வெள்ளி, 29 மே, 2020

ஸ்டாலின் : தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இல்லை

mksdView image on TwitterGiridharan N - Samayam Tamil :; தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்
அரசு சொல்வது போல், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை. மாறாக, கட்டுக்கடங்காமல்தான் இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லை. மாறாக கட்டுக்காமல் தான் உள்ளது. இதனை அரசு மறைக்க நினைப்பதே, மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும் எந்த அறிவிப்பாக இருந்தாலும் , அரசு அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்த அரசு தயங்குகிறது. பரிசோதனைகளை அதிகரித்தால் நோய்த்தொற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் என்பதால் அதனையும் அரசு தவிர்க்கிறது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!
நோய்த்தொற்றின் எண்ணிக்கையை மறைப்பது முதல்வர் தம்மைத்தாமே ஏமாற்றி கொள்வதற்கு சமமாகும்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க, அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்த அறிவிப்பாக இருந்தாலும் அரசு அதனை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். 
மார்ச் தொடங்கி மே வரை 'கொரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து! பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர வேண்டும்.மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.

வரலாற்றில் கடும்பழிக்கு இரையாகாதீர்கள் -இதுவே என் கோரிக்கைகளின் அர்த்தம்!
<

கருத்துகள் இல்லை: