திங்கள், 29 ஜூன், 2015

Rattan டாடாவிடம் நேரடியாகவே தயாநிதி மாறன் லஞ்சம் கேட்டார்?

othisaivu.wordpress.com சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் வந்த என் பதிவுகளில் ஒன்றிலிருந்து இந்த குறிப்புகள்:
ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ‘அன்பளிப்பு’ நெடுநாள்முன் நான் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புள்ளவனாக இருந்தேன். அப்போது தயாநிதி மத்திய அமைச்சர். ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய நாடெங்கும், குறுக்கிலும் நெடுக்கிலும் ஒளி இழை வடங்களை சாலைகளில், நிலத்தின் கீழ் பதித்துக் கொண்டிருந்தது. அதற்கு, ரிலையன்சிற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவையாக இருந்தது.
இச்சமயம், நம் உதிரி, ரிலையன்சுடன் ஒரு ஊழல் (மகத்தானது! தகத்தகாயது!!) ‘ஒப்பந்தம்’ போட்டார் – அதன் படி,  ரிலையன்ஸ் ஒளி இழை வடங்களைப் போடும்போது (கிட்டத்தட்ட 20,000 கிலோமீட்டர் என நினைக்கிறேன்), SCV-க்காக ஒரு ஜோடி வடக் கற்றைகளை ‘இலவசமாகப்’ போட்டுத் தரவேண்டும். எப்படி இருக்கு கதை! (இதற்கான ‘செலவு’ அச்சமயம், குறைந்த பட்சம் 300 கோடி ரூபாய் இருந்திருக்கும்! எல்லாம் நம் பணம்!)
இதன்மூலம், SCV-இன் வலிமையும், வீச்சும், அதிவிரைவு இணைய / தொலைபேசி இணைப்புகளும் பலமடங்கு அதிகரிக்கும். இதனை வைத்து இந்த கேடிகள் இன்னும் பல மடங்கு தங்கள் ‘தமிழ்’ வியாபாரத்தை நடத்த முடியும்.  இந்த ஒத்திசைவு பார்ப்பான் தனது ஜாதிக்கு நன்மை செய்வதாக எண்ணிக்கொண்டு தயாநிதியின் வந்தவாளங்களை எழுதுவது நல்லதே ஏனெனில் தயாநிதியும் ஒரு பார்ப்பான்தான்! தயாநிதியின்  அம்மா பிராமணர் மனைவி பிராமணர். வீட்டில் பேசுவதும் பிராமன தமிழ்தான்.  

நண்பர்களே, யோசியுங்கள் – நீங்கள் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சாலையிலும், அவற்றின் கீழ், கேடி சகோதரர்களின் ஊழலாறு ஓடிக்கொண்டிருக்கிறது! தலைக்குமேல் தாறுமாறாக ஊழல் டிவி வடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறன – சீர்கேடுகளை, ஆபாசங்களைச் சுமந்துகொண்டு! இவற்றையெல்லாம் மீறி கண்ணுக்குத் தெரியாமல் ஜேப்படி செய்யும், செயற்கைக்கோள் தொடர்புகள் வேறு…
ரதன் டாடாவிடம் நேரடியாக  துட்டு கேட்ட காதை
தயாநிதியார் அவர்கள் மத்திய மந்திரியாக இருந்த காலம்; சில ஒப்புதல்களுக்காக (TATA Sky) ரதன் டாடா அவர்கள், நம் ஆளைப் பார்க்க வேண்டிஇருந்தது. அந்த சந்திப்புக்குப்பின் டாடா அவர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். பிரதம மந்திரியுடனும் அது பற்றிப் பேசினார். அவர் ஆட்கள் கயமைநிதியுடனும் பேசினர்.
விஷயம் இதுதான்:
டாடா மிகவும் வருத்தப்பட்ட விஷயம் என்னவென்றால் – மற்ற அமைச்சர்கள், கையூட்டு வேண்டுமென்றால், சிறிது சங்கடத்துடன், சிறிது வெட்கத்துடன் – “என்னிடம் கொடுக்க வேண்டாம், என்னுடைய உதவியாளர்களிடமோ அல்லது வீட்டிலோ, காதும்-காதும் வைத்ததுபோல் கொடுத்துவிடுங்கள், தயவுசெய்து” என்பார்கள்.
டாடாவுக்கும் தெரியும் – இந்தக் கையூட்டுப் பணத்தில் மிகப் பெரும் பகுதி, அந்த அமைச்சரின் கட்சி நிதிக்குப் போய் விடும் என்பதும், நம் பாணி கட்சி வளர்ப்பிலும், ‘ஜனநாயகத் தேர்தல்’ அமைப்பிலும், இம்மாதிரி பணம் புரட்ட வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதும்… டாடாவுடைய புரிந்துகொள்ளலை நாம் மதிக்கலாம்.
ஆனால், நம் தயாநிதி மாறன் – இம்மாதிரி வெட்கமோ, கூச்சமோ படாமல் நேரடியாக எவ்வளவு பணம் தருவீர்கள் – “ஹொவ் மச் கேன் யு கிவ்” என்று கேட்டது மட்டுமல்லாமல், “என் அலுவலகத்திலேயே தாருங்கள்”‘ என்று சொல்லி, “இப்போதே தாருங்கள்” என்று முரண்டு பிடித்தார். மேலும், “எனக்கு உங்கள் தொழிலில் எவ்வளவு பங்கு தருவீர்கள்? நீங்கள் குறைந்த பட்சம் 30% கொடுத்தால்தான், நான் உங்கள் கோப்பைப் பார்ப்பேன்!” என்ற பேரம் வேறு.
வெறுத்துப்போன டாடா – நீயும் வேண்டாம், உன் அனுமதியும் வேண்டாமென வெளியே வந்தார். (அவருக்குத் தெரியாது, இந்த நிதிகளே தீவட்டிக் கொள்ளைக்கார அயோக்கிய கும்பல் என்பது)
பின்னாளில் டாடா நாசூக்காக இந்த சம்பவத்தை: தயாநிதி மாறனுடன் எனக்கு ‘சரி வரவில்லை’ என்று குறிப்பிட்டார். (Tata said he did not share good “chemistry” with Maran)
இதன்பற்றிய தகவல் வெளியே கசிந்து பின்பு தயாநிதியால், கருணாநிதியால் அமுக்கப் பட்டது. இந்த நிகழ்வால் தான், டாடா, தயாநிதி எக்காரணம் கொண்டும் மறுபடியும் ‘தொலைத்தொடர்புத் துறை’ அமைச்சராக வரக் கூடாது என்ற முயற்சி எடுத்தார்.   othisaivu.wordpress.com

கருத்துகள் இல்லை: