெரு­ம­ளவில் இறக்­கு­மதி செய்து, வர்த்­தகம் செய்­வதன் மூலம் ஐக்­கிய அரபு இராச்­சியம் பொரு­ளா­தார ரீதி­யாக பெரும் பய­ன­டை­கின்­றது என்­பதை விசா­ர­ணைகள் தெட்டத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டு­கின்­றன.  

சூடானில், போர் புரி­வ­தற்­கான ஒரு முக்­கிய உந்து சக்­தி­யாக தங்கம் இருந்து வரு­கின்­றது. ஆர்.எஸ்.எவ். தங்க வர்த்­த­கத்தில் மிகவும் ஆழ­மாக ஈடு­பட்­டுள்­ளது. 

ஆனால், இரு தரப்­பி­னரும் தங்கள் போர் இயந்­தி­ரங்­க­ளுக்கு எரி­பொ­ரு­ளாக பெரிய அள­வி­லான தங்­கத்தை கடத்தி விற்­பனை செய்­துள்­ளனர்.  ஐக்­கிய அரபு இராச்­சியம் தற்­போது இந்த வர்த்­த­கத்தின் மூலம் பய­ன­டை­கின்­றது. 

2023 ஆம் ஆண்­டிற்­கான புள்­ளி­வி­வ­ரங்கள் இன்னும் கிடைக்­க­வில்லை. ஆனால், 2022 ஆம் ஆண்டின், தக­வல்களின்படி அந்த ஆண்டில் ஐக்­கிய அரபு அமீ­ரகம் சூடானில் இருந்து 39 தொன் தங்­கத்தை இறக்­கு­மதி செய்­துள்­ளது.  இதன் மதிப்பு 2 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மாகும். மேலும் சூடா­னிய தங்­கத்தின் நேரடி ஏற்­று­மதி இன்றும் தொடர்­கின்­றது. இந்த வர்த்­த­கத்தின் மோச­மான பங்­கா­ளிகள் சூடா­னிய தங்­கத்தை சாட், எகிப்து, எத்­தி­யோப்­பியா, தெற்கு சூடான் மற்றும் உகாண்­டா­வுக்கு கடத்­து­கின்­றார்கள். இவை அனைத்தும் இறு­தியில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கே விற்­கப்­ப­டு­கின்­றன.

ஐ.நா.வின் வர்த்­தகத் தர­வு­க­ளின்­படி, 2022 ஆம் ஆண்டில் இந்த வழித்­த­டங்கள் வழி­யாக 60 டொன்­க­ளுக்கு மேலான தங்கம் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தை வந்­த­டைந்­துள்­ளது. மே 2023 வணிக தரவு ஆலோ­சனை அறிக்கை படி, சூடானில் இருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் "கிட்­டத்­தட்ட அனைத்து" தங்­கத்­தையும் இறு­தியில் ஐக்­கிய அரபு இராச்­சி­யமே பெற்றுக் கொள்­கின்­றது என்று அமெ­ரிக்க  வெளி­யு­ற­வுத்­துறை குறிப்­பிட்­டுள்­ளது.

சூடானில் இனப்­ப­டு­கொ­லைக்கு ஐக்­கிய அரபு இராச்­சியம் நிதி­யு­தவி மற்றும் ஆயுதம் என்­ப­ன­வற்றை வழங்­கு­கின்­றது என்ற தலைப்பில் ஒரு கட்­டு­ரையில் குவா­டியன் கட்­டு­ரை­யாளர் நெஸ்ரைன் மாலிக் இந்த விவ­ரங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

இன்­றைய நிலையில் சூடானில் உள்ள எல்-­ஒபீட் நக­ரத்தைத் தாக்க துணை இரா­ணுவப் படைகள் தயா­ராகி வரு­கின்­றன என்ற அச்சம் அதி­க­ரித்து வரு­வதால், "அட்­டூ­ழி­யங்­களைத்" தடுக்க சர்­வ­தேச நட­வ­டிக்­கைக்கு சிவில் சமூகக் குழுக்கள் அவ­சர அழைப்பு விடுத்­துள்­ளன.

துரித ஆத­ரவு படைகள் (ஆர்.எஸ்.எவ்.) எல்-­ஒபீட் நகரின் மீது தாக்­குதல் நடத்தப் போகின்­றன என்ற அச்சம் அதி­க­ரித்து வரு­வதால், 38 தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்கள் "அட்­டூ­ழி­யங்­களைத் தடுப்­ப­தற்கும் பொறுப்புக் கூற­லுக்கும் தைரி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு" ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் சபைக்கு பகி­ரங்க அழைப்பு விடுத்­துள்­ளன. ஒரு திறந்த கடி­தத்தின் மூலம் இந்த அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச மன்­னிப்புச் சபை மற்றும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் உள்­ளிட்ட சிவில் சமூக அமைப்­பு­க­ளினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்தக் கடி­தத்தில்,  எல்-­ஒபீட் நகரம் 18 மாதங்­க­ளாக "முற்­றுகை போன்ற இடர் நிலை­மை­களை" எதிர் கொண்­டுள்­ளதால், "... ஆர்.எஸ்.எவ். மற்றும் அவர்­களின் நட்பு படை­களால், இந்த நகரின் மீது உட­னடி தரை­வழி தாக்­குதல் நடத்­தப்­படும் அபாயம் உள்­ளது" என்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

"ஒரு சுயா­தீ­ன­மான ஐ.நா. உண்மையை கண்டறியும் குழு ஒன்றை நியமித்து, இந்த நிலைமை குறித்து அவசர விசாரணைகளை நடத்துமாறு" மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

"மேலும் அட்டூழியங்களைத் தடுப்ப தற்காக", தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட மனித உரிமை ஆணைக்குழுவில் உள்ள, போரிடும் தரப்புகளை ஆதரிக்கும், ஏனைய எல்லா நாடுகளையும் பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும் எனவும் அவை அழைப்பு விடுத்துள்ளனன.

அதேபோல் ஆர்.எஸ்.எவ், அல்லது சூடானின் இராணுவம் அல்லது   ஏனைய போரிடும் தரப்புகளை ஆதரிக்கும் சகல வெளிப்புற சக்திகளும் "அவர்கள் செய்த அல்லது செயல்படுத்திய உரிமை மீறல்களுக்காக கண்டிக்கப்பட வேண்டும், அவற்றில் சில சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றங்களுக்கு சமனானவை" என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

 லத்தீப் பாரூக்

கருத்துகள் இல்லை: